பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்

பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், எதிர் வெளியீடு, பக். 896, விலை 950ரூ. ஆதித் தமிழர்களின் வாழ்வியலையும், கலாசாரத்தையும், அரசாட்சியையும் விளக்கிக் கூறும் ஆவணப் பதிவாக இந்நூல் வெளிவந்துள்ளது. பொதுவாக சங்க இலக்கியங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள் ஆகிய ஆதாரங்களின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதுண்டு. இந்நூலாசிரியர், இவற்றுடன் கூட வெளிநாட்டு அறிஞர்களின் குறிப்புகளின் பார்வையிலும் பழந்தமிழனின் வாழ்வை அணுகியிருக்கிறார். கிமு 500-ஆம் ஆண்டு காலங்களில் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரைகள் தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததும், அந்த அளவுக்கு வர்த்தகத்தில் தலைசிறந்தவர்களாக நாம் விளங்கியதும் […]

Read more

பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்

பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், எதிர்வெளியீடு, பக். 896, விலை 950ரூ. தமிழ்ப் பெருமை ஆய்வில் செழுமை தமிழ்நாட்டு வரலாற்றைப் பற்றி, தமிழில் படிக்கும் போதெல்லாம், மேலை மொழிகளில் இருக்குமளவுக்குத் தற்போதைய தமிழ் ஆய்வாளர்கள் ஆழமாகப் பரிசிலித்து எழுதுவதில்லை, என்ற என்னுள் இருந்த ஏக்கம் இந்நூலின் முதல் பார்வையிலேயே மறைந்து விட்டது. கணியன் பாலன் ஆய்வின் வீச்சும், பரிமாண வியாபகமும் ஆச்சரியப்பட வைக்கிறது. ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள நூல், கால, பொருள் ரீதியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ள முறையால் ஒரு தனிச்சிறப்பைப் பெறுகிறது. இம்முறையால் இந்நூல் […]

Read more

பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்

பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், எதிர்வெளியீடு, பக். 895, விலை 950ரூ. நூலாசிரியர் பொறியாளர். அதனால், கணிதவியல் முறை சார்ந்த ஆய்வு மரபை முன்னெடுத்து, சங்கப் பிரதிகளை ஆய்வு செய்துள்ளார். இதற்கென அவர் மேற்கொண்ட உழைப்பு மலைக்கச் செய்கிறது என முன்னுரையில் பேராசிரியர் வீ. அரசு கூறுகிறார். சிவராஜப் பிள்ளை, கமில் சுவலபில் ஆகியோரை அடுத்து, தனக்கென தனி முறையியலை உருவாக்கிக் கொண்டு, அதன் அடிப்படையில், தமிழக வரலாற்றை கணியன் பாலன் ஆய்ந்துள்ளதாக, வீ. அரசு தெரிவிக்கிறார். நூலாசிரியர், சங்க இலக்கியத்தை கூர்ந்து […]

Read more