பச்சையம் என்பது பச்சை ரத்தம்

பச்சையம் என்பது பச்சை ரத்தம், பிருந்தா பார்த்தசாரதி, படைப்பு பதிப்பகம், விலைரூ.100. தாவரங்களை கருப்பொருளாகவும், உரிப்பொருளாகவும் கொண்டு எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். இயற்கையை எண்ணி எழுதியுள்ளார் நுாலாசிரியர். நீண்ட முன்னுரையுடன் கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. மண்ணைத் தோண்டி கிழங்கு எடுத்தேன்; கருணையின் வாசனை என்று ஒரு கவிதை. புலி உறுமியது; பயப்படாமல் நிமிர்ந்தே நிற்கிறது சிறு புல் போன்ற சுவாரசியமான சிறு கவிதைகள் உள்ளன. வங்காரி மாத்தாய், பூக்கோ போன்ற சூழல் பாதுகாப்பு முன்னோடிகளின் பொன்மொழியும் தொகுப்பில் உள்ளது. நன்றி: தினமலர், 4.4.21 இந்தப் […]

Read more

அமுதே! தமிழே! அருமருந்தே!

அமுதே! தமிழே! அருமருந்தே!, மா.கி.ரமணன், பூங்கொடி பதிப்பகம், விலைரூ.180. எளிய தமிழில், 27 கட்டுரைகளில் பக்தி இலக்கியச் சிந்தனைகளைப் படைத்துள்ளார். உடல் நோய்க்கும், மன நோய்க்கும் மருந்து வழங்கும் வல்லமை படைத்தது திருக்குறள் என துவங்கி, திரையிசைக் கவியரசர் மூவர் என்ற கட்டுரையுடன் நிறைவு செய்து உள்ளார். தமிழ் மொழியின் பழமை முதற்கொண்டு புதுமை வரை, படையல் ஆக்கியுள்ளார். திருமந்திரத்தில் உடல் நோய், மன நோய், மூளை நோய், பிறவி நோய் நீக்கும் மருத்துவ முறைகள் சொல்லப்பட்டுள்ள தன்மையை விளக்கியுள்ளார். இசையால் இசைவான் இறைவன் […]

Read more

இதுதான் வைரல்

இதுதான் வைரல், ஹேமபிரபா, பாரதி புத்தகாலயம், விலைரூ.90. அறிவியல் பார்வையில் கொரோனா வைரஸ் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். தகவல்கள் முழுமையாக உள்ளன. மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணிபுரிபவரே எழுதியுள்ளார். வைரஸ் குறித்த வதந்திகளையும் விளக்கி தெளிவு ஏற்படுத்துவம் வகையில் அமைந்துள்ளது. தொற்று பரவல் குறித்து அறிவியல் ரீதியாக விளக்கி, நுட்பமான வகையில் தகவல்களை எளிய நடையில் விவரித்துள்ளார். வைரஸ் பரவும் விதத்தை விளக்கி, கட்டுப்படுத்துவதில் கடைப் பிடிக்க வேண்டிய நடைமுறை, முன் எச்சரிக்கை செயல்பாடுகள் குறித்தும் விளக்கியுள்ளார். பெருந்தொற்று நிலவும் காலத்தில், விழிப்புணர்வு […]

Read more

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, வானொலி அண்ணா என்.சி.ஞானப்பிரகாசம், கற்பகவித்யா பதிப்பகம், விலைரூ.120. தினத்தந்தி அதிபர் மறைந்த பா.சிவந்தி ஆதித்தனார் வாழ்க்கை வரலாறை சுருக்கமாக சொல்லும் நுால்; 27 அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்னும் தொடருக்கு ஏற்ப, சி.பா.ஆதித்தனாரின் பத்திரிகை கொள்கையை அப்படியே பின்பற்றினார் என்ற தகவலையும் தெரிவித்துள்ளார். அத்தியாயங்களின் நிறைவில் சி.பா.ஆதித்தனாரின் படமும், அவரது பொன்மொழிகளும் பொறிக்கப்பட்டுள்ளன. பேசுவதில் மட்டும் அல்ல, எழுதுவதிலும் தனிச்சிறப்பு பெற்றவர் வானொலி அண்ணா என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது இந்த நுால். நன்றி: தினமலர், […]

Read more

தி டே ஆஃப் தி ஜக்கால்

தி டே ஆஃப் தி ஜக்கால், பிரெடரிக் ஃபோர்சித், தமிழில் என்.ராமச்சந்திரன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 352, விலை ரூ.200. பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியை ஒரு பயங்கரவாதக் கும்பல் கொலை செய்ய முயற்சிப்பதை அந்நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் முறியடிக்கின்றன. ஆங்கிலத்தில் எழுதப்பட்டு உலக அளவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட துப்பறியும் நாவலின் தமிழாக்கமே இந்நூல்.< பிரான்ஸின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெனரல் சார்லஸ் டி கால் (1890-1970) தனது நாட்டின் காலனி ஆதிக்கத்துக்குள்பட்டிருந்த அல்ஜீரியாவுக்கு சுதந்திரம் அளிக்கிறார். இது அல்ஜீரியாவில் இருந்த பிரெஞ்ச் ராணுவத்தின் […]

Read more

நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?

நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?, முனைவர் ப.பாலசுப்ரமணியன், அழகு பதிப்பகம், விலைரூ.130 தேர்வாளர்கள் ஒரு கேள்வியை கேட்டு முடிக்கும் வரை பொறுத்திருக்க வேண்டும். குறுக்கே நீங்கள் பேசக் கூடாது. அது கேள்வி கேட்போருக்கு அதிருப்தியை அளிக்கும். கேள்விகள் கேட்கப்படும்போது அவற்றை ஆர்வத்துடன் செவி மடுக்க வேண்டும். முகத்தை உற்சாகமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். அளவற்ற ஆர்வம் தான் தேர்வு நடத்துவோரை அதிகமாக ஈர்க்கும். உற்சாகத்தோடு பணி செய்யும் நபர் என்ற நல்ல எண்ணத்தை ஏற்படுத்தும் என்றெல்லாம் நுாலாசிரியர் சொல்லும் அறிவுரைகள் பயன் உள்ளவை! […]

Read more

தமிழ்நாட்டில் சர் தாமஸ் மன்றோ

தமிழ்நாட்டில் சர் தாமஸ் மன்றோ, இடைப்பாடி அமுதன், அனுராதா பதிப்பகம், பக்.336, விலை ரூ.275. கி.பி.1780- இல் இங்கிலாந்திலிருந்து சென்னைக்கு வந்து 47 ஆண்டுகள் இங்கு வாழ்ந்தவர் தாமஸ் மன்றோ. அவர் சேலத்தில் கலெக்டராக இருந்த ரீடு என்பவருக்கு உதவியாளராக – உதவி கலெக்டராக பணிபுரிந்திருக்கிறார். அவர் தனது நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எழுதிய கடிதங்களில் அக்காலத் தமிழ்நாட்டைப் பற்றிய பல அரிய தகவல்கள் கிடைக்கின்றன. தாமஸ் மன்றோ தனது தந்தைக்கு எழுதிய ஒரு கடிதத்தின் மூலம் அக்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த பெண்களின் நிலையைத் தெரிந்து […]

Read more

அறிஞர் கோவை ஞானி கடிதமும் கருத்தும்

அறிஞர் கோவை ஞானி கடிதமும் கருத்தும், சிலம்பு நா.செல்வராசு, அனிச்சம் வெளியீடு, விலைரூ.20. கோவை ஞானி – சிலம்பு செல்வராசு இடையே நடந்த கடித தொடர்பு விபரம் முதற்பகுதியாகவும், தமிழின் ஆக்கம் தடையும் விடையும் என்ற கட்டுரை இரண்டாம் பகுதியாகவும் அமைந்த குறுநுால். காரசார விவாதத்துக்குரிய நுால். தமிழின உள் முரண்பாடுகள் குறித்தும், இனவரைவியல் குறித்தும் பேசும் கட்டுரை கவனிக்கத்தக்க ஒன்றாகும். தமிழர் வாழ்வியல் சடங்குகளில் செய்த மாற்றங்கள், எத்தகு பயனை விளைவித்து வருகின்றன என்பதை எடுத்துக்காட்டும் கட்டுரை குறிப்பிடத்தக்கது. தமிழின ஆக்கத்திற்கான தடைகள் […]

Read more

தமிழருவி மணியன் சிறுகதைகள்

தமிழருவி மணியன் சிறுகதைகள், தமிழருவிமணியன், கற்பகம் புத்தகாலயம், பக்.144, விலை ரூ.130. நூலாசிரியரின் ஆறு சிறுகதைகள் அடங்கிய முதல் சிறுகதைத் தொகுப்பு. “ஒற்றைச் சிறகு’ சிறுகதையின் நாயகன் குமரேசன், சரியோ தவறோ கொடுப்பவனாகவே இறுதிவரை இருக்க வேண்டும் என்று பிடிவாதம் கொண்டவர். “தவறான வாழ்க்கைப் புரிதலோடு ஒடுங்கிப் போய்விட்டான்’ என்று அவருடைய மரணத்தின்போது வேதனைப்படுகிறார் அவருடைய ஆப்த நண்பர் ஆனந்தமூர்த்தி. கைம்மாறு கருதாத அன்பு இந்த உலகத்தில் உண்டா என்ற கேள்விக்கு விடை காண முயலும் படைப்பு. மதுவினால் குலைந்துபோகும் குடும்பத்தைக் கண்முன் நிறுத்துகிறது, […]

Read more

திருமூலர் அருளிய திருமந்திர விளக்கம்

திருமூலர் அருளிய திருமந்திர விளக்கம், ம.கணபதி, மணிவாசகர் பதிப்பகம், பக்.232, விலை ரூ.300. தேவாரம், திருவாசகத்தை விரும்பிப் படிக்கும் பலரும் திருமந்திரத்தைப் படிப்பதில்லை. ஏனெனில் அதன் பொருள் எளிதில் விளங்காது என்று அவர்கள் கருதுவதாலேயே. அவர்கள் அவ்வாறு கருதுவது ஒருவகையில் சரியானதே. பெரும்பாலான திருமந்திர உரைகள் கற்பதற்கு கடினமாகவே உள்ளன. அக்குறையைப் போக்கியிருக்கிறது இந்நூல். மூவாயிரம் பாடல்கள் அடங்கிய திருமந்திரத்தின் (மூலம் உரைசெய்த மூவாயிரம் தமிழ்) ஒன்பது உட்பிரிவுகளிலிருந்தும் (தந்திரங்கள்) முக்கியமான பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு எளிய நடையில் உரையும் வழங்கியுள்ளார் இந்நூலாசிரியர். உயரிய […]

Read more
1 2 3 4 9