உத்தவ கீதை

உத்தவ கீதை, தொகுப்புரை: கே.எஸ்.சந்திரசேகரன், வி.மோகன்; சி.பி.ஆர்.பப்ளிகேஷன்ஸ், பக்.192, விலை ரூ.130.   வியாசர் தனது மனம் அமைதியடைய எழுதிய புராணம் ஸ்ரீமத் பாகவதம். இதில் பதினோராம் ஸ்கந்தத்தில் தனது பக்தரும் சிற்றப்பாவின் மகனுமாகிய உத்தவருக்கு ஸ்ரீ கிருஷ்ணன் உபதேசித்ததுதான் உத்தவ கீதை. அவதார நோக்கம்முடிந்து வைகுண்டம் திரும்புவதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் தயாரான நிலையில் அவரை விட்டுப் பிரிய முடியாது கலங்கிய உத்தவருக்கு, பகவத்கீதையில் அர்ச்சுனனுக்கு தான் எடுத்துரைத்த கர்மயோகம், பக்தியோகம் உள்ளிட்ட அனைத்து யோகங்களின் தத்துவங்களையும் முதிர்ந்த அனுபவமிக்க அறிவுரைகளாக ஸ்ரீ கிருஷ்ணர் […]

Read more

திருத்தலங்களைத் தேடி

திருத்தலங்களைத் தேடி, வனஜா இளங்கோவன், மைதிலி வைத்தியநாதன், பத்மா பதிப்பகம், பக்.416, விலை ரூ.320. பாரத நாட்டை ஆன்மிகத்திலிருந்து விலக்கி நிறுத்த இயலாது. நாடு முழுவதும் கோயில்கள் நிறைந்திருக்கின்றன. கோயில்களுக்குச் சென்று வழிபடுவோருக்கு கோயில்களைப் பற்றிய பல்வேறு தகவல்களை இந்நூல் தொகுத்து வழங்குகிறது. இந்நூலின் ஆசிரியர்கள், பல சிறப்புகள் வாய்ந்த ஆலயங்களைத் தரிசித்து, ஒவ்வொரு திருக்கோயிலின் அமைவிடம், செல்லும் வழி, அமைப்பு, சிறப்பு, அதனுடன் தொடர்புடைய தொன்மச் செய்திகள், ஸ்தல விருட்சம் என கோயில் தொடர்புடைய பல தகவல்களைத் தொகுத்துத் தந்திருக்கிறார்கள்.  ஒரு கோயிலுக்குச் […]

Read more

வரம் தரும் அன்னை

வரம் தரும் அன்னை, பா.சு.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.190. இந்து கடவுள் என்றால் இந்தியாவிலிருந்து தான் வரமுடியுமா… பிரான்சிலிருந்தும் பராசக்தி அவதாரம் வெளிப்படலாம்; மகாகாளி உருவெடுக்கலாம்; சரஸ்வதி வீணை மீட்டலாம். மகாலட்சுமி அருட்கடாட்சம் தரலாம் என்பதை உணர்த்தும் நுால். பிரான்சில் இருந்து வந்த மிர்ரா, அன்னையாக மகான் அரவிந்தர் அடியொற்றி, தத்துவங்களை பின்பற்றி நடந்தவர். நீ நீயாய் இரு என்பது தான் அன்னை சொல்லும் வேதம். உண்மை, அன்பு, பாசம் என நற்பண்புகளுடன் விளங்குவது தான் நீயாக இருப்பதன் அவசியம். […]

Read more

பாபாயணம்

பாபாயணம், ஜி.ஏ. பிரபா, விகடன் பிரசுரம், விலைரூ.350. ஷீரடி சாய்பாபா பற்றி ஏராளமான நுால்கள் வந்த வண்ணமாக உள்ளன. பாபா பற்றி, ‘ஆனந்த விகடன்’ இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். பாபாவின் அற்புதமான நிகழ்வுகள், அருட்செயல்கள் அனைத்தும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஷீரடியில் காலை ஆரத்தியில் துவங்கும் இதில், ‘பாபாவும் நானும்’ என்ற தலைப்பில் பிரபலமானவர்களின் அனுபவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவை சிறப்பாக உள்ளன. பக்கம் பக்கமாக பாபாவின் படங்கள் பரவசம் ஊட்டுகின்றன. பாபாவின் பக்தர்களுக்கு நல்ல படைப்பு. – பின்னலுாரான் நன்றி: […]

Read more

திருப்பாவை நாச்சியார் திருமொழி

திருப்பாவை நாச்சியார் திருமொழி, வே.சாய் சத்தியவதி, அருணா பப்ளிகேஷன்ஸ், விலைரூ.120. சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் நோன்பிருந்து பாடிக் கொடுத்த திருப்பாவை முப்பது பாடல்களையும் புரிந்துகொள்ளும்படி, எளிய நடையில் விளக்க உரை கொடுக்கப்பட்டுள்ள நுால். அதுமட்டுமல்ல, நாச்சியார் திருமொழி பதினான்கையும் சந்தி பிரித்து தந்துள்ளது மிக அருமை. இதில் ஆறாம் பத்து பாடல்கள் கண்ணபிரான் தன்னை மணம் செய்த கனவைச் சொல்லும் பாடல்கள். அம்மி மிதிக்கக் கனாக் கண்டால் திருமணம் கைகூடுமே! – சீத்தலைச்சாத்தன் நன்றி: தினமலர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

நாதஜ்யோதி ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் அடிச்சுவட்டில் இசைப்பயணம்

View Post நாதஜ்யோதி ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் அடிச்சுவட்டில் இசைப்பயணம், ரா.கிருஷ்ணன், திருப்புகழ் சங்கமம், விலைரூ.396. கர்நாடக சங்கீத வித்தகர் முத்துஸ்வாமி தீட்சிதர் பாடியுள்ள தலங்களைப் பற்றிய விரிவான யாத்திரை நுால். அவர் பாடியுள்ள 66 தலங்களின் வரலாறு, புராண, இலக்கியச் செய்திகள் இடம் பெற்றுள்ளன. கோவில் அமைப்பு, இறைவன் அருள்பாலிக்கும் விதம், துணை சன்னிதிகள், தீர்த்தகுளம் ஆகியவை பற்றியும் விரிவாக கூறியுள்ளார் தீட்சிதர். அந்த கோவில்களின் தற்போதைய நிலை குறித்து விரிவாக எழுதியுள்ளார் ஆசிரியர். தீட்சிதர் பாடியுள்ள தலங்கள் மற்றும் க்ருதிகளின் பட்டியலைத் […]

Read more

பச்சைப்புடவைக்காரியின் கொத்தடிமை

பச்சைப்புடவைக்காரியின் கொத்தடிமை, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.340 ‘பச்சைப் புடவைக்காரி’ என உச்சரிக்கும்போதே தெய்வத்துடனான நெருக்கமான உறவு புலப்படுகிறது. மனிதனுக்கு மனசாட்சி எப்படி உள்ளுக்குள்ளேயே இருந்து நல்லது, கெட்டதைப் பகுத்தாய்ந்து வழி நடத்துமோ, அவ்வாறு பச்சைப் புடவைக்காரியான அன்னை மீனாட்சி உறுதுணையாக இருந்திருக்கிறார் என்பதை நுால் முழுதும் பல்வேறு சம்பவங்களை மேற்கோள் காட்டி, அலுப்பு ஏற்படாவண்ணம் விவரித்திருக்கிறார் வரலொட்டி ரெங்கசாமி. ஒவ்வொரு மனிதனுக்கும் சொந்த வாழ்விலும், மற்றவர்கள் வாழ்விலும் நிகழும் சில சம்பவங்கள், கடவுள் குறித்த சந்தேகத்தைக் கிளப்புவது […]

Read more

ஸ்ரீமத் பாகவதம்

ஸ்ரீமத் பாகவதம், டி.வி.ராதாகிருஷ்ணன், அருணா பப்ளிகேஷன்ஸ், விலைரூ.230 பகவான் கண்ணனின் அருள் நிறைந்த வரலாறு பாகவதம். உயிர் இனங்களின் பரிணாம வளர்ச்சியை, திருமாலின் அவதாரமாகக் காட்டுகிறது. விஷ்ணுவின் 20க்கும் மேற்பட்ட அவதாரங்களையும், அவதார தத்துவங்களையும், உபதேசங்களையும் சொல்கிறது. கபில அவதாரம் உபதேசிக்கும் சாங்கிய யோகம், எந்த தத்துவமும் சொல்லாத புதுமையானது. கண்ணனைச் சரண் புகுந்தால் மன நிறைவும், குடும்ப வளமும், சமுதாய நலமும் பெறலாம் என்கிறது பாகவதம். பத்து ஸ்கந்தங்களாக பிரிக்கப்பட்டு, 119 தலைப்புகளில் சுவையான கிருஷ்ண லீலைகள் பேசப்படுகின்றன. விஷ்ணுவின் ஒன்பது அவதாரங்களுடன், […]

Read more

நட்சத்திர பலன்களும், ஆன்மிக குறிப்புகளும்

நட்சத்திர பலன்களும், ஆன்மிக குறிப்புகளும், ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.230. பொதுவாக எந்த ஒரு செயலைத் துவங்குவதானாலும், செய்வதாக இருந்தாலும், நாள், நட்சத்திரம், ராசி பலன் பார்த்து செய்வதே வழக்கம். அந்த அளவுக்கு அன்றாட வாழ்வில் முக்கியத்துவம் பெற்றுள்ள நட்சத்திரம், அதன் தமிழ் அர்த்தமும், நட்சத்திர கோவில்கள், நட்சத்திரங்களும் அபிஷேகங்களும், நட்சத்திரத்திற்கான எழுத்துகள், தெய்வங்களும் நட்சத்திரங்களும், ராசியின் பொதுப் பலன்கள், 12 ராசிகளுக்கும் வழிபாட்டு பலன்கள். ராசிக்கான வழிபாடு தானம், 12 ராசிகளுக்குரிய புனித நதிகள், 12 […]

Read more

மகரிஷிகள்

மகரிஷிகள், ஆர்.கல்யாணி மல்லி, ஸ்ரீ ஆனந்த நிலையம், விலைரூ.200. அகத்திய முனிவர் துவங்கி, ஜகத்குரு சங்கராச்சாரியார் மஹா பெரியவர் வரை, 41 கட்டுரைகள் மகரிஷிகளின் வரலாற்றைக் கூறுகின்றன. ஆற்றல் அற்புதங்களை விரிவாகப் பேசுகிறது. சிவபெருமானின் திருமணத்தின் போது இறைவன் அருளாணையின் வழி, அகத்தியர் தெற்கே வந்து பூமியை சமநிலைப்படுத்திய விந்திய மலை பூமியை ஒட்டியவாறு இருப்பது, கடல் நீர் முழுவதும் வற்றச் செய்து பருகியது போன்ற ஆற்றல்களை எளிய நடையில் விளக்குகிறது. துர்வாசர் யார்? அவர் எப்படி வந்தார். அவர் செய்த வீர தீரச் […]

Read more
1 2 3 4 5 128