தியாகம் விளைந்த செம்புலம்

தியாகம் விளைந்த செம்புலம், பொன்முடி. சி.சுப்பையன், விஜயா பதிப்பகம், பக். 320, விலை ரூ.250. கோவைக்கு கிழக்கே இருபது கல் தொலைவில் நெடுஞ்சாலைகளின் தீண்டல் எதற்கும் சிக்காமல், உள் ஒதுங்கியிருக்கும் ஊர் அது. அங்கு பழமையும், புதுமையும் கலந்த ஒரு பண்பாடு உயிர்த் துடிப்போடு இன்றும் இருக்கிறது. கம்பும், நெல்லும், தானியங்களும் மட்டுமல்லாது, உழைப்பும் விளைந்த பூமி கண்ணம்பாளையம் என்பதை நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் அறிய முடிகிறது. பெரியவர்கள் பலரும் தந்த தகவல்களோடு ஊரில் தனது அனுபவங்களையும் தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர்.  ஊரின் வரலாற்றை காலவரையறையோடு […]

Read more

வாங்க பாஸ், வாழ்க்கையை கொண்டாடலாம்!

வாங்க பாஸ், வாழ்க்கையை கொண்டாடலாம்!, எஸ்.வெங்கடேசன், விஜயா பதிப்பகம், விலைரூ.150. ‘இவ்வளவு பிரச்னைகளுடன் சந்தோஷமாக வாழும்போது, நீங்களும் சந்தோஷமாக வாழலாம் அல்லவா’ என கேட்கத் தோன்றும் அளவுக்கு அனுபவங்களில் இருந்து படைக்கப்பட்டுள்ள நுால். குடும்பம், கல்லுாரி காலம், பிரச்னையை எதிர்கொண்டது, அதில் இருந்து மீட்டது என உண்மையை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார். ‘கலகலப்பாக இருக்க முயலுங்கள்’ என துவங்கி, ‘வாழ்க்கையை காதலியுங்கள்’ என முடியும் 31 தலைப்புகள், வாழ்வியல் உண்மைகளை உணர்த்துகின்றன. பழமொழி, பேச்சு வழக்கு, திருக்குறள் பயன்படுத்திய எளிய மொழி நடை; […]

Read more

சிறகுகள் விரித்திடு

சிறகுகள் விரித்திடு (கவிதையும் கதையும்), அ.அமல்ராஜ், விஜயா பதிப்பகம், பக்.248, விலை ரூ.200. ஒருவரின் ஆளுமை, அறிவாற்றலை மேம்படுத்துவதில் கதைகளின் பங்களிப்பு இன்றியமையாதது. அதேபோன்று சமூகப் பொறுப்பு மிக்க கவிதைகள் படிப்பவரின் மனதில் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் எளிமையாகப் புனையப்பட்ட நூறு இனிய கதைகளையும், அதைச் சார்ந்த அர்த்தமுள்ள நூறு கதைகளையும் சுமந்து வந்திருக்கிறது “சிறகுகள் விரித்திடு’ நூல். இதில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கதைகளும் மற்றும் கவிதைகளும் நம்மை புதிய பயணத்துக்கு அழைத்துச் செல்கின்றன. குறிப்பாக, “முடியும் என்றால் முடியும்’, […]

Read more

போராடக் கற்றுக்கொள்

போராடக் கற்றுக்கொள், முனைவர் அ.அமல்ராஜ் இ.கா.ப., விஜயா பதிப்பகம், விலை 200ரூ. உலகில் நான் முழுமையாக அறிந்துகொள்ள வேண்டிய ஒரே நபர் நான் என்கிற ஆஸ்கர் வைல்டின் கூற்றுடன் தொடங்குகிறது உன்னை அறிந்துகொள்வது எப்படி என்கிற கட்டுரை. இது ஆன்மிகத் தேடலுக்கான கட்டுரை அல்ல. தன்னை அறிவதற்காக 12 வழிகளைப் பட்டியலிட்டு விரிவாகப் பேசுகிறார் நூலாசிரியர். இவற்றைக் கடைபிடித்தால் நம்மை உயர்த்துகிற வழிகள். உதாரணத்துக்கு காலையில் ஆறுமணிக்கு எழுகிறவர் ஐந்து மணிக்கே எழுவது, உடற்பயிற்சி செய்யாதவர் தினமும் ஒரு மணி நேரம் செய்தல், மாதந்தோறும் […]

Read more

சைவமும் சன்மார்க்கமும்

சைவமும் சன்மார்க்கமும்,  செந்நெறி பா.தண்டபாணி, விஜயா பதிப்பகம், பக். 200, விலை ரூ.180. உலகம் இன்றளவும் தேடிக் கொண்டிருக்கும் மிகச் சிறந்த வாழ்வியல் முறைகளை நமக்கு வழங்கியவர் வடலூர் வள்ளல் பெருமான். அவரது சிறப்புகளும் சன்மார்க்க கோட்பாடுகளும் எளிய முறையில் தொகுத்து இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.  பதினெட்டு அத்தியாயங்களில் வள்ளலார் பற்றியும் அவரது மரணமில்லாப் பெருவாழ்வு குறித்த சிந்தனைகளும் தரப்பட்டுள்ளன. “சைவ சித்தாந்தமும் சன்மார்க்கமும் வேறு வேறு அல்ல; சன்மார்க்கம் என்பது சைவத்தின் உச்சநிலை’ என்கிறார் நூலாசிரியர். “உருவராகியும் அருவினராகியும் உருஅருவினராயும் ஒருவரே உளார் கடவுள் […]

Read more

கண்டதும்… கேட்டதும்…

கண்டதும்… கேட்டதும்…, விஜயலெட்சுமி மாசிலாமணி, விஜயா பதிப்பகம், விலைரூ.70. பல நாடுகளில் கண்டதையும், கேட்டதையும் அனுபவப்பூர்வமாக எழுதியுள்ளார். பெண்கள் படும் துயர் பற்றியும் அக்கறையுடன் பதிவு செய்துள்ளார். சம காலத்தில் பல நிலையில் உள்ளோர் பற்றிய விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புரட்சிக் கருத்துக்களை பதிவு செய்துள்ள பயண நுால். சிறுகதைகள் போல் உரையாடல் மொழியில் எழுதப்பட்டுள்ளது. சுவாரசியம் மிக்க சம்பவங்களைக் கொண்டது. நன்றி: தினமலர்,14/3/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

தென்கிழக்குத் தென்றல் தாவோ – சூபி – ஜென்

தென்கிழக்குத் தென்றல் தாவோ – சூபி – ஜென், வெ.இறையன்பு, விஜயா பதிப்பகம், விலைரூ.360. நுட்பமான பொருளை உணர்த்துவது ஜென் தத்துவமும், அதை தாங்கி நிற்கும் சிறுகதைகளும். அமைதி, ஒற்றுமை, கருணை, சமத்துவத்தை போதிப்பது, சூபியிசம். கருணை, அடக்கம், பணிவு போன்ற மகத்தான அறங்களை எளிய கோட்பாடாக விளக்குவது தாவோயிசம். இந்த மூன்று உயர் நெறிகளையும் அறிந்து சிந்தனை தெளிவுடன் பகிர்ந்துள்ள நுால். மனதின் நுண்ணிய ஆற்றலை மேம்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது. மூன்று தத்துவங்களும் தனித்தனி தலைப்புகளில் தொகுத்து எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு தத்துவத்திலும் ஆர்வமுள்ள […]

Read more

வாசி யோகத்தில் மெய்ஞானம்

வாசி யோகத்தில் மெய்ஞானம், ஆர்.சுந்தர், விஜயா பதிப்பகம், விலைரூ.85 பஞ்சபூதங்களால் ஆனது மனித உடல். இந்த உடல் இயக்கத்திற்கு, காற்று முக்கிய பங்கு வகிக்கிறது. காயமே இது பொய்யடா; வெறும் காற்றடைத்த பையடா என்று சித்தர் வாக்கின் படி, காற்று மிகவும் இன்றியமையாதது. காற்றை யோக முறையில் செயல்படுத்தும் வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. எட்டு வகை யோக முறைகளை விரிவாகப் பேசுகிறது. மெய்ஞானிகள் என்று துவங்கி, நல்ல மொழிகள் என்ற எட்டு தலைப்புகளுடன் நுால் நிறைவெய்துகிறது. சிவவாக்கியர், பட்டினத்தார், வள்ளலார், அவ்வையார் போன்ற சித்தர்களின் கருத்தை […]

Read more

சங்கிலிப் பூதத்தான்

சங்கிலிப் பூதத்தான், நாஞ்சில் நாடன், விஜயா பதிப்பகம், விலைரூ.145 மொத்தம், 17 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது. இதில் இடம்பிடித்துள்ள கதைகள், ஆனந்த விகடன் இதழில் அவ்வப்போது வெளியாகி, வாசகர்களின் அமோக வரவேற்பை பெற்றவை. ஒவ்வொரு சிறுகதையும், எளிய மக்களின் வாழ்க்கை போராட்டத்தை வலி(மை)யாக எடுத்துக் காட்டுகிறது. நன்றி: தினமலர், 8/3/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000026410_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

கல்வெட்டுகளில் தேவதாசி

கல்வெட்டுகளில் தேவதாசி,  எஸ்.சாந்தினி,  விஜயா பதிப்பகம், விலை: ரூ.100. அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியரான எஸ்.சாந்தினிபீ எழுதிய சமீபத்திய நூல். ‘இடைக்கால தென்னகக் கோயில்களில் பணிப்பெண்கள்’ என்ற தலைப்பில் சர்வதேசக் கருத்தரங்கு ஒன்றில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையின் நூல் வடிவம். ஆணுக்கு நிகராக தேவரடியார்கள் பெற்ற சன்மானம், கோயில்களுக்கு அவர்கள் வழங்கிய நன்கொடைகள், அவர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போரட்டம் உள்ளிட்ட வரலாற்றுத் தகவல்களைக் கல்வெட்டு ஆதாரங்களுடன் இந்நூலில் விவரித்துள்ளார். தேவரடியார் முறையின் தோற்றம் தொடங்கி 1947-ல் முத்துலட்சுமி ரெட்டியின் முயற்சியில் […]

Read more
1 2 3 10