விஷக்கிணறு

விஷக்கிணறு, சுனில் கிருஷ்ணன், யாவரும் பப்ளிஷர்ஸ், விலை 200ரூ. புது அனுபவங்கள் ஒரு குறுநாவல், மூன்று சிறிய கதைகள், ஏழு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு விஷக்கிணறு. சுனில் கிருஷ்ணனின் படைப்புலகம் விரிந்த அனுபவங்களாலும் தூய்மையும் புதுமையும் கொண்ட மொழியாலும் ஆகி இருக்கிறது. சிக்கிலான அனுபவங்களையும் பூடகமான உணர்வுகளையும் கதைகள் ஆக்கி இருக்கிறார். இயல்வாகை என்ற கதையில் வரும் மருத்துவர் எதிர்கொள்ளும் சிக்கலும் அதிலிருந்து அவர் மீளும் கட்டமும் மிகப்புதியவை. இந்திரமதம் என்கிற கதையில் உலவும் அட்டைகளும் அவற்றைக் கையாளும் மாந்தர்களும் சாதாரணமாக நாம் எங்கும் […]

Read more

இது கதையன்று வாழ்க்கை

இது கதையன்று வாழ்க்கை, கவிக்கோ ஞானச்செல்வன், எழில் நிலையம், விலை 140ரூ. தமிழ் வாழ்ககை நல்ல தமிழில் எழுதவும் பேசவும் வேண்டும் என்பதை வலியுறுத்தி பல நூல்களைப் படைத்தவர். ஊடகங்களில் தமிழ் படும்பாட்டை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சுட்டித் திருத்திக்கொண்டே இருப்பவர். சிலம்புச் செல்வர் ம.பொசியின் அணுக்கர், கவிக்கோ ஞானச்செல்வன் அண்மையில் எழுதி வெளியாகி இருக்கும் நூல் ‘இது கதையன்று வாழக்கை’. ஏற்கெனவே தன் வரலாற்று நூலொன்றை வெளியிட்டிருக்கும் இவர் இந்நூலில் அதில் விடப்பட்ட பல செய்திகளை தூயதமிழில் இனிமையாக சொல்லிச்செல்கிறார். பெரும்பாலும் தமிழ் இலக்கிய […]

Read more

போராடக் கற்றுக்கொள்

போராடக் கற்றுக்கொள், முனைவர் அ.அமல்ராஜ் இ.கா.ப., விஜயா பதிப்பகம், விலை 200ரூ. உலகில் நான் முழுமையாக அறிந்துகொள்ள வேண்டிய ஒரே நபர் நான் என்கிற ஆஸ்கர் வைல்டின் கூற்றுடன் தொடங்குகிறது உன்னை அறிந்துகொள்வது எப்படி என்கிற கட்டுரை. இது ஆன்மிகத் தேடலுக்கான கட்டுரை அல்ல. தன்னை அறிவதற்காக 12 வழிகளைப் பட்டியலிட்டு விரிவாகப் பேசுகிறார் நூலாசிரியர். இவற்றைக் கடைபிடித்தால் நம்மை உயர்த்துகிற வழிகள். உதாரணத்துக்கு காலையில் ஆறுமணிக்கு எழுகிறவர் ஐந்து மணிக்கே எழுவது, உடற்பயிற்சி செய்யாதவர் தினமும் ஒரு மணி நேரம் செய்தல், மாதந்தோறும் […]

Read more

மணல் உரையாடல்

மணல் உரையாடல், கவிதைகள், இசாக், தமிழ் அலை, விலை 150ரூ. பொருளின் பொருள்பார்த்த முகமெல்லாம் வேற்று முகமாக இருக்கும் வெளிநாட்டுப் பணியில்… தயக்கங்களுடன் போராடிய நினைவுகளின் தொகுப்பாக மணல் உரையாடல் கவிதைகளை எழுதியிருக்கிறார் கவிஞர் இசாக். நாடு அந்நியமாதல், மொழி அந்நியமாதல், உறவுகள் அந்நியமாதல், ஊர் அந்நியமாதல் என்பதெல்லாம் மானுட வாழ்வின் பெரிய துயரங்கள்தான் என்றாலும், ஒருவருக்கு தன் சொந்தவீடே அந்நியமாகிப் போகும் கொடிய துயரம் போன்ற பிரிதல்களில் ஏற்பட்டு விடுவதை எளிய சொற்களால் “கனவுகளில் வந்து கொஞ்சுகிற முகத்தைக் காணப் போகிற மகிழ்ச்சிஎனக்குள்ரசித்து […]

Read more

தாளடி

தாளடி, சீனிவாசன் நடராஜன், தேநீர் பதிப்பகம், விலை 230ரூ. நீரும் நெருப்பும் சம்பா, தாளடி, குறுவை என முப்போகம் விளைவது தஞ்சை மண். இங்கு 1960களின் இறுதியில் ஏற்பட்ட மாறுதல்கள், இடது சாரி இயக்கங்கள், திராவிட இயக்க எழுச்சி, விவசாயத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் ஆகியவற்றின் பின்னணியில் குறிப்பாக கீழத் தஞ்சையை முன்வைத்து தாளடி என்று இந்த நாவலை எழுதி இருக்கிறார் சீனிவாசன் நடராஜன். இப்பகுதியின் வாழ்வோடு தொடர்புடையவர் ஆசிரியர் என்பதால் வரிக்கு வரி நெல்வயலின் வாசமும், குளங்கள், ஆறுகள், செடிகொடிகள், மாட்டு வண்டிகள் ஆகியவற்றின் […]

Read more

தமிழகத் தடங்கள்

தமிழகத் தடங்கள், மணா, அந்திமழை, விலை: ரூ.300. ஒரு பத்திரிகையாளராகத் தமிழகம் முழுக்க மேற்கொண்ட பயணங்களின் வழியே கிடைத்த கள யதார்த்தங்களைக் கட்டுரையாக்கியிருக்கிறார் மணா. ஏற்கெனவே 40 கட்டுரைகளோடு வெளிவந்த புத்தகத்தின் விரிவாக்கப்பட்ட பதிப்பு இது. ‘சாம்பல் நத்தம்’ தொடங்கி ‘கீழடி’ வரை என 75 இடங்களின் தொகுப்பாகப் பதிவாகியிருக்கும் இந்தக் கட்டுரைகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலகட்ட வரலாற்று சாட்சியங்களாக இருக்கின்றன. நன்றி: தமிழ் இந்து, 08.02.2020. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000000330_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

சோழன் ராஜா ப்ராப்தி

சோழன் ராஜா ப்ராப்தி, எஸ்.எஸ். சிவசங்கர், அந்திமழை, விலை 140ரூ தமிழக அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்ட இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் தனது அரசியல் வாழவிலும் அன்றாட நடைமுறையிலும் சந்தித்துப் பழகியவர்கள் மற்றும் கவிஞர் வைரமுத்து, இசை அமைப்பாளர், இளையராஜா, சோழ மன்னர் ராஜராஜன் உள்பட பலர் தன் மீது ஏற்படுத்திய தாக்கத்தை சிறந்த கட்டுரைகளாக ஆக்கித் துந்து இருக்கிறார். அரசியல்வாதி என்றாலும், கட்சி அரசியல் வாடை எதுவும் இல்லாமல் அவர் தந்து இருக்கும் கட்டுரைகள், அனைத்து தரப்பினரும் படித்து ரசிக்கும் வகையில் உள்ளன. […]

Read more

வெட்டவெளியில் ஒரு கரிசல் கிராமம்

வெட்டவெளியில் ஒரு கரிசல் கிராமம், சமயவேல், மணல்வீடு, விலை 100ரூ. ஊர் நினைவுகள் பாரதி பிறந்த எட்டயபுரம் அருகே வேம்பூர் என்ற கிராமத்தில் பிறந்து இப்போது மதுரையில் வாழ்பவர் கவிஞர் சமயவேல். இவர் தான் பிறந்த கரிசல் சமயவேல். இவர் தான் பிறந்த கரிசல் மண் கிராமத்தின் நினைவுகளை மீட்டெடுக்கும் கட்டுரைகள் அடங்கியது இந்நூல். அந்த கிராமத்தின் வெட்டவெளியை, அது 360 டிகிரியில் காண்பிக்கும் அடிவானத்தை, விளாத்திகுளம் சுவாமியின் பாட்டில் கேட்கும் அந்த வெட்ட வெளியின் இசையை இங்கே பதிவு செய்திருக்கிறார் அவர். பால்யமும் […]

Read more

இயர்புக் 2019

இயர்புக் 2019, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், விலை 160ரூ. பொது அறிவுப் பெட்டகம் போட்டித் தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள் பலனடையும் விதத்தில் நக்கீரன் பதிப்பகம் ஆண்டுதோறும் வெளியிடும் இயர்புக் இந்த ஆண்டும் வெளியிடப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான இந்த நூலில் கடந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகள், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், திட்டங்கள், விருதுகள், தமிழ்நாடு, இந்தியா, விளையாட்டுகள், உலகம் ஆகிய தலைப்புகளில் பொது அறிவுத்தகவல்கள் தரப்பட்டுள்ளன. 1120 பக்கங்கள் கொண்ட இந்நூல் 160 ரூபாய் விலையில் கிடைக்கிறது. தமிழ் வழியில் போட்டித் தேர்வு எழுதுகிறவர்களுக்கு எளிமையான […]

Read more

அகப்பறவை

அகப்பறவை, பூங்குழலி வீரன், அகம் பதிப்பகம், விலை 100ரூ. மரங்களைப் பாடுதல் மரங்கள், மழை, கவிதை குறித்த அனுபவங்கள் இவற்றால் ஆனது மலேசியக் கவிஞர் பூங்குழலி வீரனின் அகப்பறவை என்னும் இக்கவிதைத் தொகுப்பு. மரங்களை தன் உறவுகளாகவும், அவற்றின் பதியன்களை பிரியத்தோடும் நோக்கும் இவரது உலகில் இலைகள் வீழ்வதும் சூரியன் மேற்கே வீழ்வதும் ஒருங்கே நிகழ்கையில் அன்பு முகிழ்கிறது. தொலைபேசியில் இருக்கும் எண்களில் இருந்து இறந்தவர் யாராவது அழைத்துவிடும் அச்சம் மட்டும் அவ்வப்போது வந்து போகிறது -என்கிறார் பூங்குழலி. நம் தொலைபேசியில் இருக்கும் இறந்துபோனவர்களின் […]

Read more
1 2 3 12