தீயரும்பு

தீயரும்பு, இலக்குமிகுமாரன் ஞானதிரவியம், அய்யா நிலையம் வெளியீடு, விலை 150ரூ. இலக்குமிகுமாரன் ஞானதிரவியத்தின் 13 சிறுகதைகள் கொண்ட தொகுப்பிது. தான் வாழ்ந்த கிராமத்தின் புழுதி படிந்த வாழ்க்கையை, வியர்வை பிசுபிசுக்கும் மனிதர்களை அப்படியே தன் கதைகளுக்குள்ளும் நடமாட வைத்துள்ளார். “கொம்பால குருணிப்பாலு கற்தாலும் கூர புடுங்கற மாடு உதவாது…” என்பது போன்ற தஞ்சை வட்டார மக்களின் வழக்குச் சொல்லாடலில் வாசிப்பை விறுவிறுப்பாக கடத்திச் செல்கிறது ஞானதிரவியத்தின் மொழிநடை. நன்றி: தி இந்து, 5/11/2016.

Read more

கண்ணீர்ச் சமுத்திரம்

கண்ணீர்ச் சமுத்திரம், குறும்பனை சி. பெர்லின், முக்கடல் வெளியீடு, விலை 90ரூ. நெய்தலின் வாழ்வை அசலாகப் பதிவுசெய்யும் எழுத்தாளர்களில் ஒருவரான குறும்பனை சி. பெர்லின் எழுதியிருக்கும் இந்தச் சிறுகதைத் தொகுதி கடற்புரத்து மக்களின் அன்றாட வாழ்க்கைப் பதிவுகளைக் கதைக்களன்களாகக் கொண்டிருக்கிறது. பொது வாசகர்களுக்கு அந்நியமான சொற்கள் ஒவ்வொரு சிறுகதைக்குப் பின்னாலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கடும் நெருக்கடிகள் நிறைந்த சம்பவங்களுக்கு இடையில் நறுக்குத் தெறித்தாற்போல் நகைச்சுவையும் இழையோடுகிறது. நன்றி: தி இந்து, 5/11/2016.

Read more

சாமானியனுக்கான சட்டங்கள்

சாமானியனுக்கான சட்டங்கள், வழக்கறிஞர் த. ராமலிங்கம், விகடன் பிரசுரம், விலை 90ரூ. ஒருவர் எந்தக் குற்றமும் செய்யவில்லையென்றாலும், எந்தவிதமான சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றாலும், காவல்நிலையத்துக்கும், நீதிமன்றத்துக்கும் செல்ல வேண்டியதாகிவிடுகிறது. அப்படிச் செல்கிற ஒருவருக்கு நடப்பிலுள்ள சட்டங்களைப் பற்றியும், காவல்துறையின் நடவடிக்கைகளைப் பற்றியும் எதுவும் தெரிந்திருக்கவில்லை என்றால், அவருடைய மனதில் பயம் புகுந்து கொள்வதோடு, கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதையாக அலைய நேரிடுகிறது. இந்தக் குறையைப் போக்கும்விதமாக சாமானிய மனிதர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய குறைந்தபட்ச சட்ட அறிவை இந்நூல் புகட்டுகிறது. […]

Read more

அறிவியலில் பெண்கள் ஒரு சமூக வரலாற்றுப் பார்வை

அறிவியலில் பெண்கள் ஒரு சமூக வரலாற்றுப் பார்வை, கு.வி. கிருஷ்ணமூர்த்தி, அடையாளம் பதிப்பகம், பக். 340, விலை 280ரூ. மனித இனத்தின் அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் என அனைத்துக்கும் பெண்கள் தங்களின் பங்களிப்பை திறம்பட அளித்துள்ளார்கள் என்பது வரலாற்று உண்மை. அதை இந்நூல் விளக்குகிறது. மருத்துவத்தில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் தொடங்கி, வேதியியல், உளவியல், புவியியல், கணினிஇயல், உயிரியல், கணிதவியல் என அனைத்துத் துறைகளிலும் பெண் அறிவியலாளர்களின் பங்கு குறித்த வரலாறும் இதில் கூறப்பட்டுள்ளது. பிற நாட்டவர் மட்டுமின்றி, தமிழகத்தைச் சேர்ந்த மரபணு அறிஞரான இ.கே.ஜானகி […]

Read more

மறையாத வானவில் மகாகவி பாரதி

மறையாத வானவில் மகாகவி பாரதி, ஆசுகவி ஆராவமுதன், திராவிடமணி பதிப்பகம், பக். 128, விலை 120ரூ. பாரதியாரின் படைப்புகளில் ஆழ்ந்து தோய்ந்தவர் நூலாசிரியர் என்பதை இம்மரபுக் கவிதை நூல் விளக்குகிறது. பாரதியாரின் சில கவிதைகளையும், சில உரைநடை நூல்களையும் எடுத்துக்கொண்டு அதை மரபு வழுவாமல் மரபுக் கவிதைகளாகப் புனைந்துள்ளார். “அரிய உதயம் அவசர அஸ்தமனம்‘’ எனும் தலைப்பில் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை இருபத்து நான்கு எண்சீர் விருத்தப் பாக்களில் பாடியுள்ளார். பாரதியார் கடலூர் சிறையிலிருந்து வெளிவந்த பின்னர், ஊர் ஊராகச் சுற்றித் திரிந்ததை சில […]

Read more

மலர்களுக்காக மலர்ந்தவை

மலர்களுக்காக மலர்ந்தவை, கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, பக். 184, விலை 135ரூ. “ஓம்சக்தி’ தீபாவளி மலருக்காக நூலாசிரியர் எழுதிய “மும்மூர்த்திகளும் தமிழர்களும்’, “கப்பலோட்டிய தமிழனின் கடைசி மணித்துளிகள்\’, “மாவீரனின் கடைசி மணித்துளிகள்‘’ ஆகிய கட்டுரைகள் போன்று பல்வேறு சமயங்களில் பல்வேறு மலர்களுக்காக எழுதப்பெற்ற கட்டுரைகள் இந்த நூலில் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன. “வடலூர் வள்ளலாரும் பசும்பொன் தேவரும்\’ கட்டுரையில் இருபெரும் மகான்களின் வாழ்க்கையைப் பற்றிய ஒப்பீடும், “மும்மூர்த்திகளும் தமிழர்களும்“ ட்டுரையில் காந்திக்கு “மகாத்மா’ என்ற பட்டம் எப்படி, யாரால் அளிக்கப்பட்டது “  என்பதற்கான விவரமும், மரணத்தைக் […]

Read more

பார் போற்றும் பகலவன் பாபா சாகேப் பயணப் பாதை

பார் போற்றும் பகலவன் பாபா சாகேப் பயணப் பாதை, எம்.ஏ. பாலசுப்பிரமணியன், சித்தார்த்த பதிப்பகம், பக். 655, விலை 450ரூ. 14.4.1891 முதல் 6.12.1956 வரையிலான சட்டமேதை அம்பேத்கரின் வாழ்க்கைப் பயணத்தை தேதி வாரியாக தொகுத்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர். நூலின் ஒவ்வொரு பக்கங்களும் அம்பேத்கர் எத்தகைய இடர்பாடுகளையெல்லாம் கடந்து தாழ்த்தப்பட்டவர்களை மிளிரச் செய்திருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. 1905-ஆம் ஆண்டு மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் அம்பேத்கர் 5-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது ஆசிரியர் ஒருவர், “அவரிடம் தாழ்ந்த மஹர் இனத்தில் பிறந்த நீ படிப்பதனால் […]

Read more

கனவினைப் பின் தொடர்ந்து

கனவினைப் பின் தொடர்ந்து, தமிழில் ஜே. ஷாஜஹான், எதிர் வெளியீடு, வரலாறு எவ்வளவு சுவாரஸ்யமானது என்று சில புத்தகங்களை வாசித்தால் தெரியும். அப்படிப்பட்ட புத்தகங்களில் ஒன்று இது. சிந்து சமவெளி மக்கள், நாளந்தா பல்கலைக்கழகம், கிரேக்கத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்பு போன்ற முக்கிய வரலாற்றுத் தகவல்களை ஒரு கதை போலப் படித்தால் எப்படியிருக்கும்? அந்த அனுபவத்தைத் தருகிறது இந்த நூல். பிரபல ஆங்கிலக் குழந்தைகள் எழுத்தாளர் த.வெ. பத்மா எழுதியதைச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். நன்றி: தி இந்து, 9/11/2016.   —- இறக்கை விரிக்கும் […]

Read more

நீங்கள் எந்த மரம்?

நீங்கள் எந்த மரம்?, தினமணி கட்டுரைகள், அ. அறிவுநம்பி, சித்திரம்,பக். 160, விலை 120ரூ. தினமணியில் வெளியான 21 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். மொழி, சமூகம், நாடு தொடர்பான நூலாசிரியரின் தெளிவான கருத்துகள் இடம்பெற்றுள்ள இக்கட்டுரைகள், மிகவும் எளிமையானவை என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். “அறம் என்பதை முதலீடாகக் கொண்டு பொருள் சேர். இரண்டின் அடிப்படையில் இன்பம் தானாக வந்து சேரும்‘’ என்று வாழ்வதற்கான நெறிமுறையைச் சொல்வதும், “சொல்லில் இனிமை கலந்து பேசும்போது எதிரியும் நண்பனாவான்; மாறாக வன்மை கலந்து உரையோடும்போது நண்பன் கூட […]

Read more

பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்

பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், எதிர் வெளியீடு, பக். 896, விலை 950ரூ. ஆதித் தமிழர்களின் வாழ்வியலையும், கலாசாரத்தையும், அரசாட்சியையும் விளக்கிக் கூறும் ஆவணப் பதிவாக இந்நூல் வெளிவந்துள்ளது. பொதுவாக சங்க இலக்கியங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள் ஆகிய ஆதாரங்களின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதுண்டு. இந்நூலாசிரியர், இவற்றுடன் கூட வெளிநாட்டு அறிஞர்களின் குறிப்புகளின் பார்வையிலும் பழந்தமிழனின் வாழ்வை அணுகியிருக்கிறார். கிமு 500-ஆம் ஆண்டு காலங்களில் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரைகள் தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததும், அந்த அளவுக்கு வர்த்தகத்தில் தலைசிறந்தவர்களாக நாம் விளங்கியதும் […]

Read more
1 2 3 8