தொல்காப்பியம்

தொல்காப்பியம்; ஆசிரியர் ; புலியூர்க்கேசிகன்,வெளியீடு: ஜீவா பதிப்பகம், விலை ரூ. 400/- வடமொழிக்கு இலக்கண வரம்பை தெரிவிக்கும் நுால், பாணினீயம். இதற்கு முன்பாகவே, தமிழ் மொழிக்கு இலக்கண வரையறை தரும் நுாலான, தொல்காப்பியம் தோன்றிவிட்டது. வடவேங்கடம் முதல், தென்குமரிக்கு இடைப்பட்ட பகுதியில் வாழ்ந்த தமிழர்களின் பேச்சு வழக்கு, செய்யுள் வழக்கை இணைத்து, இலக்கணம் கண்டவர் தொல்காப்பியர். இந்த நுாலுக்கு, இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், கல்லாடர், தெய்வச்சிலையர் உட்பட பலர் உரை எழுதியுள்ளனர். அதில், இளம்பூரணரின் உரையைத் தழுவி புலியூர்க்கேசிகன் தெளிவான உரை எழுதி உள்ளார். […]

Read more