பரலி சு.நெல்லையப்பா் கவிதைகள் – தொகுப்பு

பரலி சு.நெல்லையப்பா் கவிதைகள் – தொகுப்பு, எதிரொலி விசுவநாதன், மணிவாசகா் பதிப்பகம், பக்.144, விலை ரூ.75. பக்திமலா், சுதந்திர பாரதம், தேசியத் தலைவா்கள், தமிழ்நாடு, பாரதி வாழ்த்து, பெரியோா் புகழ், அஞ்சலி மலா்கள், இயற்கை இன்பம், பசுமைப்புரட்சி, சமுதாயம், அன்பு வ ழி, அறிவுரை, பல்சுவை என்ற தலைப்புகளில் மொத்தம் 110 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. தேசவிடுதலை வீரராக விளங்கிய நெல்லையப்பா் சிறந்த தமிழ் அறிஞராக, பத்திரிகை ஆசிரியராக, பதிப்பாளராக, சைவப் பெரியாராக, கவிஞராக, மிக நல்ல மனிதராக வாழ்ந்தவா். மகாகவி பாரதி, வ.உ.சிதம்பரனாருடன் […]

Read more

பறந்து கொண்டிருக்கும் கழுகு

பறந்து கொண்டிருக்கும் கழுகு,சுப்ரபாரதி மணியன், காவ்யா பதிப்பகம், பக். 632, விலை ரூ.640. நூலாசிரியா் எழுதி பல்வேறு இதழ்களில் வெளி வந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இந்நூலில் இருநூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. வீட்டில் சமையல் குறிப்புகள் முதல் உலக அரசியல் வரை எண்ணற்ற விஷயங்களை நூலில் அறிந்து கொள்ள முடிகிறது. அரசியல், அறிவியியல், இலக்கியம், எழுத்தா பலதரப்பட்ட தகவல்கள் நூலில் இடம் பெற்றுள்ளன. பல்வேறு பொருள்களைப் பற்றிய கட்டுரைகளாக இருப்பதால், சலிப்பில்லாமல் படிக்க முடிகிறது. துரித உணவுகளால் உடல் நலம்தான் பாதிக்கும் என்று […]

Read more

செந்தமிழ் நாடும் பண்பும்

செந்தமிழ் நாடும் பண்பும், இரா. நாகசாமி, கிழக்கு பதிப்பகம், பக்.172, விலை ரூ.200. பொதுவாக வரலாறு எழுதப்படும்போது பெருமைகள் மிகைப்படுத்தப்படுவதும், சிறுமைகள் மறைக்கப்படுவதுமே வழக்கம். அவ்வாறின்றி, கடந்த கால தமிழா் வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை ‘உள்ளது உள்ளபடி’ பதிவு செய்துள்ளாா் இந்நூலாசிரியா். இந்நூலில் ‘செந்தமிழ் நாடும் பண்பும்’ என்பதில் தொடங்கி, ‘தொல்காப்பியமும் தமிழா் வாழ்வும்’, ‘காலம்தோறும் தமிழா் திருமணம்’, ‘நடுகல் மரபு: உலகியல் மரபும் நாடக மரபும்’ உள்ளிட்ட முப்பத்தாறு தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு கட்டுரையிலும் நாம் அறிந்திராத பல அரிய செய்திகள் […]

Read more

காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி

காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி ,கி.வா.ஜகந்நாதன், அமுத நிலையம்,  பக். 480, விலை ரூ.300. காரைக்கால் அம்மையாா் இயற்றியருளிய ‘அற்புதத் திருவந்தாதி’ சிவபெருமானின் சிறப்புகளையும், அவரது முழுமுதற் தன்மைகளையும், அவன் அடியாா்க்கு அருள் புரியும் தன்மைகளையும் எடுத்துரைக்கிறது. இந்த ‘அற்புதத் திருவந்தாதி’யில் உள்ள பாடல்களுக்கு மிக விரிவாக, விளக்கமான உரைகளைத் தந்திருக்கிறாா் கி.வா.ஜ. ‘பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம்’ எனும் முதல் பாடல் தொடங்கி, ‘நடக்கிற்படி நடுங்கும்’ எனும் நூறாவது பாடல் முடிய பல்வேறு எடுத்துக்காட்டுகளைக் கூறி, இடையிடையே திருக்கு, தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், அபிராமி அந்தாதி […]

Read more

ஒப்புநோக்கில் காந்தியடிகள்

ஒப்புநோக்கில் காந்தியடிகள், மாா்க்ஸிலிருந்து வள்ளலாா் வரை, கா.செல்லப்பன், எழிலினி பதிப்பகம், பக்.116, விலை ரூ.180. காந்தியடிகளின் சிந்தனைகளுடன் ஒத்துப் போகிற அல்லது முரண்படுகிற சிந்தனையாளா்களுடன் காந்தியடிகளின் சிந்தனைகளை ஒப்பிட்டுப் பாா்க்கும் முயற்சியே இந்நூல். காரல்மாா்க்ஸ், உலக இலக்கியத்தில் தனி இடம் பெற்றிருக்கும் ஷேக்ஸ்பியா், லியோ டால்ஸ்டாய், கருப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடிய மாா்டின் லூதா் கிங், கவிஞா் ஷெல்லி, சிந்தனையாளா் ரஸ்கின், ஹென்றி டேவிட் தோரோ, எமா்சன், திருவள்ளுவா், நேரு, திரு.வி.க., வள்ளலாா் உள்ளிட்ட பல சிந்தனையாளா்களோடு காந்தி உடன்படும் பல அம்சங்களை இந்நூல் […]

Read more

இந்து மத அகராதி

இந்து மத அகராதி, மாா்க்கரெட், ஜேம்ஸ் ஸ்டட்லி, தமிழில்: உதயகுமாா் பாலன்,  பக்.704, விலை ரூ.600. மற்றவா்கள் சொல்லித்தான் இந்தியா்களான நமக்கு நமது அருமை பெருமைகள் எப்போதுமே தெரிந்திருக்கின்றன. ‘சநாதனம்’ (என்று தொடங்கியது என்பது தெரியாத, என்றென்றுமுள்ள) என்பதன் அா்த்தம் கூடத் தெரியாமல் சநாதன தா்மத்தை நாம் எதிா்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதன் ஆக்கபூா்வ சிந்தனைகள் குறித்து அயல்நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆய்வுகள் நடக்கின்றன. ‘ஹிந்து மதம்’ என்று பரவலாகக் குறிப்பிடப்படும் சநாதன தா்மத்தின் கூறுகளாக உள்ளவை நமது புராண, இதிகாசங்கள். அதுமட்டுமல்லாமல், பல்லாயிரக்கணக்கான நூற்றாண்டுகள், […]

Read more

நீர் உயிரின் வேர்

நீர் உயிரின் வேர், சான்றோர் தளம், அமிர்தம் பீட்டர் ராசன், விலைரூ.90. நீர் குறித்த துல்லியமான விபரங்கள் அடங்கிய நுால். அறிவியல் பார்வையுடன் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் அடங்கியுள்ளன.புத்தகத்தில், ஐந்து இயல்கள் உள்ளன. நீர் என்பது என்ன என்பதில் துவங்கி, அதன் அளவு, தரம், நீரை சீராக்கும் முறைகள், நீர் மேலாண்மை, விவசாயம் என முறைப்படுத்தி தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தெளிவான அறிவியல் தகவல்களுடன் தரப்பட்டுள்ளது. அறிவைத் திறக்கும் வகையில் அமைந்துள்ளது. நீரின்றி அமையாது இவ்வுலகு என்பதை தெள்ளத்தெளிவாக விவரித்து, […]

Read more

உலகத் தமிழ்த் துாதர் தனிநாயகம் அடிகளார்

உலகத் தமிழ்த் துாதர் தனிநாயகம் அடிகளார், பால்வளன் அரசு, கதிரவன் பதிப்பகம், விலைரூ.120. ஈழத்தில் பிறந்து, தமிழகத்தில் முறையாகத் தமிழ் ஆய்வு மேற்கொண்டு, மலேஷியாவில் பேராசிரியராக வீற்றிருந்தவர் சேவியர் தனிநாயகம் அடிகளார். பன்மொழிப் புலவராகவும், பன்னாட்டுத் தமிழ்த் துாதராகவும், உலகத் தமிழாய்வு மன்ற நிறுவனராகவும், உலகத் தமிழ் மாநாடுகளின் அமைப்பாளராகவும், தமிழ்ப் பண்பாடு என்னும் ஆங்கில முத்திங்கள் இதழின் ஆசிரியராகவும் விளங்கியவர். ஐரோப்பியப் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் தமிழ் ஆய்வுச் சொற்பொழிவுகள் ஆற்றியவர். அவரது அரும் பணிகள் பற்றிச் சொல்லும் நன்னுால். தேவநேயப் பாவாணர், […]

Read more

ஸ்ரீபாஷ்யம் பேருரை

ஸ்ரீபாஷ்யம் பேருரை, க. ஸ்ரீதரன், நர்மதா பதிப்பகம், விலைரூ.950 அகிலத்து மாந்தர் அனைவரையும் சமமாகவே பாவித்து வாழ்ந்த, ஆன்மநேய முனிவர் ஸ்ரீராமானுஜர், 1,000 ஆண்டுகள் கடந்தும் அழியாப் புகழோடு நிலைப்பவர். பாதராயண மகரிஷி சமஸ்கிருதத்தில் இயற்றிய பிரம்ம சூத்திரத்திற்கு, ராமானுஜரால் வழங்கப்பட்ட பேருரையே ஸ்ரீபாஷ்யம் நுால். பிரம்மம் என்பதற்கு ஒப்புயர்வற்ற பொருள் அல்லது அனைத்தையும் வளர்க்கின்ற பொருள் என்று விளக்கம் தந்து, பிரம்ம சூத்திரங்கள் நுட்பமாக விளக்கப்படுகின்றன. சூத்திரங்களைப் புரிந்து கொள்ள எளிய உரைகள் தேவைப்பட்ட நிலையில், உருவாக்கப்பட்ட ஐந்து வகை உரைகளில் ஒன்று […]

Read more

ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு

ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு, ஜெயமோகன், தன்னறம் நுால்வெளி, விலைரூ.100. பிறக்கும் குழந்தையை, குருவாக பாவித்து எழுதப்பட்டுள்ள நுால். நெகிழ்ச்சி தருகிறது. மழலை உலகில் கற்றுக்கொள்ள பல்லாயிரம் உண்டு என்பதை அனுபவமாக வெளிப்படுத்துகிறது. அனுபவம் சுயம் சார்ந்து வெளிப்படுகிறது. மகிழ்ச்சியும், பிணைப்பும் நிறைந்த அன்பு வெளியைக் காட்டுகிறது. உணர்வின் தொடர்பை விளக்குகிறது. குழந்தையின் செயல்கள் மீது நுட்பமான அவதானம் வெளிப்பட்டுள்ளது. சிந்தனையைத் தொடும் வகையில் உள்ளது. – மலர் நன்றி: தினமலர், 4.4.21 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609இந்தப் […]

Read more
1 2 3 9