திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள்

திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள், இரா.பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் பதிப்பகம், பக்.408, விலை ரூ.400. திருவள்ளுவரின் திருக்குறளில் பல தாவரங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அந்த தாவரங்களின் இயல்புகள் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. திருக்குறளில் வரும் தாவரங்கள் பற்றி பேராசிரியர் இரா.பஞ்சவவர்ணம் ஆழமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு, ஏராளமான தகவல்களை இந்த நூலின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் ஆராய்ச்சியாளர்களின் கையில் இருக்க வேண்டிய அரிய நூல். நன்றி: தினத்தந்தி 6/6/2018.   இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026859.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள்

திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள்,  (திருக்குறள்-பிரித்தாளுதல்-நுண்ணுரை- தடை விடையுடன்), இரா.பஞ்சவர்ணம்,பஞ்சவர்ணம் பதிப்பகம், பக்.408, விலை ரூ.400. திருக்குறளில் இடம்பெறும் தாவரங்களான எள், அமை, தாமரை, அனிச்சம், உள்ளி, குன்றிமணி, தினை, நெருஞ்சில், கரும்பு, நச்சுமரம் முதலிய தாவரங்கள் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், இந்தி, சம்ஸ்கிருதம் முதலிய மொழியில் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பதையும், அந்தந்த தாவரத்தின் வகைப்பாடுகளையும், அவற்றின் பண்புகளையும், அவற்றிற்குத் ‘தாவரத் தகவல் மையம்‘ தரும் பெயர்களையும் குறிப்பிட்டிருப்பது நூலின் சிறப்பு. எடுத்துக்காட்டுக்கு ஒன்று: பொருட்பாலில் ‘;சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி‘ என வரும் […]

Read more

பனைமரம்

  பனைமரம், முனைவர் இரா. பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் பதிப்பகம், பக். 758, விலை 800ரூ. தமிழர் வாழ்வியலில் பனைமரத்தின் பயன்பாடு என்பது, ஒரு பண்பாட்டும் பயில்வு நிலையாகவே தொன்றுதொட்டு இருந்து வருகிறது. அகமாயினும் புறமாயினும் மானுட வாழ்வின் பல்வேறு படிநிலையாக்கங்களிலும் பனைமரத்தின் செயல்பாடு நீடித்திருப்பதை எண்ணற்ற சான்றுகள் வாயிலாக எடுத்துக்காட்ட இயலும். குறிப்பாக தமிழர் அறிவும் பாரம்பரியத்தின் களஞ்சியமாகத் திகழும் பல்வேறு எழுத்தாக்கங்கள் கால வெள்ளத்தில் கரைந்து போகாமல் காத்த பெருமை, பனைமரத்தின் ஓலைகளால் ஆன சுவடிகளையே சேரும். தமிழ்ச்சுவடி மரபே உலக நூலாக்கத்தின் […]

Read more

செட்டிநாட்டு சுற்றுலாவும் சிவகங்கை மாவட்ட பிரசித்திபெற்ற திருத்தலங்களும்

செட்டிநாட்டு சுற்றுலாவும் சிவகங்கை மாவட்ட பிரசித்திபெற்ற திருத்தலங்களும், S.L.S.பழனியப்பன், S.L.S. பதிப்பகம், பக். 74, விலை 60ரூ. செட்டிநாட்டில் உள்ள பிரசித்திபெற்ற கோயில் தலங்கள், அரண்மனை, அழகிய வீடுகள், அருங்காட்சியம் போன்ற அனைத்தையும் விவரித்து, அவற்றை காணச்செல்வோருக்கு உதவும் வகையில் ஒரு சுற்றுலா வழிகாட்டியாக விளங்கும் நூல். நன்றி: குமுதம், 27/4/16.   —- அக்னிக் குஞ்சுகள், ஏம்பல் ராஜா, பஞ்சவர்ணம் பதிப்பகம், பக். 232, விலை 150ரூ. சமுதாயத்திற்கான குரலாக ஒலிக்கும் கவிதைகளின் தொகுப்பு இவை. சமூக விடுதலையில் கவிஞருக்குள்ள அக்கறை வெளிப்படும் […]

Read more

தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்

தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள், இரா. பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் பதிப்பகம், பக். 312, விலை 360ரூ. தொல்காப்பியர் பெயர்க் காரணம், அவரது காலம், அவர் முந்துநூல் கண்டது, தொல்காப்பிய விளக்கம், அதிகாரமும் உட்பிரிவுகளும், தொல்காப்பியத் திணைகள், நூற்பாக்கள் போன்றவற்றை விளக்கிவிட்டு, தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள தாவரங்களின் பட்டியலைத் தந்திருக்கிறார் நூலாசிரியர். அதன்படி, அரை, ஆண், ஆர், ஆல், ஆவிரை, இல்லம், உதி, உழிஞை, உன்னம், எகின், கடு, ஞமை, தளா, காஞ்சி, தும்பை, நமை, குமிழ், குறிஞ்சி, காந்தள், நொச்சி, பனை, பீர், மருதம், முதலிய 48 […]

Read more

திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள்

திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள், இரா. பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் பதிப்பகம், விலை 360ரூ. திருமந்திரத்தில் பல்வேறு நிலைகளில் தாவரங்கள் பற்றி பதிவு செய்யப்பட்டுள்ளன. மனித வாழ்க்கையும், இறைவழிபாட்டையும், யோக நிலையையும் தாவரங்களோடு இணைத்து திருமூலர் தனது திருமந்திரத்தில் 229 பாடல்களில் 86 தாவரங்களைப் பதிவு செய்திருக்கிறார். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட தாவரங்களை அடையாளம் கண்டு, அத்தாவரங்களின் பெயர்களைப் பட்டியலிடுவதுடன், ஒவ்வொரு தாவரம் பற்றிய விளக்கம், வகைப்பாடு, தாவரம் இடம் பெற்ற பாடலடிகள், தாவரங்கள் பற்றிய வண்ண ஒளிப்படங்கள் ஆகியவை இந்நூலில் விரிவாகவும், விளக்கமாகவும் தரப்பட்டுள்ளன. நன்றி: […]

Read more

திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள்

திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள், இரா. பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் பதிப்பகம், பக். 295, விலை 360ரூ. திருமூலரை சித்தர், முனிவர், யோகி, ஞானி என்றெல்லாம் பலரும் அறிந்திருப்பர். ஆனால் அவர் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், கணித மேதையாகவும், தாவரவியல் நிபுணராவும், புவியியல் வல்லுநராகவும், மருத்துவ நிபுணராகவும் விளங்கியுள்ளார் என்பதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது. திருமூலரின் ஆன்மா, கடவுள் பற்றிய கணக்கியல், திருமூலரும் புவி இயலும், திருமூலம் சித்த மருத்துவமும், உடற்கூற்றியலும், திருமூலரின் கருவுறுதல் தத்துவம், திருமந்திரத்தில் இடம்பெற்றுள்ள தாவரங்களின் வகைகள், அத்தாவரங்கள் பற்றிய விளக்கங்கள், தாவரங்களின் வண்ண ஓளிப்படங்கள் […]

Read more

தேவதையைத் தொலைத்தவன்

தேவதையைத் தொலைத்தவன், பஞ்சவர்ணம் பதிப்பகம், புதுக்கோட்டை மாவட்டம், விலை 100ரூ. காதல் கவிதைகள் கொண்ட புத்தகம். கவிஞர் ஏம்பல்ராஜா, தேவதாசாகவே மாறி காதல் கீதங்களை இசைக்கிறார். மாதிரிக்கு சில- நீ அலை! வந்ததும் போய்விட்டாய்! நான் கரை! எங்கே போவது? என் கண்ணீர் வற்றிவிட்டது! உன் கண்களைக் கொஞ்சம் தா! அழுதுவிட்டுத் தருகிறேன். புத்தகம் முழுவதும் ஆர்ட் காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளது. பக்கத்துக்குப் பக்கம் படங்கள். விலை 100ரூ. ஏம்பல்ராஜா ஒரு கல்லூரிப் பேருந்தும் சில காதல் தேவதைகளும் என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். இதுவும் காதல் […]

Read more

தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்

தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள், இரா. பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் பதிப்பகம், காமராஜர் தெரு, பண்ருட்டி, கடலூர் மாவட்டம், விலை 360ரூ. பண்டைய தமிழ் நூல்களில் கொட்டிக்கிடக்கின்ற தாவரத் தொடர்புடையத் தகவல்களைத் தொகுத்து வழங்க வேண்டும் என்ற குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்ட நூல். நிலத்திணைகளின் பெயராக இடம் பெற்ற தாவரங்கள் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) போர் முறை, போர் நிகழ்வு மற்றம் போர் வீரர்களுக்கு அடையாளமாக பயன்படுத்தும் தாவரங்கள் (வாகை, வெட்சி, தும்பை, கரந்தை, உழிஞை, வஞ்சி, காஞ்சி) மருந்தாக பயன்படுத்தும் வேம்பு, […]

Read more

குமரகுருபரரின் தமிழ் உள்ளம்

குமரகுருபரரின் தமிழ் உள்ளம், ந. முருகேசன், ஓலைச்சுவடித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 613010, பக்கங்கள் 94, விலை 80ரூ குமரகுருபரரின் தமிழ்ப்பற்று அளவிடற்கரியது. அருந்தமிழ், செழுந்ததமிழ்த் தெள்ளமுது, சொற்களை பழுத்த தொகைத்தமிழ், புத்தமுதம் வழிந்தொழுகும் தீந்தமிழ், இசை முத்தமிழ் என்றெல்லாம் அகங்குளிரப்பாடி 17ஆம் நூற்றாண்டில் தமிழை உச்சாணிக் கொம்புக்கு ஏற்றியவர். பக்தி மணமும் பைந்தமிழ் மணமும் கமழும் நூலாக இது திகழ்கிறது. இவ்வாறு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ம. திருமலை வழங்கியுள்ள அணிந்துரை இந்நூலுக்கு அணி சேர்த்துள்ளதை வழிமொழிந்தே ஆகவேண்டும். குமரகுருபரரின் தமிழ் […]

Read more