டிசிஎஸ் – ஒரு வெற்றிக் கதை

டிசிஎஸ் – ஒரு வெற்றிக் கதை, எஸ்.ராமதுரை, தமிழில் – கி.இராமன், கிழக்கு பதிப்பகம், பக். 456, விலை ரூ.550. டிசிஎஸ் நிறுவனத்தின் வளர்ச்சியோடு தனது வாழ்க்கையை நகர்த்தியவரும், அதன் தலைமைப் பொறுப்பை வகித்தவருமான ராமதுரையால் எழுதப்பட்டது இந்நூல். தன்னம்பிக்கை பேச்சாளர்கள் நூறு மணி நேரம் பேசினாலும்கூட கிடைக்காத உத்வேகத்தை தனித்து நின்று ஜெயித்துக் காட்டிய ஒருவரது கதை தந்துவிடும் என்பதை உணர்த்தும் நூல் இது. டாடா கன்சல்டன்ஸி சர்வீஸ் எனப்படும் டிசிஎஸ் நிறுவனம், அருகம்புல் அளவில் தொடங்கியது முதல் ஆலமரமாக கிளை பரப்பியது வரை […]

Read more

வீரபாண்டிய கட்டபொம்மன்

வீரபாண்டிய கட்டபொம்மன், மு.கோபி சரபோஜி, கிழக்கு பதிப்பகம், விலை: ரூ.140. ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தவர் என்றும், கொள்ளைக்காரர் என்றும் இருவிதமாக அடையாளப்படுத்தப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன்னின் உண்மையான வரலாறு என்ன என்பது இந்த நூலில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு இருக்கிறது. கட்டபொம்மன் தொடர்பான இரண்டு கருத்துகளையும் எடுத்துக்கூறி, உண்மை என்ன என்ற தேடலில் இந்த நூல் ஈடுபட்டு இருப்பதை நன்கு உணரமுடிகிறது. ராமநாதபுரம் அரண்ம னையில் கட்டபொம்மனும் ஜாக்சன் துரையும் சந்தித்தபோது நடந்தது என்ன? அங்கு இருந்து கட்டபொம்மன் தப்பியது எப்படி? என்பவை […]

Read more

ரொமிலா தாப்பர்

ரொமிலா தாப்பர் – ஓர் எளிய அறிமுகம், மருதன், கிழக்கு பதிப்பகம், பக். 176, விலை ரூ. 200. நம் காலத்தின் மாபெரும் வரலாற்றாய்வாளரான ரொமிலா தாப்பரின் எழுத்துகளை அறிந்தவர்களுக்குக்கூட அவரைப் பற்றிய விவரங்களும் பின்புலமும் அவ்வளவாகத் தெரிந்திருப்பதில்லை என்ற குறையைத் தீர்க்கத் தமிழில் வந்திருக்கிறது இந்த நூல். வாழ்க்கை, வரலாறு, உரையாடல் என்ற மூன்று பெரும் தலைப்புகளில் எளிய, ஆனால் ஓரளவில் விரிவாகவே ரொமிலா தாப்பர் பற்றி விவரிக்கிறார் ஆசிரியர் மருதன். தில்லியிலுள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வளர்ச்சியில் ரொமிலாவின் பங்களிப்பை […]

Read more

1877 தாது வருடப் பஞ்சம்

1877 தாது வருடப் பஞ்சம், ஆசிரியர்: வில்லியம் டிக்பி; தமிழில்: வானதி; வெளியீடு: கிழக்கு பதிப்பகம்; விலை:ரூ.250. தமிழக வரலாற்றில் பேரழிவை ஏற்படுத்திய 1877-ம் ஆண்டு பஞ்சத்தின்போது மக்கள் எவ்வாறு துன்பப்பட்டார்கள் – அப்போது ஆட்சியில் இருந்த ஆங்கிலேய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பவை இந்த நூலில் பதிவு செய்யப் பட்டு இருக்கின்றன. அப்போது சென்னையில் பத்திரிகையாளராகப் பணியாற்றிய இந்த நூலின் ஆசிரியர், அனைத்துத் தகவல்களையும் ஆதாரத்துடன் தந்து இருப்பதன் மூலம், பஞ்சத்தின் அவல நிலையை அப்படியே படம்பிடித்துக் காட்டி இருக்கிறார். சில […]

Read more

அசோகர்

அசோகர், ஒரு பேரரசின் வாழ்வும் பண்டைய இந்தியாவின் வரலாறும், மருதன், கிழக்கு பதிப்பகம், பக்.272, விலை ரூ.300. பேரரசர் அசோகரின் வரலாறு, ஆய்வு நோக்கில் எழுதப்பட்டுள்ளது.   ‘அரியணை என்னுடையது என்றால் கடவுள்கள் அதை எனக்கு எப்படியாவது சொந்தமாக்கட்டும்’ என்று அறிவித்த அசோகர், பின்னாளில் தனது சகோதரர்களைக் கொன்று விட்டுதான் அரியணை ஏறினார் என்பதை பல்வேறு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. அரச பதவிக்கு வந்தவுடனேயே தனது வன்முறை ஆட்டத்தை அசோகர் தொடங்கிவிட்டதாக அசோகாவதனம் குறிப்பிடுகிறது. கையில் அகப்பட்ட அப்பாவிகளை விதவிதமாக வதைத்துக் கொல்வதற்காக கிரிகா என்பவனையும் […]

Read more

ராஜீவ் காந்தி- அதிகாரம், ஆட்சி, அரசியல்

ராஜீவ் காந்தி- அதிகாரம், ஆட்சி, அரசியல், ஆர்.முத்துக்குமார், கிழக்கு பதிப்பகம், பக். 232, விலை ரூ. 250. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை இந்நூல் எடுத்துரைக்கிறது. ராஜீவைப் பற்றி மட்டுமல்லாமல் அவரின் தாயாரும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி காலத்தில் நிகழ்ந்தவை, அந்தக் காலத்தில் காங்கிரஸின் செயல்பாடுகள், நாட்டின் நிலை, மக்களின் எண்ணவோட்டங்கள், மாநிலங்களின் அரசியல் சூழல், சர்வதேச நிகழ்வுகள் என அனைத்தையும் இந்நூல் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்திரா காந்தியின் படுகொலைக்கான காரணங்கள், அதற்குப் பிறகு நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள், […]

Read more

ஒளரங்கசீப்

ஒளரங்கசீப், ஆங்கிலத்தில்: ஆட்ரே ட்ரஷ்கெ, தமிழில்: ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், பக்.158, விலை  ரூ.200. முகலாயப் பேரரசர்களில் மிகக் கொடூரமானவராகச் சித்திரிக்கப்பட்டவர் ஒளரங்கசீப். உண்மையில் ஒளரங்கசீப் கொடூரமானவரா என்பதை இந்நூல் ஆராய்கிறது. அமெரிக்க வரலாற்றாசிரியரான ஆட்ரே ட்ரஷ்கே, இது குறித்து பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில், ஒளரங்கசீப் பற்றி கூறப்படும் பல குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை என்ற முடிவுக்கு வருகிறார். ஒளரங்கசீப் ஆட்சிக் காலத்தில் நூற்றுக்கணக்கான கோயில்கள் அழிக்கப்பட்டன என்று கூறுவது உண்மையல்ல என்று கூறும் நூலாசிரியர், அவருடைய ஆட்சிக் காலத்தில் இடிக்கப்பட்ட இந்துக் கோயில்களின் எண்ணிக்கை பத்து […]

Read more

சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை

சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை, நிவேதிதா லூயிஸ், கிழக்கு பதிப்பகம், விலைரூ.100. இந்திய வரலாற்றில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது சிந்துவெளி நாகரிக கண்டுபிடிப்பு. அதன் தொன்மையையும், பண்பட்ட வாழ்க்கை முறையையும் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இந்த பழமையான நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது பற்றிய நுால் இது. இந்த நுாலில், ஏழு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதி தொகுக்கப்பட்டுள்ளன. முதலில் சிந்து எனும் புதிர் என்ற தலைப்பில் துவங்குகிறது. அடுத்து, வரலாற்றின் ரயில்பாதை, முதல் முத்திரை, முதல் பானை ஓடு என கட்டுரைகளில் தலைப்புக்கு ஏற்ப தகவல்கள் […]

Read more

சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை

சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை, நிவேதிதா லூயிஸ், கிழக்கு பதிப்பகம், விலைரூ.100. இந்திய வரலாற்றில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது சிந்துவெளி நாகரிக கண்டுபிடிப்பு. அதன் தொன்மையையும், பண்பட்ட வாழ்க்கை முறையையும் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இந்த பழமையான நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது பற்றிய நுால் இது. இந்த நுாலில், ஏழு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதி தொகுக்கப்பட்டுள்ளன. முதலில் சிந்து எனும் புதிர் என்ற தலைப்பில் துவங்குகிறது. அடுத்து, வரலாற்றின் ரயில்பாதை, முதல் முத்திரை, முதல் பானை ஓடு என கட்டுரைகளில் தலைப்புக்கு ஏற்ப தகவல்கள் […]

Read more

வட சென்னை வரலாறும் வாழ்வியலும்

வட சென்னை வரலாறும் வாழ்வியலும், நிவேதிதா லூயிஸ், கிழக்கு பதிப்பகம், விலை 300ரூ. வடசென்னையில் இவ்வளவு அதிசயங்கள் புதைந்து கிடக்கின்றனவா என்ற வியப்பை இந்த நூல் தருகிறது. கால வெள்ளத்தில் புதைந்துபோன கட்டிடங்கள், மக்கள் மறந்துவிட்ட வரலாற்றச் சின்னங்கள் ஒவ்வொன்றையும் ஆசிரியர் சிறப்பாக ஆவணப்படுத்தி இருக்கிறார். இவற்றைத் தேடி அலைந்த கதை, அவற்றைப் பார்ப்பதற்கான அனுமதியைப் பெற செய்த முயற்சி, அவற்றைக் கண்டபோது ஏற்பட்ட ஆனந்தம், என்று பல வகையான உணர்வுகளை இந்த நூல் தருகிறது. சீனப்பெருஞ்சுவர் போன்று வட சென்னையில் கட்டப்பட்ட பெருஞ்சுவர், […]

Read more
1 2 3 19