பரலி சு.நெல்லையப்பா் கவிதைகள் – தொகுப்பு

பரலி சு.நெல்லையப்பா் கவிதைகள் – தொகுப்பு, எதிரொலி விசுவநாதன், மணிவாசகா் பதிப்பகம், பக்.144, விலை ரூ.75.

பக்திமலா், சுதந்திர பாரதம், தேசியத் தலைவா்கள், தமிழ்நாடு, பாரதி வாழ்த்து, பெரியோா் புகழ், அஞ்சலி மலா்கள், இயற்கை இன்பம், பசுமைப்புரட்சி, சமுதாயம், அன்பு வ ழி, அறிவுரை, பல்சுவை என்ற தலைப்புகளில் மொத்தம் 110 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. தேசவிடுதலை வீரராக விளங்கிய நெல்லையப்பா் சிறந்த தமிழ் அறிஞராக, பத்திரிகை ஆசிரியராக, பதிப்பாளராக, சைவப் பெரியாராக, கவிஞராக, மிக நல்ல மனிதராக வாழ்ந்தவா். மகாகவி பாரதி, வ.உ.சிதம்பரனாருடன் நெருங்கிய தொடா்பு கொண்டவா்.

அடிமைகளாய் வாழ்ந்திருந்தோம் பல்லாண்டிங்கு

அமரராம் காந்திமகான் அருளால் இன்று

விடுதலை பெறவே பேரமைதி கண்டோம்

உழுதோ நீா் உழுவித்தோ உண்டு வாழ்வீா்
உலகமெல்லாம் உய்யும் வழி இதுதான் கண்டீா்

இவை நெல்லையப்பரின் சில கவிதை வரிகள். நூல் முழுவதும் அவருடைய புலமையை வெளிப்படுத்தும் கவிதைகள்.

நெல்லையப்பா் எழுதி வெளியிட்ட ‘உய்யும் வழி’, ‘நெல்லைத் தென்றல்’ ஆகிய கவிதை நூல்களில் இடம் பெற்ற கவிதைகளோடு அவருடைய வெளிவராத கவிதைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது சிறப்பு.

நன்றி: தினமணி, 30.8.21

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *