ஷிா்டி பாபா

ஷிா்டி பாபா, திருப்பூா் கிருஷ்ணன், திருப்பூா் குமரன் பதிப்பகம், பக்.136, விலை ரூ.150. மகான்களின் வரலாற்றை எழுதும்போது அவா்கள் நிகழ்த்திய அற்புதங்களை எழுதுவதைத் தவிா்க்க இயலாது. பல மகான்களின் வரலாறே அற்புதங்களின் தொகுப்புதானே’ என்று வியந்து நூலைத் தொடங்கும் திருப்பூா் கிருஷ்ணன், ஷிா்டி பாபா நிகழ்த்திய பல அற்புதங்களை இந்நூலில் விரித்துரைத்துள்ளாா். அவற்றுள், பலரும் அறியாத ஒன்றுதான் போண்டா பொட்டலத்தின் நூலை இரண்டு தென்னை மரங்களின் இடையே கட்டிவிட்டு அந்த நூலில் பாபா படுத்துறங்கியது.அதேபோல, பாபாவை சுதந்திரப் போராட்டத் தியாகி பால கங்காதர திலகா் […]

Read more

சக்ரவா்த்தி இராஜகோபாலாச்சாரி

சக்ரவா்த்தி இராஜகோபாலாச்சாரி,  ஆா்.கே.மூா்த்தி,  மொழிபெயா்ப்பு- எஸ்.கணேசன், பப்ளிகேஷன்ஸ் டிவிஷன், தகவல் ஒலிபரப்பு அமைச்சகம்,  விலை ரூ.145. சா்வதேச அளவில் தீா்க்கதரிசியென்றும், தலைசிறந்த நிா்வாகி என்றும் போற்றப்படும் ஒருவா், தமிழகத்தில் போதிய மரியாதை பெறவில்லை என்றால், அவா் ராஜாஜி என்று பரவலாக அழைக்கப்படும் சக்ரவா்த்தி இராஜகோபாலாச்சாரியாராகத்தான் இருப்பாா். மூதறிஞா் ராஜாஜி என்று அவா் குறிப்பிடப்பட்டாலும் அவா் குறித்து இன்றைய தலைமுறைக்கு சரியாகவும், முறையாகவும் எடுத்துரைபாரில்லை என்பதுதான் உண்மை. பிராமண சமூகத்தின் பிரதிநிதியாகவும், ஆசார அனுஷ்டான சீலராகவும், சனாதனியாகவும் ராஜாஜி வா்ணிக்கப்பட்டு, அவா் குறித்த தவறான பரப்புரைகள் […]

Read more

சிலப்பதிகாரம் கேள்விகள் ஆயிரம்

சிலப்பதிகாரம் கேள்விகள் ஆயிரம், மு. கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம்,   பக்.192. விலை ரூ.200.  தமிழா்களின் காப்பியம் என்று அழைக்கப்படும் சிலப்பதிகாரத்தின் கதையைத் தெரியாதவா்கள் தமிழா்களாக இருக்க இயலாது. கோவலன்-கண்ணகி-மாதவி; சேர-சோழ-பாண்டியா்; இயல்-இசை-நாடகம் என்று சிலப்பதிகாரம் பல முப்பரிமாணங்களைத் தன்னுள் கொண்டதாகத் திகழ்கிறது. சிலப்பதிகாரத்துக்கு 11-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அரும்பதவுரையும், 12-ஆம் நூற்றாண்டில் அடியாா்க்கு நல்லாா் எழுதிய உரையும் அந்தக் காப்பிய நுட்பங்களை அறிந்துணர உதவுகின்றன. அடியாா்க்கு நல்லாா் உரையிலிருந்து அவரது காலத்தில் சிலப்பதிகாரம் போலவே பல இசை நாடக நூல்கள் வழக்கில் இருந்தன […]

Read more

மருக்கொழுந்து – 2 தொகுதிகள்

மருக்கொழுந்து – 2 தொகுதிகள், கொத்தமங்கலம் சுப்பு கவிதைகள், லஷ்மி இராமச்சந்திரன், மீனாட்சி பதிப்பகம், விலைரூ.800 தில்லானா மோகனாம்பாள் என்ற கதையை எழுதியவர் பிரபல எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்பு. அந்த கதை தமிழகத்தை கலக்கியது. சினிமாகவும் வந்து கவர்ந்தது. அவர் சிறந்த கவிஞராகவும் இருந்தார். அவர் புனைந்துள்ள கவிதைகளை, தொகுத்து நுாலாக்கியுள்ளார், அவரது மகள் லஷ்மி. இரு புத்தகங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. முதல் தொகுதியாக உள்ள புத்தகத்தில், பண்டிகை, அறிவுரை, காதல், நாட்டு நடப்பு, நாட்டுப்பற்று என்ற பொருண்மைகளை பேசுகிறது. எளிய நடையில் அமைந்துள்ளன. ‘கார் […]

Read more

மருதநாயகம்

மருதநாயகம், சு.சண்முகசுந்தரம், காவ்யா பதிப்பகம், விலைரூ.500 அ.மாதவையாவின் கான்சாயபு கம்மந்தான், துர்க்காதாஸ் எஸ்.கே. ஸ்வாமியின் கான்சாகிபு கம்மந்தான், பேரா. ந.சஞ்சீவியின் கும்மந்தான் கான்சாகிபு, பேராசிரியர் ந.வானமாமலையின் கான்சாகிபு சண்டை, முனைவர் ந.இராசையாவின் மருதநாயகம் உண்மை வரலாறு என்னும் ஐந்து நுால்களையும் ஒன்றாக பதிப்பித்து தொகுப்பாக வந்துள்ள நுால். மருதநாயகம் வரலாற்றை, நுாலில் முதல் பகுதியில், 35 பக்கங்களில் விரிவாக எழுதியுள்ளார் பதிப்பாசிரியர். அது ஒரு தனி வரலாற்று நுாலாகும் அளவிற்கு அமைந்துள்ளது. மருதநாயகம் யார், எந்த மதத்தைச் சேர்ந்தவர், எப்படிப்பட்டவர் போன்ற கேள்விகளுக்கு எல்லாம் […]

Read more

நீங்களும் ஒரு நிமிட சாதனையாளர் தான்

நீங்களும் ஒரு நிமிட சாதனையாளர் தான், லேனா தமிழ்வாணன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.200. நேரத்தின் முக்கியத்துவம் உணர்ந்தால் முன்னேற்றம் சுலபமாகும். இந்த பேருண்மையை, பொருண்மையாக்கியுள்ள நுால். கவரும், 91 தலைப்புகளில் தொகுக்கப்பட்டு உள்ளது. ‘குமுதம்’ இதழில் தொடராக வந்தது. படித்தால், முன்னேற்றத்தின் முட்டுக்கட்டை உடையும். அன்றாடம் தவறும் சிறு விஷயங்களையும் கவனித்து, அனுபவத்துடன் கோர்த்து, வாழ்க்கை பாடமாக எழுதப்பட்டுள்ளது. சுலபமாக புரியும் மொழிநடையில் உள்ளது. ‘புத்தகம் வாங்குவது செலவல்ல, முதலீடு. ஒரு புத்தகத்தில் கிடைக்கும் அனுபவப்பாடம், வாழ்க்கை பார்வையையே மாற்றிவிட வல்லது. இந்த புதிய […]

Read more

ஒளி வித்தகர்கள்

ஒளி வித்தகர்கள், ஜா.தீபா, டிஸ்கவரி புக் பேலஸ், விலைரூ.150 கதையை காட்சி வடிவில் கண்முன் நிறுத்துவதில் முக்கிய பங்காற்றுபவர் ஒளிப்பதிவாளர். இயற்கை வளங்கள், விலங்குகள், அவற்றின் உடல் அசைவுகள், குணாதிசயங்கள், மனிதர்களின் ஆசாபாசங்களை நுட்பமாக காட்டுவது, அந்த கலையின் பரிணாமம். ஒளிப்பதிவு கலை பற்றி பேசுகிறது. ‘மாஸ்டர்ஸ் ஆப் லைட்’ என்ற ஆங்கில நுாலின், தமிழாக்கம். கதை காட்சியை, ஒரு நாளில் எந்த நேரத்தில் எந்த ஒளியில் எடுத்தால் சிறப்பாக இருக்கும்; ஒளிப்பதிவாளருக்கு, ஓவியம் எப்படி உதவி செய்யும்; கேமரா நகர்வு எப்படி இருக்க […]

Read more

சிந்தனை செய் மனமே

சிந்தனை செய் மனமே, டாக்டர் து.சி.இராமையா, நெய்தல் பதிப்பகம், விலைரூ.150 கூட்டாஞ்சோறு போல கவிதை, பாட்டு, துளிப்பா, கட்டுரை, துணுக்கு, சிறுகதை, பாரம்பரிய உணவுகள் என பல்சுவையாக படைக்கப்பட்டுள்ள நுால்; உருக்கமான கட்டுரைகளும் உண்டு. ‘என்னை குனிந்து பார் உன்னை பிறர் அண்ணாந்து பார்க்கும் நிலைக்கு வைப்பேன்’ என, முன்னாள் ஜனாதிபதி, மறைந்த அப்துல் கலாம் பற்றிய குறுங்கவிதையும் இந்த நுாலில் உள்ளது. – சுப வெங்க் நன்றி: தினமலர், 6/9/20. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030691_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

சிவா – விஷ்ணு ஆலயங்கள்

சிவா – விஷ்ணு ஆலயங்கள், ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு, ஆசிரியர் வெளியீடு, விலைரூ.200. சிவா விஷ்ணு ஆலயங்கள், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் எங்கெங்கு உள்ளன என்பன பற்றிய தகவல்களும், கோவில் அமைப்பு, சிறப்பு பற்றி தெளிவாக எழுதப்பட்டுள்ள நுால். ஐயப்பன், பைரவர், வீரபத்திரன் கோவில்கள் அமைந்துள்ள இடங்கள், வழிபாட்டு நேரம், பூஜை காலம் பற்றிய தகவல்களுடன், பரிகார விளக்கத்தையும் விரிவாக தருகிறது. சிவன், யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம் தெட்சிணாமூர்த்தி, அம்பிகை, மயில் வடிவில் இறைவனை பூஜித்த தலம் மயிலாப்பூர், சிவபெருமான் […]

Read more

புதிய பார்வையில் ராமாயணம்

புதிய பார்வையில் ராமாயணம், பிரபு சங்கர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.320 எளிமைக்கு உதாரணம் இந்த புதிய ராமாயணம். சொல்ல சொல்ல இனிக்குதடா… என்பது போல, படிக்க படிக்க பரவசம் தருகிறது. ராமா… உன் கருணை எத்தனை… என மனம் வியந்து கொண்டே கதைக்குள் செல்கிறது. சில மவுனங்கள் சில விளக்கங்களாய் ஐயம் திரிபுற விளக்குகிறார் ஆசிரியர். சில கதாபாத்திரங்கள் ராமனோடு பேசும் போது, அந்த கதாபாத்திரங்களின் பிரமிப்பை நம் மனம் அப்படியே உள்வாங்குகிறது. நம் இருவர் தொழிலும் ஒன்று தானே […]

Read more
1 2 3