செவ்விலக்கியச் சொல்லாய்வுகள்

செவ்விலக்கியச் சொல்லாய்வுகள், வாணி அறிவாளன், அருண் அகில் பதிப்பகம், பக்.144, விலை ரூ.150. பழந்தமிழ் இலக்கியங்களில் வழங்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சில சொற்கள் குறித்த விரிவான ஆய்வு நூல் இது. தொல்காப்பிய முதல் அதிகாரத்தின் முதல் இயலான நூன்மரபு என்பது சரியா? நூல் மரபு என்று அதைப் புரிந்து கொண்டால் என்ன பொருள் தரும்? என்பன போன்ற வினாக்களுக்கு ஆய்வு நோக்கில் இந்நூல் விடையளிக்கிறது, ‘தொல்காப்பிய முதல் இயல் நூன்மரபு அன்று. நூல் மரபே’ என்ற முதல் கட்டுரை. கேண்மியா, சென்மியா என்று பழந்தமிழ் இலக்கியங்களில் […]

Read more

தொல்காப்பியரின் வண்ணக்கோட்பாடும் சங்க இலக்கியமும்

தொல்காப்பியரின் வண்ணக்கோட்பாடும் சங்க இலக்கியமும், முனைவர் ப.ஞானமணி, காவ்யா, விலைரூ.350 தொல்காப்பியத்தில் யாப்பியல் கோட்பாடுகளில் குறிப்பிடப்படும் வண்ணம் குறித்து விரிவாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நுால். ஆய்வில் அசை, சீர் பற்றிய அரிய தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொல்காப்பியரின், 20 வண்ணங்கள் மற்றும் அவிநயனார் கூறும், 100 வண்ணங்களையும் எடுத்துக் காட்டி விவரித்திருப்பதோடு, பண்டைய இலக்கண ஆசிரியர்களின் ஏற்புடைக் கருத்துகளையும், முரண்களையும், மறுப்புகளையும் முன்வைத்து சங்கப்பாடலில் எடுத்துக்காட்டுகளும் தந்திருப்பது சிறப்பு. வல்லிசை, மெல்லிசை, இயைபு, அளபெடை, நெடுஞ்சீர், குறுஞ்சீர், சித்திர, நலிபு ஆகிய எழுத்தடிப்படை வண்ணங்கள், […]

Read more

யாப்பு விளக்கம்

யாப்பு விளக்கம் (தமிழ்ச் செய்யுள் இலக்கணம்), ப.எழில்வாணன், தமிழ்வாணன் பதிப்பகம், பக்.572, விலை ரூ.650. தமிழில் உள்ள யாப்பிலக்கணங்கள்தாம் தொன்மையும் முதன்மையும் கொண்டவையாகத் திகழ்கின்றன. தொல்காப்பியத்திற்குப் பிறகு புலவர்கள் பலர் யாப்பிலக்கணம் செய்துள்ளனர் என்றாலும், தொல்காப்பியத்திற்குப் பிறகு கிடைத்த இரு யாப்பிலக்கண நூல்கள், அமிர்தசாகரர் என்பவரால் எழுதப்பட்ட யாப்பருங்கலமும், யாப்பருங்கலக்காரிகையும்தான். இந்நூல்களுக்குப் பிறகு சுமார் முப்பது யாப்பிலக்கண நூல்கள் வந்ததாகத் தெரிய வருகிறது. இந்நூல் இயற்றமிழ்ப் பாக்கள், இசைத்தமிழ்ப் பாக்கள், பொது, சித்திரப் பாக்கள் ஆகிய நான்கு இயல்களைக் கொண்டு உறுப்பியல், பாவினங்கள், புதுப் […]

Read more

தொல்காப்பியச் செய்யுள் உறுப்புகள் உரையாசிரியர்கள் நோக்கு

தொல்காப்பியச் செய்யுள் உறுப்புகள் உரையாசிரியர்கள் நோக்கு, கு. முதற்பாவலர். முத்தமிழ் நிலையம்,  பக்.464, விலை ரூ.350. தமிழ் யாப்பியலின் முந்தைய நிலையை எடுத்துரைப்பதாக தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் அமைந்துள்ள ஒரு பகுதிதான் செய்யுளியல். இது பல்வேறு வகைகளாக யாப்பு வகைகளைக் கூறும் பகுதி. செய்யுளியலில் இடம்பெற்ற இலக்கணங்கள் பலவகையான மாற்றங்களையும், வளர்ச்சியையும் அடைந்து, பின்னாளில் தனித்தனி நூல்களாக வெளிவந்திருக்கின்றன. யாப்பியல் தொடர்பாக அறிஞர் பலரும் ஆராய்ந்து அரிய பல தகவல்களையும் வெளியிட்டிருக்கிறார்கள் – வெளியிட்டும் வருகின்றனர். அச்சில் வராத யாப்பியல் ஆராய்ச்சி கூட வெளிவந்துள்ளது. காலந்தோறும் […]

Read more

தொல்காப்பியம் சொல்லதிகாரம்

தொல்காப்பியம் சொல்லதிகாரம், ச.சுப்புரெத்தினம், அருணா பப்ளிகேஷன்ஸ், விலைரூ.100 தற்கால உரைகளின் வரிசையில் வெளிவந்துள்ளது. தொல்காப்பிய சொல்லதிகாரத்தில் அனைத்துக் கூறுகளும் விளக்கப்பட்டுள்ளன. கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் எனப் பகுத்து, ஒவ்வொரு இயலுக்கும் எளிய முகப்புரை வழங்கி, நுாற்பாக்களுக்குத் துணைத் தலைப்புகளோடு உரையும் விளக்கமும் வழங்கப்பட்டுள்ளன. திணை, பால், இடம், எண், புறநடை சார்ந்த தமிழ்ச் சொல்லாக்கம், வேற்றுமை வகைகள், பொருள் மற்றும் உருபு மயக்கங்களை உணர்த்தும் வேற்றுமை மயக்கங்கள், விளிமரபு, பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் […]

Read more

அறுவகை இலக்கணச் சிறப்புகள்

அறுவகை இலக்கணச் சிறப்புகள், த.முத்தமிழ்,காவ்யா, விலைரூ.220. கால மாற்றங்களால் மொழி வழக்குகள் மாறும்போது இலக்கியங்களில் மட்டுமன்றி, இலக்கணங்களிலும் மாற்றுப்பார்வைகள் தோன்றி வருகின்றன. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்திலக்கணங்களுடன் புலமையிலக்கணத்தையும் தந்த, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் அறுவகை இலக்கண நுாலில் உள்ள மாறுபட்ட பார்வைகளை ஆய்ந்து விளக்கியுள்ளார் நுாலாசிரியர். எழுத்திலக்கணத்தின் உருவோசையியல்பில் அலகெழுத்து, கூட்டெழுத்து எனும் இரண்டை இணைத்து, குறிப்பெழுத்தை இலக்கணத்தில் சேர்த்து, பிற இலக்கணிகள் விரித்துக் கூறாத அலகுகள், எழுத்து வடிவங்கள், கூட்டெழுத்து வரி வடிவங்கள், எழுதும் முறைகள் படைத்திருப்பதை […]

Read more

அறுவகை இலக்கணச் சிறப்புகள்

அறுவகை இலக்கணச் சிறப்புகள், த.முத்தமிழ், காவ்யா, விலைரூ.220 கால மாற்றங்களால் மொழி வழக்குகள் மாறும்போது இலக்கியங்களில் மட்டுமன்றி, இலக்கணங்களிலும் மாற்றுப்பார்வைகள் தோன்றி வருகின்றன. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்திலக்கணங்களுடன் புலமையிலக்கணத்தையும் தந்த, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் அறுவகை இலக்கண நுாலில் உள்ள மாறுபட்ட பார்வைகளை ஆய்ந்து விளக்கியுள்ளார் நுாலாசிரியர். எழுத்திலக்கணத்தின் உருவோசையியல்பில் அலகெழுத்து, கூட்டெழுத்து எனும் இரண்டை இணைத்து, குறிப்பெழுத்தை இலக்கணத்தில் சேர்த்து, பிற இலக்கணிகள் விரித்துக் கூறாத அலகுகள், எழுத்து வடிவங்கள், கூட்டெழுத்து வரி வடிவங்கள், எழுதும் முறைகள் […]

Read more

தொல்காப்பியம்

தொல்காப்பியம்; ஆசிரியர் ; புலியூர்க்கேசிகன்,வெளியீடு: ஜீவா பதிப்பகம், விலை ரூ. 400/- வடமொழிக்கு இலக்கண வரம்பை தெரிவிக்கும் நுால், பாணினீயம். இதற்கு முன்பாகவே, தமிழ் மொழிக்கு இலக்கண வரையறை தரும் நுாலான, தொல்காப்பியம் தோன்றிவிட்டது. வடவேங்கடம் முதல், தென்குமரிக்கு இடைப்பட்ட பகுதியில் வாழ்ந்த தமிழர்களின் பேச்சு வழக்கு, செய்யுள் வழக்கை இணைத்து, இலக்கணம் கண்டவர் தொல்காப்பியர். இந்த நுாலுக்கு, இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், கல்லாடர், தெய்வச்சிலையர் உட்பட பலர் உரை எழுதியுள்ளனர். அதில், இளம்பூரணரின் உரையைத் தழுவி புலியூர்க்கேசிகன் தெளிவான உரை எழுதி உள்ளார். […]

Read more

பொருளிலக்கணக் கோட்பாடு, உவமவியல், தொல்காப்பியம்

பொருளிலக்கணக் கோட்பாடு, உவமவியல், தொல்காப்பியம்,  செ.வை. சண்முகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை ரூ.240. உவமையும் உருவகமும் சாதாரண மக்களின் பேச்சில் மிகவும் இயல்பாக வெளிப்படும். ‘அவன் மனது ஒரு கல்லு’ எனச் சொல்லும் தொடரில், மனதைக் கல்லாக உருவகப்படுத்துவதைக் காண முடியும். ‘மலை போல் வந்த துன்பம் எல்லாம் பனி போல் விலகி விடும்’ என்னும் உவமைத் தொடரையும், வேறு உவமைத் தொடர்களையும் சாதாரண மக்கள் மிகுதியாகப் பயன்படுத்துவர். சாதாரண மக்களின் மனதில் இயல்பாகப் பதிந்து விட்ட இந்த உவமை பற்றித் […]

Read more

தொல்காப்பியம்

தொல்காப்பியம், புலியூர்க்கேசிகன், ஜீவா பதிப்பகம், விலை 400ரூ. உலக மொழிகளின் இலக்கண வரம்பினை உறுதிப்படுத்தும் நூல்கள் அனைத்துக்கும் முற்பட்டது என்று போற்றப்படும் தொல்காப்பியத்திற்கு எளிய விளக்க உரையாக இந்த நூல் தயாராகி இருக்கிறது. நச்சினார்க்கினியர், இளம்பூரணனார் ஆகியோரின் உரைகளைத் தழுவி இந்த விளக்க உரை எழுதப்பட்டு இருக்கின்றது என்ற போதிலும், தொல்காப்பியம் முழுவதையும் புரிந்து கொள்ளத் தக்க வகையில் சுருக்கமான வரிகளைக் கொடுத்து இருப்பதன் மூலம் இந்த நூல் தனித்துவம் பெறுகிறது. தொல்காப்பியத்தின் ஒவ்வொரு கருத்துக்கும் விளக்க உரையுடன் எடுத்துக்காட்டுகள் கொடுத்து இருப்பதால் படிக்க […]

Read more
1 2 3 6