திருமுருகாற்றுப்படை விளக்கம்

திருமுருகாற்றுப்படை விளக்கம்,  கி.வா.ஜகந்நாதன், பூங்குன்றன் பதிப்பகம்,  பக்.384, விலை ரூ.300. திருமுருக கிருபானந்தவாரியார் நடத்திய ” திருப்புகழ் அமிர்தம்’ என்ற இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். முருகனை இன்ன வழியில் சென்று, இன்ன இடத்தில் கண்டால் முருகனுடைய தரிசனம் கிட்டும், அவன் திருவருளையும் பெறலாம் என்று சொல்லும் வகையில் அமைந்தது திருமுருகாற்றுப்படை.<br>திருமுருகாற்றுப்படைக்கு பிற்காலத்தில் பத்து வெண்பாக்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கான பொருளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது. முருகனின் அறுபடை வீடுகள் குறித்த, திருமுருகாற்றுப்படையின் ஒவ்வொரு வரியையும் எடுத்துக் கொண்டு, அதற்கான பொருளைக் கூறும் […]

Read more

காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி

காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி ,கி.வா.ஜகந்நாதன், அமுத நிலையம்,  பக். 480, விலை ரூ.300. காரைக்கால் அம்மையாா் இயற்றியருளிய ‘அற்புதத் திருவந்தாதி’ சிவபெருமானின் சிறப்புகளையும், அவரது முழுமுதற் தன்மைகளையும், அவன் அடியாா்க்கு அருள் புரியும் தன்மைகளையும் எடுத்துரைக்கிறது. இந்த ‘அற்புதத் திருவந்தாதி’யில் உள்ள பாடல்களுக்கு மிக விரிவாக, விளக்கமான உரைகளைத் தந்திருக்கிறாா் கி.வா.ஜ. ‘பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம்’ எனும் முதல் பாடல் தொடங்கி, ‘நடக்கிற்படி நடுங்கும்’ எனும் நூறாவது பாடல் முடிய பல்வேறு எடுத்துக்காட்டுகளைக் கூறி, இடையிடையே திருக்கு, தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், அபிராமி அந்தாதி […]

Read more