தேவார மூவர் அருளிய செய்யுளியல்

தேவார மூவர் அருளிய செய்யுளியல், ம,வே. பசுபதி, தெய்வத்திருமகள், விலை 150ரூ. செய்யுள் இயற்றுவதும், மரபுக் கவிதை இயற்றுவதும் இன்றைக்கு அருகிப்போய் வருவதால், “யாப்பு’ என்றால் என்னவென்று மாணவர்கள் கேட்கும் நிலை உள்ளது. காலத்திற்கேற்ற நூலாக இது வெளிவந்திருப்பது சிறப்பு. தேவார மூவரான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகியோரின் தேவாரப் பாடல்களில் கையாளப்பட்டுள்ள செய்யுளியல் குறித்து விரிவாகப் பேசுகிறது இந்நூல். மூவர் தேவாரங்களையும் தோத்திரப் பாடல்களாக மட்டும் பார்க்காமல், இலக்கணக் கண்கொண்டு ஆராய்ந்திருப்பது பக்தி இலக்கியத்திற்குக் கிடைத்த மிகச்சிறந்த இலக்கண நூல் இதுவென்று […]

Read more

திப்புவின் வாள்

திப்புவின் வாள், பகவான் எஸ். கித்வானி, தமிழில் வெ. ஜீவானந்தம், நியூ செஞ்சரி புக் ஹவுஸ், பக். 336, விலை 265ரூ. ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் திப்பு சுல்தான். அவர் 1782 முதல் 1799 வரை மைசூர் ராஜ்ஜியத்தை ஆண்டபோது நடந்த சம்பவங்கள், நாடு பிடிக்கும் ஆசையில் களமிறங்கிய கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்ப்பதற்கு சந்தித்த சவால்கள், வெற்றிகள், நம்பிக்கை துரோகம் ஆகியவற்றை மையமாக வைத்து எழுதப்பட்ட “தி சுவார்டு ஆஃப் திப் சுல்தான்’ என்ற ஆங்கில வரலாற்று நாவலின் மொழி பெயர்ப்பாக […]

Read more

தமிழ்க் கட்டுரைக் களஞ்சியம்

தமிழ்க் கட்டுரைக் களஞ்சியம், வே. ராகவன், டாக்டர் வே. ராகவன் நிகழ்கலை மையம், பக். 440, விலை 650ரூ. சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பேராசிரியராகப் பணியாற்றியவரும், சமஸ்கிருத மொழிக்கும் கர்நாடக இசைக்கும் பெரும் தொண்டாற்றியவருமான டாக்டர் வே.ராகவன், 1930 களில் தொடங்கி பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். கணபதி, ஸுப்ரமண்யர், லக்ஷ்மி போன்ற கடவுள்களைப் பற்றியும், தீபாவளி, மாட்டுப் பொங்கல், திருவாதிரை முதலிய பண்டிகைகள் பற்றியும், மகாகவிகளான காளிதாஸர், பாரவி, தண்டி போன்றோர் பற்றியும், நம் காலத்தில் வாழ்ந்து மறைந்த பாரதியார், […]

Read more

குமரித் தமிழர் தொல்காப்பியர்

குமரித் தமிழர் தொல்காப்பியர், சி. ஞானாமிர்தம், முதற்சங்கு பதிப்பகம், விலை 100ரூ. அகத்தியம் முதல் இலக்கண நூல் இன்று அகப்படவில்லை. எனவே, தமிழின் முதல் இலக்கண நூலானது தொல்காப்பியம். அகத்தியரின், 12 மாணாக்கரில் தலைமை சான்றவர் தொல்காப்பியர். இவரது இடம், காலம் பற்றிய வரலாறு, ஆய்வுக்கு உரியதாகவே உள்ளது. மதுரையில், நிலந்தரு திருவின்பாண்டியன் அவையில், அதங்கோட்டு ஆசான் தலைமையில், ‘தொல்காப்பியர் அரங்கேற்றம் செய்தார். அதனால், ‘அதங்கோடு’ பகுதியில் வாழ்ந்தவர். ‘அதங்கோட்டு ஆசான்’ என்றும், ‘காப்பிக்காடு’ என்ற ஊரில், தொல்காப்பியர் பிறந்தார் என்றும் இந்த நூல் […]

Read more

கம்பதாசன் படைப்பாளுமை

கம்பதாசன் படைப்பாளுமை, ஆர். சம்பத், சாகித்ய அகாடமி, பக். 224, விலை 335ரூ. கம்பனை காட்டும் கவிஞர். இவர் கம்பதாசர் அல்லர்; கம்பரே’ என்று, ரசிகமணி டி.கே.சி.,யால் புகழப் பெற்ற கம்பதாசன் தமிழின் பெருங்கவிஞர்; திரைப்படப் பாடலாசிரியர்; நாடக நடிகர்; திரைப்படக் கலைஞர்; சிறுகதையாளர்; நாவலாசிரியர்; இதழாசிரியர் போன்ற பன்முக ஆளுமையாளர். மகாகவி பாரதிக்குப் பின், தமிழகத்தில் தோன்றி, கவிதையை வளம் செய்த ஆற்றல் மிகுந்த சிறந்த கவிஞர்களுள், கம்பதாசன் குறிப்பிடத்தகுந்தவர். பாரதி மரபினைப் பின்பற்றிப் படைப்புகளைப் படைத்தாலும், தனக்கென்று ஓர் இலக்கிய மரபினை […]

Read more

வாசலுக்கு வரும் நேசக்கரம்

வாசலுக்கு வரும் நேசக்கரம், முனைவர் இளசை சுந்தரம், விஜயா பதிப்பகம், பக். 104, விலை 70ரூ. எழுத்தாளரும், பேச்சாளருமான இளசை சுந்தரத்தின் சிந்தனையில் உருவான, 15 கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. கட்டுரையில் கருத்து சொல்லும் வேளையில், அதனோடு நகைச்சுவையை கலந்து கலகலப்பாக்குவது இவரது பாணி. அன்றாடம் நாம் சந்திக்கும் வாழ்வியல் சவால்கள், அதற்கான தீர்வுகள், போகிற போக்கில் எளிதாய் எப்படி இவற்றை எதிர்கொள்வது என, எளிமை சொற்களில் தந்திருக்கிறார். தன் கருத்திற்கு கூட்டு சேர்க்க, குட்டி, குட்டி கதைகளையும் கட்டுரைகளில் கலந்து இருக்கிறார். […]

Read more

அப்துல் கலாம்

அப்துல் கலாம், வரலொட்டி ரங்கசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 280, விலை 200ரூ. சிறகுகள் தந்த கனவு நாயகன் அப்துல் கலாம் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த கனவு நாயகர் குறித்து இதுவரை வெளிவராத பல தகவல்களை கோர்வையாக, படிக்க அலுப்பு தட்டாத வகையில், 280 பக்கங்களில் விவரித்துள்ளார் வரலொட்டி ரெங்கசாமி. ‘காந்தி காலத்தில் வாழ்ந்தவர்கள்’ என்று ஒரு தலைமுறை பெருமை பேசியது என்றால், ‘நாங்கள் இவர் காலத்தில் வாழ்ந்தவர்கள்’ என, இன்னொரு […]

Read more

நம்பிக்கை நாட்காட்டி

நம்பிக்கை நாட்காட்டி, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், பக்., 120, விலை 80ரூ. என் பெயர் நம்பிக்கை அனுபவங்கள் ஒவ்வொன்றும் எதையாவது கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கும். அந்த அனுபவங்களே நம்முடைய வாழ்விற்கான அர்த்தங்கள். எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும் என்றால், நம்முடைய நிகழ்கால வாழ்க்கை சிறப்பாகவும், ரசனையோடும் இருத்தல் அவசியமாகிறது என்பதை படைப்பின் மூலம் உணர்ந்து, மற்றவர்களையும் வாசிப்பின் மூலம் உணர வைத்திருக்கிறார் நூலாசிரியர் சங்கரராமன். மொத்தம், 48 தலைப்புகளில் பக்கத்திற்கு பக்கம் சிந்திக்க வைத்திருக்கிறார். தலைப்புகளின் துவக்கமும், முடிவிலும் ஒரு […]

Read more

பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்

பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், எதிர்வெளியீடு, பக். 896, விலை 950ரூ. தமிழ்ப் பெருமை ஆய்வில் செழுமை தமிழ்நாட்டு வரலாற்றைப் பற்றி, தமிழில் படிக்கும் போதெல்லாம், மேலை மொழிகளில் இருக்குமளவுக்குத் தற்போதைய தமிழ் ஆய்வாளர்கள் ஆழமாகப் பரிசிலித்து எழுதுவதில்லை, என்ற என்னுள் இருந்த ஏக்கம் இந்நூலின் முதல் பார்வையிலேயே மறைந்து விட்டது. கணியன் பாலன் ஆய்வின் வீச்சும், பரிமாண வியாபகமும் ஆச்சரியப்பட வைக்கிறது. ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள நூல், கால, பொருள் ரீதியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ள முறையால் ஒரு தனிச்சிறப்பைப் பெறுகிறது. இம்முறையால் இந்நூல் […]

Read more

சோதிடத்தில் பலன் காணும் முறை

சோதிடத்தில் பலன் காணும் முறை, இளங்கோவன், குருவருள் சோதிட ஆய்வு மையம், பக். 72, விலை 100ரூ. ஒரு ஜாதகத்தை கையிலெடுக்கும் ஜோதிடர், அடிப்படையில் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும், எத்தகைய விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது இந்நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. லக்கினத்தின் முக்கியத்துவம், பாவங்கள், அந்த பாவங்களை ஆளும் கிரகங்களின் காரகத்துவங்கள், அதில் அமர்ந்திருக்கும் கிரகங்களின் செயல்பாடுகள், பாவங்களைக் கண்டு ஜாதகங்களை ஆராயும் திறன் போன்றவற்றை அக்கறையுடன் எடுத்துக் கூறி எளிமையான உதாரணங்களுடன் இந்நூலைப் படைத்திருக்கிறார் இந்நூலாசிரியர். கிரகங்களுக்குரிய நட்பு, பகை கிரகங்கள், […]

Read more
1 2 3 9