தம்மபதம்

தம்மபதம், பெளத்த அறநூல், மொழி பெயர்ப்பு: நல்லி குப்புசாமி செட்டியார், ப்ரெய்ன் பேங்க், பக். 80, விலை ரூ.75. பழைய நீதிநூல்களான அர்த்த சாஸ்திரம், சுக்ர நீதி, பர்த்ருஹரியின் நீதி சதகம், இன்னா நாற்பது இனியவை நாற்பது, வியாச கீதை போன்றவற்றுக்கு எளிய தமிழில் விளக்க நூல்கள் எழுதியது போன்று தம்மபதத்துக்கும் எளிய தமிழில் நூலாசிரியர் விளக்கம் தந்துள்ளார். பாலியில் கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டு, பின்னர் சம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, அதிலிருந்து ஜெர்மனி தத்துவஞானி மாக்ஸ்முல்லரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூலை அடிப்படையாகக் கொண்டு […]

Read more

பார்புகழும் பாம்பன் சுவாமிகள்

பார்புகழும் பாம்பன் சுவாமிகள், கு.சண்முக சுந்தரம், முல்லை பதிப்பகம், பக்.112, விலை ரூ.120. முருகப் பெருமானின் அருள்பெற்ற மகான், தவத்திரு பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல், குமாரஸ்தவம், ஷண்முகக் கவசம், வேற்குழவி வேட்கை, பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் ஆகியவற்றின் மூலமும் உரையும் இணைந்த பதிப்பு இது. ஷண்முகக் கவசப் பாடல்கள் ஆற்றல் மிக்கவை. இதற்குமேல் மந்திரம் எதுவுமில்லை என்று வாரியார் சுவாமிகள் இந்தப் பாடல்கள் குறித்து நூலாசிரியரிடம் சிறப்பித்துக் கூறியுள்ளார். பாம்பன் சுவாமிகள் அம்மை நோயால் மிகவும் துன்புற்ற சமயத்தில் அவரால் இயற்றப்பட்டதுதான் […]

Read more

ஞான வாசிட்டம் மூலமும் உரையும்

ஞான வாசிட்டம் மூலமும் உரையும், பி.சி.ராமலிங்கம், கோவிலூர் மடாலயம், விலைரூ.800. வடமொழியில் யோகவாசிட்டம் என்ற மூல நுாலைத் தமிழில் மொழிபெயர்த்து, வீரை.ஆளவந்தார் அருளிய 2,055 பாடல்களுக்கு மூலத்துடன் உரை வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு விருத்தங்களில் எழுதப்பட்டுள்ள பாடல்களை எளிய வாசிப்புக்காக சீர் பிரித்து பொழிப்புரையும் தந்திருப்பது சிறப்பு. ஞான வாசிட்டத்திற்குப் பல உரைகள் எழுதப்பட்டிருப்பினும், இன்றைய வேதாந்த மாணவர்களுக்கு எளிதில் புரிந்து கொள்வதற்காகவே படைக்கப்பட்டுள்ளது. பாடல்களில் உள்ள கதைகளின் தன்மைகள் பாயிரத்தில் தெளிவாக பாடப்பட்டுள்ளன. பாயிரம் துவங்கி, வைராக்கியம், முமூட்சு, உற்பத்தி, திதி, உபசாந்தி, நிருவாணம் […]

Read more

அழகர் கோயில்

அழகர் கோயில், தொ.பரமசிவன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலைரூ.300 தமிழகத்தில் மிக முக்கியமான வைணவ திருக்கோவில்களில் ஒன்றான அழகர் கோவில் பற்றி ஆராய்ந்து, வரலாற்றுப்பூர்வமாக விரிவான தகவல்களுடன் வெளிவந்துள்ள நுால். கோவிலின் அமைப்பு, தோற்றம், இலக்கியங்களில் உள்ள குறிப்புகள், அழகர் கோவிலின் சமூகத் தொடர்பு என பல விபரங்களை ஆராய்ந்து, துல்லியமான தகவல்களை பதிவு செய்துள்ளது. அந்த வட்டார மக்களுக்கு கோவிலுடன் உள்ள தொடர்பு பற்றியும் விரிவாக ஆராய்கிறது. இதில், கள்ளர் இன மக்கள், இடையர் இன மக்கள், பள்ளர் மற்றும் பறையர் இன […]

Read more

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை, டாக்டர் அபினவம் ராஜகோபாலன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.470. மனிதனுக்கு முக்கியமானது எது. வாழ்க்கை வசதிகளா? மன நிம்மதியா? எல்லா வசதிகளும் படைத்தவர்கள் ஏதோ ஒன்று குறைவதாக கருதி கவலை அடைகின்றனர். எந்த கவலையும் இல்லாத சூழலே மன நிம்மதி. அந்த நிம்மதியை கார், பங்களா, பணம் போன்ற வசதிகள் பெற்றுத் தராது; ஆன்மிகம் மட்டுமே நிம்மதியை கொடுக்கும் என்பதை தெளிவுபடுத்தும் நுால் தான், இன்பமே எந்நாளும் துன்பமில்லை. புத்தக அமைப்பும் புதுமையாக இருக்கிறது. குருவுடன் […]

Read more

சுக வாழ்வு அருளும் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர்

சுக வாழ்வு அருளும் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர், தெள்ளாறு ஈ.மணி, சங்கர் பதிப்பகம், விலைரூ.165. சிவனின் ஒரு வடிவமான, ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு பற்றி விளக்கும் நுால். முறையாக வழிபட்டால் பொன், பொருளை வாரிக் கொடுப்பார் என விளக்குகிறது. பைரவரை வழிபடும் முறை, அவர் ஏந்தியிருக்கும் ஆயுத தத்துவம், வாகனங்கள், கடன் பிரச்னை தீர்க்கும் சொர்ணாகர்ஷண பைரவர் போன்ற தலைப்புகளில் தகவல்கள் உள்ளன.‘உடலே ஆலயம்’ என, திருமந்திரப் பாடலைக் கொண்டு அலசுகிறது. கோவில் கருப்பக்கிரகம், தீபம், சிவலிங்கம் போன்றவற்றுக்கு தத்துவ ரீதியாக விளக்கம் தருகிறது. பைரவர் […]

Read more

சதுரகிரி சித்தர்கள்

சதுரகிரி சித்தர்கள், சி.எஸ்.முருகேசன், சங்கர் பதிப்பகம், விலை: ரூ.300. சித்தர்களின் பூமி எனப்படும் சதுரகிரிக்குச் செல்லும் பயண அனுபவமாக இந்த நூல் விரிவடைகிறது. சதுரகிரி பயணத்தின்போது கண்ட காட்சிகள், அந்த இடம் தொடர்பான தகவல்கள் ஆகியவை பக்திப்பெருக்குடன் விளக்கப்பட்டு இருக்கின்றன. அவை தொடர்பான மரபுவழிக் கதைகள், அமா னுஷ்யமான செய்திகள் ஆகியவையும் தரப்பட்டு இருக்கின்றன. அங்கு செல்வதற்கான ஆபத்தான பாதைகள் குறித்தும், பாதுகாப்பாக எவ்வாறு செல்வது என்பது பற்றியும் தகவல் தரப்பட்டு இருக்கிறது. பெண் சித்தர் ஒருவரின் தரிசனம் கிடைத்த அதிசய தகவல், பாண்டவர்கள் […]

Read more

பகவத் கீதை மகாகவி பாரதியார் உரை

பகவத் கீதை மகாகவி பாரதியார் உரை, பதிப்பாசிரியர்: முனைவர் கி.இராசா, பார்த்திபன் பதிப்பகம்; விலை:ரூ.60. பகவத் கீதையில் உள்ள அத்தனை ஸ்லோகங்களுக்கும் மகாகவி பாரதியார் எழுதிய விளக்க உரை இந்த நூலில் இடம்பெற்றிருக்கிறது. ஒவ்வொரு ஸ்லோகத்துக்கும் அவர் ரத்தினச் சுருக்கமாக சில வரிகளில் உரை எழுதி இருந்தாலும், அவற்றில் ஆழ்ந்த கருத்துகள் பொதிந்து இருக்கின்றன. பாரதியாரின் உரை என்பதால் ஆங்காங்கே கவிதை நடை மிளிர்கிறது. பாரதியார் வேதாந்தி என்பதால் இந்த உரையில் வேதாந்தக் கருத்துகள் மேலோங்கி இருக்கின்றன. பகவத் கீதை, நன்கு தொழில் புரியும்படி […]

Read more

பதிபசு பாசப் பனுவல் மூலமும் உரையும்

பதிபசு பாசப் பனுவல் மூலமும் உரையும், மறைஞானசம்பந்தர், உரையாசிரியர் மறைஞானதேசிகர், டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், பக். 150, விலை ரூ. 135. சைவ நெறியில் சமயக் குரவர் நால்வர் இருப்பதுபோலவே சந்தானக் குரவர் நால்வர் உளர். அவர்கள் மெய்கண்டார், அருணந்தி சிவம், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவம் ஆகியோர். இவர்களுள் அருணந்தி சிவத்தின் மாணாக்கரான மறைஞானசம்பந்தர் எழுதியது இந்நூல். சைவ சித்தாந்தத்தின் நுண்கருத்துகளை விளக்கும் இந்நூலுக்கு காண்டிகை உரை வரைந்திருப்பவர் மறைஞானதேசிகர். ஒவ்வொரு பாடலும் திருக்குறள் போல ஏழு சீர்களோடு ஒன்றேமுக்கால் […]

Read more

தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் பாமாலை

தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் பாமாலை, வெளியீடு: உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், விலை:ரூ.40. நவதிருப்பதிகளில் ஒன்றான தென்திருப்பேரையில் உள்ள தெய்வமான மகர நெடுங்குழைக்காதர் மீது நம்மாழ்வார் பாடிய 100 பாடல்களும், அவற்றின் பொருளை உணர்ந்துகொள்ளுமாறு தமிழ்த்தாத்தா உ.வே.சாமி நாதையர் எழுதிய குறிப்புரையும் இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 17/4/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818  

Read more
1 2 3 128