ஸ்ரீமத் பாகவதம்

ஸ்ரீமத் பாகவதம், டி.வி.ராதாகிருஷ்ணன், அருணா பப்ளிகேஷன்ஸ், விலைரூ.230 பகவான் கண்ணனின் அருள் நிறைந்த வரலாறு பாகவதம். உயிர் இனங்களின் பரிணாம வளர்ச்சியை, திருமாலின் அவதாரமாகக் காட்டுகிறது. விஷ்ணுவின் 20க்கும் மேற்பட்ட அவதாரங்களையும், அவதார தத்துவங்களையும், உபதேசங்களையும் சொல்கிறது. கபில அவதாரம் உபதேசிக்கும் சாங்கிய யோகம், எந்த தத்துவமும் சொல்லாத புதுமையானது. கண்ணனைச் சரண் புகுந்தால் மன நிறைவும், குடும்ப வளமும், சமுதாய நலமும் பெறலாம் என்கிறது பாகவதம். பத்து ஸ்கந்தங்களாக பிரிக்கப்பட்டு, 119 தலைப்புகளில் சுவையான கிருஷ்ண லீலைகள் பேசப்படுகின்றன. விஷ்ணுவின் ஒன்பது அவதாரங்களுடன், […]

Read more

ஸ்ரீமத் பாகவதம்

ஸ்ரீமத் பாகவதம்,  டி.வி.ராதாகிருஷ்ணன், குவிகம் பதிப்பகம்,  பக்.214,  விலை ரூ.180. ஹைந்தவ பக்தி இலக்கியத்தில் மகாபுராணமான ஸ்ரீமத் பாகவதம் சிறப்பான இடத்தை வகிக்கிறது. பகவத்கீதைக்கு அடுத்தபடியாக அதிக உரைகள் இயற்றப்பட்டதும் பாகவதத்துக்குத்தான். சைதன்யர், வல்லபாசார்யரின் பக்தி மார்க்கத்தின் முக்கிய தூண்களில் ஸ்ரீமத் பாகவதமும் ஒன்றாகும். புராண இலக்கியத்தின் கீழ் அமைந்துள்ள இந்த நூல், பக்தி சம்பிரதாய பரவலுக்குப் பெரிதும் அடிப்படையாக அமைந்தது. இதனை இயற்றியவர் வியாசர் என்பது மரபு. நமது புராண இலக்கியங்களின் வடிவத்தையொட்டியே, கதை, கதைக்குள் கதை, கிளைக் கதை என விரிந்து […]

Read more

ஸ்ரீமத் பாகவதம்

ஸ்ரீமத் பாகவதம், ஆர்.சுப்பிரமணியம், சஞ்சய் புக்ஸ், விலை100ரூ. திருமால் அவதாரத்தில் கிருஷ்ணர் முக்கிய பங்கு வகிக்கிறார். கிருஷ்ணரின் பெருமைகளை வர்ணிக்கும் புராணம் ஸ்ரீமத் பாகவதம். இந்நூலில், கண்ணனின் பல நாமங்களை குறிப்பிடும் ஆசிரியர், விஷ்ணு சகஸ்ரநாமத்திலிருந்து மேற்கோள்களையும், பகவத் கீதையிலிருந்து சில ஸ்லோகங்களையும் எடுத்துக்காட்டாக விளக்கியிருக்கிறார். நன்றி: தினமலர், 15/10/2017

Read more

ஸ்ரீமத் பாகவதம்

ஸ்ரீமத் பாகவதம், வர்த்தமானன் வெளியீடு, பக். 900, விலை 300ரூ. மகாபாரதத்தை அருளிய பின்னரும் வியாச முனிவருக்குச் சாந்தி ஏற்படவில்லை. தம் மனக் குறையை நாரதரிடம் தெரிவித்தார். நாரதர், மகாபாரதத்தில் பகவானின் கல்யாண குணங்களைவிடத் தர்மங்களை அதிகமாக விவரித்துள்ளீர். கிருஷ்ண பரமாத்மாவின் மகிமைகளைச் சொல்லவில்லை. அவற்றை விரிவாக வருணிக்கும் நூல் ஒன்றைச் செய்தால் தங்கள் மனம் சாந்தி அடையும் என்றார். வியாசரும் மனமகிழ்வுடன் இந்தப் பாகவதத்தை உண்டாக்கித் தம் தவப் புதல்வரான சுக முனிவருக்கு அருளினார். அவர், மோட்சத்தை விரும்பிய பரீட்சித்து மன்னனுக்கு இதனை […]

Read more