செவக்காட்டு சொல் கதைகள்

செவக்காட்டு சொல் கதைகள், கழனியூரன், புக்ஸ் பார் சில்ட்ரன், சென்னை, விலை 140ரூ. செவக்காட்டு சொல்கதைகள் என்ற இந்த நாட்டுப்புற கதைக் களஞ்சியத்தை படைத்திருக்கிறார் எழுத்தாளர் கழனியூரன். கர்ணன் என்கிற மகாபாரதப் பாத்திரத்தை வைத்துக் கொண்டு நாட்டுப்புற மக்கள் உருவாக்கி இருக்கும் கதைகளை விவரிக்கும் அத்தியாயம் சுவாரசியம். அன்னதானம் மிக முக்கியமான மானுடப்பண்பாகப் பேணப்பட்டது என்பதைக் காண்பிக்கும் கதை இது. அத்துடன் கெட்டது செய்பவன் ஜெயிக்க முடியாது என்பதை தீர்மானமாக கிட்டத்தட்ட இதில் உள்ள எல்லா கதைகளும் சொல்கின்றன. நமது ஐதீகங்களில் புழுங்கும் ஐந்து […]

Read more

சயாம் – பர்மா மரண இரயில் பாதை

சயாம் – பர்மா மரண இரயில் பாதை, சீ. அருண், தமிழோசை பதிப்பகம், பக். 232, விலை 180ரூ. மறக்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு இலங்கையில் மட்டும்தான் தமிழர்கள் இனப்படுகொலைக்கும், பாலியல் வன்முறைக்கும், சொல்லொணாத் துயருக்கும் ஆளானதாக தற்கால உலகம் அறிந்து வைத்திருக்கும். ஆனால் சயாம் – பர்மா தொடர் வண்டிப்பாதை கட்டுமானத்தில், எண்ணிலடங்கா இன்னல்களை அடைந்து உயிர்நீத்தவர்கள் நம் தமிழ் மூதாதையர்கள் என்ற மறக்கப்பட்ட வரலாற்றை இந்நூல் நமக்கு கண்ணீர் மல்க எடுத்தியம்புகிறது. தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் இந்நூலை வாசிக்க வேண்டும். இந்நூல் மலாயாவில் […]

Read more

எம்.ஜி.ஆர். மதித்த முதலாளி

எம்.ஜி.ஆர். மதித்த முதலாளி, விஜயா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 100ரூ. திரைப்படத்துறையில் முத்திரை பதித்து முன்னேற்றம் கண்ட நாகிரெட்டியின் வாழ்க்கை வரலாற்று நூல். அவருடைய மகன் விஸ்வம் இந்நூலை எழுதியிருக்கிறார். தினமணி கதிரில் இது தொடராக வெளிவந்தது. திரைப்படத் தயாரிப்புத் தொழிலின் நிதிநிலை ஒரு சமயம் மிகவும் மோசமாக இருந்தது. அப்போது, விஜயா வாகினி ஸ்டுடியோ அதிபரான நாகிரெட்டி, தமது ஸ்டியோவில் படம் பிடித்த தயாரிப்பாளர்களை அழைத்து அவர்களிடம் ஏற்கெனவே தான் ஸ்டுடியோ கட்டணமாகப் பெற்ற தொகையில், ஒரு பகுதியைத் திருப்பிக் கொடுத்த சம்பவம் […]

Read more

இயற்கை வேளாண்மைக் களஞ்சியம்

இயற்கை வேளாண்மைக் களஞ்சியம், ஆர்.எஸ். நாராயணன், யூனிக் மீடியா இண்டக்ரேட்டர், பக். 144, விலை 120ரூ. இயற்கை விவசாய ஆராய்ச்சி விஞ்ஞானியான நூலாசிரியர், செயற்கை ரசாயன உரங்களால் நமது மண் மாசடைந்து, விவசாயம் செய்யவே தகுதியற்றதாக மாறிவிட்டதைக் கண்டு கொதித்து எழுபவர். அவருடைய இயற்கை விவசாயம் சார்ந்த தேடல்கள், அனுபவங்கள், தெளிவான கருத்துகளின் தொகுப்பே இந்நூல். பசுமைப் புரட்சிக்கு முன்பே நிலத்தில் ரசாயன உரங்களைப் போடும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது என்று நூலாசிரியர் எடுத்துக்காட்டுகளுடன் சொல்லியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. நாம் மண்ணை நேசிப்பதனை மறந்து மண்ணை […]

Read more

தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்

தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள், இரா. பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் பதிப்பகம், பக். 312, விலை 360ரூ. தொல்காப்பியர் பெயர்க் காரணம், அவரது காலம், அவர் முந்துநூல் கண்டது, தொல்காப்பிய விளக்கம், அதிகாரமும் உட்பிரிவுகளும், தொல்காப்பியத் திணைகள், நூற்பாக்கள் போன்றவற்றை விளக்கிவிட்டு, தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள தாவரங்களின் பட்டியலைத் தந்திருக்கிறார் நூலாசிரியர். அதன்படி, அரை, ஆண், ஆர், ஆல், ஆவிரை, இல்லம், உதி, உழிஞை, உன்னம், எகின், கடு, ஞமை, தளா, காஞ்சி, தும்பை, நமை, குமிழ், குறிஞ்சி, காந்தள், நொச்சி, பனை, பீர், மருதம், முதலிய 48 […]

Read more

சினிமாவுக்கு வந்த சின்ன வாத்தியார்

சினிமாவுக்கு வந்த சின்ன வாத்தியார், வெ. மு.ஷா. நவ்ஷாத், ஓவியம் பதிப்பகம், மதுரை, பக். 160, விலை 110ரூ இயக்குநர், நடிகர், வசனகர்த்தா என்று பல துறைகளில் சாதனையாளராகத் திகழ்ந்தவர் பாக்யராஜ். இருபதாம் நூற்றாண்டின் இறுதிகளில் அவரது பாணியில் அமைந்த திரைப்படங்கள் தமிழக மக்களைச் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தன என்றால் அது மிகையாகாது. முந்தானை முடிச்சு தொடங்கி பாக்யராஜ் இந்திய 24 திரைப்படங்களின் துணை கொண்டு, அவரது அறிவுகூர்மையையும் விரிவாக அலசியிருக்கிறார் நூலாசிரியர். மேலும் ஒவ்வொரு திரைப்படத்தை இயக்கும்போதும் அவருக்கு ஏற்பட்ட சிரமங்கள், கடைபிடித்த […]

Read more

சாவித்திரி கலைகளில் ஓவியம்

சாவித்திரி கலைகளில் ஓவியம், நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா, தோழமை வெளியீடு, பக்.270, விலை 250ரூ. மதுவால் சரிந்த அழகு சாம்ராஜ்யம்! இப்போது மட்டுமல்ல, அப்போதும் தமிழ் சினிமா என்பது ஆண்களால் ஆளப்படும் உலகம்தான். கதாநாயகர்களை திருவுருக்களாகவும், நாயகியரை அழகு பதுமைகளாகவும் பார்க்கும் செல்லுலாயிட் சிற்பம். இப்பேதைவிட, 60 ஆண்டுகளுக்கு முன்னால், நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அப்போதும் கதாநாயகர்களே, சினிமா உலகை ஆண்டு கொண்டிருந்தனர். ஏறக்குறைய முடிசூடா மன்னர்களைப்போல. அதனால் உச்ச நடிகர்களோடு நடிக்க பெரும் போட்டியே நடக்கும். கதாநாயகன் தாத்தாவின் வயதில் இருந்தாலும், அவரோடு […]

Read more

கருமை செம்மை வெண்மையைக் கடந்து

கருமை செம்மை வெண்மையைக் கடந்து, வே.மு. பொதியவெற்பன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, விலை 280ரூ. செறிவான ஆய்வு நூல்! மூத்த எழுத்தாளர் வே.மு.பொதியவெற்பனின் ஆய்வுக் கட்டுரைகள் தொகுக்கப்ட்டு மிகவும் செறிவான ஒரு நூலாக இது இருக்கிறது. இலக்கியம், மெய்யியல், தெருக்கூத்து, கலைகள், சித்தர் மரபுகள், மணிமேகலை, இறையியல், தத்துவம் என்று பல்வேறு துறைகளில் ஆய்வுப்புலத்தில் இருப்பவர்களுக்குபேருதவி செய்யக்கூடிய கட்டுரைகள். ஒவ்வொரு தலைப்பிலும் இவர் எழுதியிருக்கும் கட்டுரைகள் கிட்டத்தட்ட 360 பாகைக் கோணத்தில் மையப்பொருளை ஆராய்கின்றன. ஒப்பியல் நோக்கில் சித்தர் […]

Read more

தலைவர் பிரபாகரன்

தலைவர் பிரபாகரன், பன்முக ஆளுமை, ஓவியர் புகழேந்தி, தூரிகை வெளியீடு, விலை 230ரூ. ஈழத்தில் வரைந்த கோடுகள்! To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024221.html ஈழத்தில் நிலவிய சமாதானக் காலத்தில் அங்கு தமிழகத்தில் இருந்து பலதுறை விற்பன்னர்களை விடுதலைப்புலிகள் அழைத்து அவர்களின் திறன்களை கற்றுக்கொள்ள விழைந்தனர். அப்படி அழைக்கப்பட்டவர்களில் ஒருவர் ஓவியர் புகழேந்தி. அங்கு பலமுறை சென்று நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, புலி இயக்க உறுப்பினர்களுக்கு வகுப்புகள் எடுத்துள்ளார். முக்கிய தளபதிகளுடன் கலந்துரையாடி இருக்கிறார். பிரபாகரனையும் பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்த அனுபவங்களைக் […]

Read more

ஈழம் அமையும்

ஈழம் அமையும், விடுதலைப் போராட்டத்தை முன்னெப்பவர்களுக்கான வழிகட்டி, கா. அய்யநாதன், கிழக்கு பதிப்பகம், சென்னை, விலை 250ரூ. அழிப்பின் பின்னணி! To buy this Tamil book online: http://www.nhm.in/shop/9789384149116.html கொத்துக்குண்டுகளும் வெப்பக்குண்டுகளும் பாஸ்பரஸ் குண்டுகளும் வீசி அழிக்கப்பட்ட ஈழவிடுதலை போராட்டத்தைப் பற்றி தமிழ்நாட்டின் ஈழ ஆதரவாளர்களில் ஒருவரான பத்திரிகையாளர் கா. அய்யநாதன் எழுதியிருக்கும் நூல் இது. முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் என இரு கிராமங்களில் குழுமி இருந்த ஈழத்தமிழ் மக்கள் புலிப்படையினருடன் கொல்லப்பட்ட நிகழ்வில் தொடங்கும் இந்நூல், இந்திய அரசு இந்தப் படுகொலையைப் பார்த்துக்கொண்டிருந்தது […]

Read more
1 2 3 4 11