ஸ்ரீ பரப்பிரம்ம ரகசியம்

ஸ்ரீ பரப்பிரம்ம ரகசியம் (இந்து மத ஆன்மீகத் தலைமை), வி.என். கஜேந்திர குருஜி, ஸ்ரீ பரப்பிரம்மன் ஐந்தியல் ஆய்வு மையம், பக். 1279, விலை 800ரூ. இந்தப் பிரபஞ்சத்தில் தோன்றிய முதல் ஆண், முதல் பெண் யார்? என்பதைத் தெரிந்துகொள்ள நாம் முயற்சி செய்திருக்கறோமா? இல்லை. ஆனால் அந்த ரகசியம் வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. உயிரினங்கள் வாழும் பூலோகம் என்பது, விண்சேர்க்கையும் பூமிச் சேர்க்கையும் ஒன்றுசேர்ந்த இடமாகும். பூலோகத்தில் ஆண்தன்மையும், பெண்தன்மையும்இணைந்து அலித் தன்மையில் ஓர் உருவம் என அமைந்ததுதான் ஸ்ரீபரப்பிரம்மம். அந்தப் பிரம்மம் ஆண்-பெண் […]

Read more

எனக்கு நிலா வேண்டும்

எனக்கு நிலா வேண்டும், சுரேந்திர வர்மா, தமிழில் எம்.சுசீலா, சாகித்ய அகாதெமி, பக். 960, விலை 550ரூ. குறிப்பிட்ட ஒரு துறையை மையமாகக் கொண்டு புதினம் எழுதப்படுவது புதிய விஷயமல்ல. ஹிந்தி எழுத்தாளர் சரேந்திரவர்மா, அவர் சார்ந்த நாடகத் துறையின் பலம், பலவீனங்களையும், வாழ்க்கையின் எதிர்பாராத சிக்கல்களையும், உள்ளரசியலையும், தனிமனித குணாதிசயங்களையும் முஜே சாந்த் சாஹியே என்ற இப்புதினத்தில் மிகத் தெளிவாகச் சித்திரித்திருக்கிறார். உத்திரப் பிரதேசத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியான ஷாஜான்பூரின் சுல்தான்கஞ்சில் எழை பிராமண ஆசிரியரின் மகளாகப் பிறந்த யசோதா சர்மா, தனது […]

Read more

நாடு படும் பாடு

நாடு படும் பாடு, ஆர். நடராஜன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 224, விலை 170ரூ. சமூக மாற்றத்திற்கு மக்களின் பங்களிப்பு எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு சமூகச் சிந்தனையுடன் கூடிய எழுத்தும் முக்கியம் என்பதை இந்த நூலின் கட்டுரைகள் உணர்த்துவதாக அமைந்துள்ளன. கட்டுரைஆசிரியர் பல்வேறு காலகட்டங்களில் எழுதியுள்ள சமூக, அரசியல் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ஒவ்வொரு கட்டுரையும், சமூக அக்கறையுடன் ஆழமான சிந்தனையுடன் எழுதப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. 51 கட்டுரைகள் அடங்கிய இந்த நூலில் பல கட்டுரைகள் கடந்த கால […]

Read more

மாமதுரை

மாமதுரை, பொ. இராசேந்திரன், சொ. சாத்தலிங்கம், ஷான்லாக்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 282, விலை 250ரூ. பண்டைத் தமிழரின் இதிகாச, புராண, சங்ககால பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்கிறது மதுரை மாநகர். மதுரை நகரின் வரலாற்றை எழுதுவது எனும் பணியில் மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டியர்களின் வரலாற்றை எழுதாமல் எழுத முடியாது என்பதைக் கூறும் நூலாசிரியர்கள் சங்ககாலப் பாண்டியர், முற்காலப் பாண்டியர், பிற்காலப் பாண்டியர் போன்றவர்களைப் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் கூறியுள்ளனர். பாண்டியர் இல்லையேல் தமிழ் இல்லை எனும் அளவுக்கு சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தவர்கள் பாண்டியர்கள். […]

Read more

தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய) பயணக் கட்டுரை

தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய) பயணக் கட்டுரை, திரட்டித் தொகுத்தவர் ஏ.கே. செட்டியார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 327, விலை 260ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024589.html கடந்த நூறு ஆண்டுகளில் தமிழகத்தைப் பற்றி பலர் எழுதிய பல புத்தகங்கள், கட்டுரைகள், குறிப்புகள் பலவற்றிலிருந்து 140 தகவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னை முதல் நீலகிரி வரை மற்றும் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரையிலான பயணக் குறிப்புகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அந்தக் காலத்தில் தூர தேசப் பிரயாணம் செய்வது அசாத்தியமான காரியம். […]

Read more

தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்(தொகுப்பு 1)

தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்(தொகுப்பு 1), தொகுப்பாசிரியர் அ. சிதம்பரநாத செட்டியார், விகடன் பிரசுரம், பக். 304, விலை 120ரூ.   To buy this Tamil book online : http://www.nhm.in/shop/1000000021817.html தமிழகத்தின் தலை சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. கல்கி, புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், அகிலன் உள்ளிட்ட 20 எழுத்தாளர்களின் படைப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன. ஏற்கெனவே படித்திருக்கக்கூடிய கதைகள்தாம் என்றாலும், அத்தனை சிறுகதைகளையும் ஒரே புத்தகமாகப் படிக்கின்ற வாய்ப்பு பரவசத்தைத் தருவதாக உள்ளது. எல்லாச் சிறுகதைகளிலும் கதை இருக்கும். ஆனால் […]

Read more

நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும்

நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும், உ.வே. சுவாமிநாதையர், டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், பக். 194, விலை 100ரூ. நூலாசிரியரின் இருநூல்கள் ஒரே தொகுப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. பன்னிரண்டு சிறிய வரலாறுகள் அடங்கியது நான் கண்டதும் கேட்டதும் தொகுப்பு. இதில் தனிப்பாடல்கள் சிலவற்றைப் பற்றிய வரலாறுகள் சில. சரித்திர சம்பந்தமானவை சில. முள்ளால் எழுதிய ஓலை என்ற கட்டுரை தினமணி பாரதி மலரில் வெளிவந்தது. மருது பாண்டியரின் பரோபகாரச் சிந்தையையும் தம் குடிகளை தாய்போல் காப்பாற்றும் பாங்கையும் இக்கட்டுரை எழுத்தாளுமையுடன் எடுத்துரைக்கிறது. இக்கட்டான […]

Read more

சரோஜாதேவி

சரோஜாதேவி, யுவகிருஷ்ணா, உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. கத்திமேல் குத்தாட்டம் To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024036.html பத்திரிகையாளரான யுவகிருஷ்ணாவின் சரோஜாதேவி புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் பெரும்பாலும் ஏற்கெனவே அவருடைய வரைப் பக்கத்தில் வெளியானவை. ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்து, புன்னகைத்து கடந்து போன பதிவுகளை புத்தகமாக படிக்கும்போது சுவாரசியமாகத்தான் இருக்கிறது. தன்னுடைய இமேஜ் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வரலாற்றில் இந்த தகவல்கள் இடம் பெறாமல் போனால் தமிழன் ரத்தம் கக்கியே சாவான் என்று தொகுத்ததோடு அல்லாமல் சாருநிவேதிதாவுக்கு சமர்ப்பணம் வேறு […]

Read more

சென்றுபோன நாட்கள்

சென்றுபோன நாட்கள், எஸ்.ஜி.இமானுஜலு நாயுடு, ஆ.இரா வேங்கடாசலபதி வெளியீடு, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 125ரூ. இதழியல் பக்கங்கள் தன் 17வது வயதில் பத்திரிகை தொடங்குவது என்பதை யாரேனும் நினைத்துப்பார்த்திருக்க முடியுமா? 1904ல் எஸ்.ஜி.இராமானுஜலு நாயுடு நினைத்துப் பார்த்ததுடன் பிரஜாநுகூலன் என்ற மாத இதழையும் ஆரம்பித்திருக்கிறார். இந்த இதழை நடத்தினாலும் சுதேசமித்திரன் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் எழுதியவராகவும் பங்களித்தவராகவும் இவர் இருந்திருக்கிறார். 1926ல் இவர் ஆசிரியராக அமர்ந்த ஆநந்தபோதினி இவருக்குப் பேரும் புகழும் பெற்றுத்தந்தது.1934ல் இந்தப் பத்திரிகையிலிருந்து விலகிய கொஞ்சநாளிலேயே இவர் மரணம் அடைந்தார். […]

Read more

காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர்

காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர், பா. செயப்பிரகாசம், வம்சி புக்ஸ், திருவண்ணாமலை, விலை 180ரூ. அசைபோடும் கதைகள் பா.செ. அவர்களின் காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர் சிறுகதை தொகுப்பை படித்து முடித்தவுடன் முதலில் கவனத்துக்கு வருவது சொற்களில் இருக்கும் கச்சிதம். கத்தி போன்ற சொற்கள். ஆனால் அந்த கத்தி மெல்லிய அங்கத சுவையுடன் கதையை சொல்லிக்கொண்டே வேண்டிய இடத்தில் ஆழமாக கீறவும் செய்கிறது. சமூகத்தில் பின்னிப் பிணைந்திருக்கும் சாதீய சிடுக்குகளையும் அதில் மாட்டிக்கொண்டு கிழிந்து தொங்கும் மனித உறவுகளையும் பெரும்பாலான கதைகளில் காண முடிகிறது. […]

Read more
1 2 3 11