நாகராஜா கோவில்

நாகராஜா கோவில்,  சிவ.விவேகானந்தன்,  காவ்யா பதிப்பகம், பக். 306. விலை  ரூ.300. கன்னியாகுமரி மாவட்டத் தலைநகரான நாகர்கோவில் என்ற ஊரின் பெயருக்கு காரணமாக அமைந்த நாகராஜா கோயில் குறித்த ஆய்வு நூல் இது. கோயில் அமைப்பு, கட்டடக் கலை, சிற்பக் கலை, வழிபாடு, திருவிழாக்கள் உள்ளிட்டவை குறித்து அரிய தகவல்களுடன் விளக்கியுள்ளார் நூலாசிரியர். ஒரு காலத்தில் சமணக் கோயிலாக இருந்து, இப்போது சமண, சைவ, வைணவக் கோயிலாக நாகராஜா கோயில் மாறிய வரலாறு விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கோயில் அமைப்பு மற்றும் கட்டடக் கலை குறித்து […]

Read more

பள்ளு இலக்கியம் மறுகட்டமைப்பு

பள்ளு இலக்கியம் மறுகட்டமைப்பு,  தே.ஞானசேகரன், காவ்யா பதிப்பகம், பக். 253,  விலை ரூ.270. பள்ளு இலக்கியங்களின் தோற்றம், வளர்ச்சி, தமிழ் இலக்கியங்களில் மருத நில மக்கள், மள்ளர்களின் வீரம், பெருமை, ஆட்சி அதிகாரம், வரலாற்று கதைகள் ஆகியவை இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அதிகாரத்தில் இருந்த மள்ளர்கள் 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயர்களால் பட்டியலினத்திற்குக் கொண்டுவரப்பட்ட விதமும் கூறப்பட்டுள்ளது. இந்தச் சமூக மக்களின் வாழ்வியல் முறைகள், குலப் பெயர்கள், குடும்ப முறைகள், அவர்களின் வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை எளிய தமிழில் நூலாசிரியர் […]

Read more

பறந்து கொண்டிருக்கும் கழுகு

பறந்து கொண்டிருக்கும் கழுகு,சுப்ரபாரதி மணியன், காவ்யா பதிப்பகம், பக். 632, விலை ரூ.640. நூலாசிரியா் எழுதி பல்வேறு இதழ்களில் வெளி வந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இந்நூலில் இருநூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. வீட்டில் சமையல் குறிப்புகள் முதல் உலக அரசியல் வரை எண்ணற்ற விஷயங்களை நூலில் அறிந்து கொள்ள முடிகிறது. அரசியல், அறிவியியல், இலக்கியம், எழுத்தா பலதரப்பட்ட தகவல்கள் நூலில் இடம் பெற்றுள்ளன. பல்வேறு பொருள்களைப் பற்றிய கட்டுரைகளாக இருப்பதால், சலிப்பில்லாமல் படிக்க முடிகிறது. துரித உணவுகளால் உடல் நலம்தான் பாதிக்கும் என்று […]

Read more

விந்தன் கதைகள்

விந்தன் கதைகள், தொகுப்பும் பதிப்பும் சு.சண்முகசுந்தரம், காவ்யா பதிப்பகம், பக். 1121; ரூ.1,100. அச்சுக் கோர்ப்புத் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி எழுத்தாளர், கவிஞர், கதாசிரியர், கட்டுரையாளர், திரைக்கதை வசனகர்த்தா எனப் பன்முகத் திறமையாளராக தன்னை வெளிப்படுத்தியவர் விந்தன். 1939 முதல் சுமார் 25 வருடங்கள்அன்றைய பல்வேறு முன்னணி இதழ்களில் அவர் எழுதி வெளிவந்த சிறுகதைகள், குட்டிக்கதைகள், மிஸ்டர் விக்ரமாதித்தன் கதைகள் ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பே இந்நூல். இந்நூலில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் எளிய மக்களின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டவை. அவர்கள் அன்றாடம் சந்திக்கும் அடிப்படைப் […]

Read more

தேவேந்திர குல வேளாளர் வரலாறு

தேவேந்திர குல வேளாளர் வரலாறு, தே.ஞானசேகரன், காவ்யா பதிப்பகம்,  பக்கம் 160,  விலை ரூ.170 . கடந்த 2000-ஆம் ஆண்டு மள்ளர் சமூக வரலாறு என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்தநூல், தற்போது தேவேந்திரகுல வேளாளர் வரலாறு என்ற பெயரில் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மருத நில உழவர் பெருமக்களான தேவேந்திர குல வேளாளர்களின் தோற்ற வரலாறு 12 கதைகள் மூலமும், தொல்காப்பியச் சான்று, இலக்கியம், கல்வெட்டுச் சான்றுகள், நாட்டுப்புற வழக்காறு, பள்ளு நூல்கள், சடங்கு பாடல்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் தொகுக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் […]

Read more

பாகவதப் பாரதம்

பாகவதப் பாரதம், டாக்டர் சிவ. விவேகானந்தன், காவ்யா பதிப்பகம், விலைரூ.600 பகவான் கண்ணனின் வரலாறு கூறுவது பாகவதம். கண்ணன், பாண்டவரை வழிநடத்தி சென்றது மகாபாரதம். இரண்டு மகா காவியங்களையும் இணைத்து, அம்மானை என்ற செய்யுள் யாப்பு வடிவில், 24 ஆயிரம் பாடல்களாக இயற்றப்பட்டுள்ள நுால். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீபல்பனாப புலவர், பனையோலைச் சுவடியில் வில்லுப் பாட்டு கலை வடிவத்தில் எழுதி உருவாக்கியிருந்தார். இதை தேடி கண்டுபிடித்து புத்தகமாக பதிப்பித்துள்ளார் சிவ.விவேகானந்தன். பாமரரும் படித்து மகிழும் வகையில், உரைநடைக் காப்பிய நுாலாக உள்ளது. முதலில் […]

Read more

தேவதாசி முறை காலமும் கருத்தும்

தேவதாசி முறை காலமும் கருத்தும், முனைவர் கல்யாணி பிரபாகரன், காவ்யா பதிப்பகம், விலைரூ.400 மன்னர்கள், தேவதாசிகளை, இறைத்தொண்டு புரிவதற்காக கோவில்களில் நியமித்தனர். அதற்காக நிலங்களும் வழங்கப்பட்டன. தேவரடியார் எனப்படும் இவர்கள் ஆடல், பாடல், கோவில் பராமரிப்பு மற்றும் கோவில் பணிக்கான யாவற்றையும் செய்து வந்தனர். இவர்களைப் பற்றி பல நுால்கள் வெளி வந்துள்ளன. இந்நுால் முனைவர் பட்ட ஆய்வு.பதினேழு கட்டுரைகளில், தேவதாசி இன வரலாற்றை முழுமையாக ஆய்ந்து எழுதியிருக்கிறார். தேவதாசிகள் பெரும்பாலும் நடன மாதர்களாகவும் இருந்துள்ளனர். உலக அளவிலும், இந்தியாவிலும் கோவில்களில் இத்தகைய பெண்கள் […]

Read more

கல்யாணி

கல்யாணி, வல்லிக்கண்ணன், காவ்யா பதிப்பகம், ரூ.580. படிப்பதையும், எழுதுவதையுமே வாழ்க்கையாகக் கொண்டு வாழ்ந்தவர், பிரபல எழுத்தாளர் வல்லிக்கண்ணன். அவரது புனைவுகள் அற்புதமானவை; நுட்பமானவை. அந்த கால சமூகத்தை படம் பிடிப்பவை. அவை, சிறுகதைகளாகவும் மலர்ந்துள்ளன. அவற்றில் ஒரு பகுதியை தொகுத்துள்ள நுால். கடந்த, 1955 முதல், 1991 வரை எழுதியவை தொகுக்கப்பட்டுள்ளன. நெஞ்சுக்கு நீதியாக விளங்குகிறது. தமிழ் இலக்கியத்தில் பொக்கிஷமாக போற்ற வேண்டியது! – எஸ்.குரு. நன்றி:தினமலர், 26/7/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

தென்னாட்டு ஜமீன்கள்

தென்னாட்டு ஜமீன்கள், முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா பதிப்பகம், விலை: ரூ.1000. பத்திரிகையாளரும் வரலாற்று எழுத்தாளருமான முத்தாலங்குறிச்சி காமராசு, நெல்லைச் சீமையின் அரசியல், பண்பாட்டு வரலாற்றை வெவ்வேறு கோணங்களிலிருந்து தொடர்ந்து எழுதிவருபவர். தேரிக்காட்டு ஜமீன்தார்கள் என்ற தலைப்பில் ஏற்கெனவே நூல் எழுதியிருக்கும் காமராசு, இந்தப் புதிய நூலில் மறவர் ஜமீன்கள், நாயக்கர் ஜமீன்கள், மற்றையோர் என 18 ஜமீன்களின் வரலாற்றை மிக விரிவாக அளித்திருக்கிறார். ஜமீன்களின் வம்சாவளியினர், அவர்களின் வாழ்க்கைமுறை, தொடர்புடைய கோயில்கள், திருவிழாக்கள், இன்றும் அவர்களுக்குத் தொடரும் பாரம்பரிய மரியாதை என்று கடந்த சில […]

Read more

நெல்லை மறவர் கதைப்பாடல்கள்

நெல்லை மறவர் கதைப்பாடல்கள், பேரா.சு.சண்முகசுந்தரம், காவ்யா பதிப்பகம், பக். 372, விலை 400ரூ. முக்குலத்தோரில் மறவர்கள் ஒரு பிரிவினர். இவர்கள் ராமநாதபுரத்திலிருந்து புலம்பெயர்ந்து, நெல்லைச் சீமையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வீரம், காவல் உரிமை, மான உணர்வு, கொள்கை போன்றவற்றால் முதன்மையாகி தெய்வமாகிய முன்னோரை, கதை வடிவில் பாடப்படும் நுாலைப் படைத்துள்ள ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். – த.பாலாஜி நன்றி: தினமலர், 23/2/20. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000030004.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more
1 2 3 4