நெசவு மொழி

நெசவு மொழி, முனைவர் சு.கார்த்திகேயன், காவ்யா, பக்.261, விலை ரூ.260. உலகில் பண்டையக் கலைகளுள் ஒன்று நெசவுக் கலை. தொன்மையான இந்த நெசவுத் தொழிலில் காலச் சுழற்சி, மனிதப் பயன்பாடு ஆகியவற்றுக்கேற்ப ஏற்பட்ட பல பரிணாமங்களையும், இந்தத் தொழிலின் பயன்படுத்தப்பட்ட தொன்மையான சொற்கள் பல அழிந்தும், சில நிலைபேறு அடைந்தும், பல புதிய சொல்லாகத் திரிந்தும், பிறமொழிச் சொற்களுடன் கலந்தும் உள்ள நிலையையும் இந்த நூல் எடுத்துரைக்கிறது.  குறிப்பாக ‘கோபி’ வட்டத்தை ஆய்வு எல்லையாகக் கொண்டுள்ள இந்த நூலில் கைத்தறி, விசைத்தறி என இரு […]

Read more

பதினெண்கீழ்க்கணக்கு அக மற்றும் புற நூல்களின் பதிப்பு வரலாறு (1875-2020)

பதினெண்கீழ்க்கணக்கு அக மற்றும் புற நூல்களின் பதிப்பு வரலாறு (1875-2020), த.முத்தமிழ்,  காவ்யா, பக்.418, விலை ரூ.420. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அக, புற, அற நூல்கள் உள்ளன. அவற்றில் அகம், புறம் சார்ந்த கார்நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, கைந்நிலை, திணைமாலை நூற்றைம்பது ஆகிய ஏழு இலக்கியங்களின் பதிப்பு வரலாற்றை முழுமையாகத் தருகிறது இந்நூல். ஓர் இலக்கியத்தைக் கூறுவதற்கு முன்பாக, அவ்விலக்கியம் குறித்த பதிப்புகள், அவற்றை வெளியிட்ட பதிப்பகங்கள், அவ்விலக்கியத்திலுள்ள பாட பேதங்கள், குறிப்புரைகள், துறை விளக்கம், அட்டவணை, […]

Read more

சிலப்பதிகாரம் இனவரைவியல் நோக்கு

சிலப்பதிகாரம் இனவரைவியல் நோக்கு,  பெ.சுப்பிரமணியன், காவ்யா, பக்.170, விலைரூ.160. ஒரு சமூகத்தின் புவிச் சூழலியல், குடியிருப்புகள், பொருளாதாரம், குடும்ப அமைப்பு, திருமணம் உள்ளிட்ட சடங்குகளைத் தொகுத்துக் கூறுவது இனவரைவியல் ஆகும். சிலப்பதிகார காப்பியத்தை இனவரைவியல் கோட்பாடு முறையில் நூலாசிரியர் ஆய்வு செய்துள்ளார். சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரி, குன்றக் குரவை, ஆய்ச்சியர் குரவை ஆகிய 3 காதைகளும் தொல்குடிகளின் வாழ்வியலைக் காட்டும் பகுதிகளாக உள்ளன. வேட்டுவ வரி இயலில் வேட்டுவ இனமக்களின் கூத்துகள், ஆடல்- பாடல், இசை, கொற்றவை வழிபாடு, பலியிடல் முதலிய பல்வேறு செய்திகள் […]

Read more

பொற்றைக்காடு

பொற்றைக்காடு,  முள்ளஞ்சேரி மு.வேலையன், காவ்யா, பக்.361, விலை  ரூ.360. குமரி மாவட்டத்தில் உள்ள முள்ளஞ்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 60 ஆண்டுகளுக்கு முன்பு எப்படிவாழ்க்கை இருந்தது என்பதை அசைபோடும் நூல். அந்தப் பகுதிகளில் இருந்த உணவுமுறைகள், விளைபொருள்கள், மக்களின் பழக்க, வழக்கங்கள், தொழில்கள், கடைகள், சந்தைகள், கள், சாராயப் பழக்கங்கள் என அன்றைய வாழ்வைப் பற்றிய தகவல்கள் சுவையாக விவரிக்கப்பட்டுள்ளன. ‘நுனி வீட்டுக்கு; நடு மாட்டுக்கு; அடி வயலுக்கு என பயன்பட்டு வந்த நெல் விவசாயம் 1970 ஆம் ஆண்டில் பசுமைப்புரட்சி வந்தவுடன் […]

Read more

தமிழ் நாட்டுப்புறவியல் அகராதி

தமிழ் நாட்டுப்புறவியல் அகராதி, சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக். 786, விலை 800ரூ. தமிழில் திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, வீரமாமுனிவரின் சதுரகராதி எனத் தொடர்ச்சியாக இதுவரை எண்ணற்ற அகராதிகள் வெளிவந்திருக்கின்றன. பின்னர், தமிழகத்திலேயே சில குறிப்பிட்ட வட்டாரங்களுக்கே உரியதான வழக்குச் சொல் அகராதிகளும் வரத் தொடங்கின. இவற்றைத் தொகுப்பது என்பதே பெரும் உழைப்பையும் நேரத்தையும் வேண்டுகிற மிகுந்த அக்கறையுடன் கூடிய பணி. தமிழ் நாட்டுப்புறவியல் அகராதி என்ற இந்த நூலில் நாஞ்சில் நாடு, நெல்லை, செட்டிநாடு, நடுநாடு, தஞ்சை, கொங்கு, மதுரை, முகவை, பரதவர் […]

Read more

தலைத் தாமிரபரணி

தலைத் தாமிரபரணி, முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா, பக்.1040, விலை ரூ.1000. தென்காசி, தூத்துக்குடியை உள்ளடக்கி திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு சிறப்புகளை புராண விளக்கங்கள், வரலாற்றுத் தரவுகளுடன் மிக நுணுக்கமாகப் பதிவு செய்துள்ளது இந்நூல். தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியின் உற்பத்தி குறித்து மிக விரிவாக பதிவு செய்திருப்பதோடு மட்டுமல்லாது அது கடலில் கலக்கும் புன்னக்காயல் வரையிலான அணைகள், சிற்றாறுகள், கால்வாய்கள், கோயில்கள், மூலிகைகள் உள்ளிட்ட தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது. முகமது நபியின் வரலாற்றைக் கூறும் சீறாப்புராணம் எழுதிய உமறுப்புலவருக்கு எட்டையபுரத்தில் தர்கா உள்ளது. இந்த தர்காவை […]

Read more

இந்திர விழா

இந்திர விழா, தே.ஞானசேகரன், காவ்யா, விலைரூ.130. இந்திரனுக்கு எடுக்கும் விழா பற்றி விவரிக்கும் நுால். இந்திரன் மழைக் கடவுள் என்றும், வேளாண் தொழிலுக்குத் தலைவன் என்றும் இலக்கிய ஆதாரங்களோடு நிறுவுகிறார். ஐந்து கட்டுரைகள் அழகு செய்கின்றன. இந்திர விழா என்பது பழங்காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் எடுக்கப்பட்டது. இது பற்றிய செய்திகள் சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் இடம் பெற்றுள்ளன. மழை வளம் பெருகவும், மன்னனின் ஆட்சி சிறக்கவும் விழா எடுப்பதை சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. தற்போது கோவை பேரூரில் நடைபெறும் இந்திர விழா எனும் நாற்று நடவுத் திருவிழாவையும் […]

Read more

பூலித்தேவனின் தளபதி வெண்ணிக் காலாடி

பூலித்தேவனின் தளபதி வெண்ணிக் காலாடி, கு.அன்பழகன், காவ்யா, பக்.368, விலை ரூ.370. அடிமை இந்தியாவில், ஒற்றுமையின்றி பல்வேறு பாளையங்களாகச் சிதறிக்கிடந்த நெல்லைச் சீமையில், பூலித்தேவன் அரசாண்ட நெல்கட்டும் செவ்வல் மட்டுமே கப்பம் கட்டாமல் ஆங்கிலேயரை துணிவுடன் எதிர்த்தன. பூலித்தேவனின் படைக்குத் தலைமைத் தளபதியாக விளங்கியதோடு மட்டுமல்லாது, அவருக்கு வலது கரமாகவும் விளங்கிய வெண்ணிக் காலாடியின் வீர தீரத்தையும் அவர்தம் அர்ப்பணிப்பு, நாட்டுப்பற்றையும் இந்நூல் விரிவாக எடுத்துரைக்கிறது. சாதிய உணர்வுகள் தலைதூக்காமல், தாய்நாட்டின் விடுதலையை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு, பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த வீரர்கள் வெண்ணிக் காலாடியின் […]

Read more

அக்கா

அக்கா, திலகபாமா, காவ்யா, விலைரூ.600. ஐம்பதுகளின் இறுதியில், 23 வயதில் தமிழக அரசியலில் நுழைந்தவர் பொன்னம்மாள். காங்கிரஸ் கட்சியில் 35 ஆண்டுகள் பெரும் பங்கு ஆற்றியவர். ஏழு முறை சட்டசபை உறுப்பினராக இருந்து சாதனை படைத்தவர். அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் சட்டசபையில் ஆற்றிய உரைகளையும் தொகுத்துள்ள நுால். காமராஜரை முதல்வராகக் கொண்ட ஆட்சியில் சட்டசபை உறுப்பினராகத் திகழ்ந்தார். நிதியமைச்சராக இருந்த கக்கன் கொண்டு வந்த வெள்ளை அறிக்கையை ஆதரித்து பேசினார். திராவிட நாடு என்ற முழக்கம் எழுந்தபோது எதிராகக் குரல் கொடுத்தவர். பெண்களுக்குப் […]

Read more

பெண் வாசனை

பெண் வாசனை, பேராசிரியர் சு.சண்முகசுந்தரம், காவ்யா, விலைரூ.260. பழமொழிகளில் பெண்கள் எப்படி எல்லாம் சித்திரிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும், விடுகதைகளில் எவ்வாறு எல்லாம் இடம்பெற்றிருக்கின்றனர் என்பதையும், வாய்மொழிக் கதைகளில் இடம்பெற்றுள்ள தன்மையையும் எடுத்துரைக்கும் நுால். பொம்பளை சிரிச்சா போச்சு, பெண்புத்தி பின்புத்தி, உண்டி சுருங்கல் பெண்டிருக்கு அழகு, பெட்டைக் கோழி கூவி பொழுது விடியுமா? போன்ற பழமொழிகளையும், வேறு பலவற்றையும் பார்வைக்கு கொண்டு வந்துள்ளார். விடுகதைகளை விளக்கும் இடத்தில் மேலோட்டமாகப் புரியும் பொருளையும், உள்ளார்ந்து உணர்த்தப்படும் பொருளையும் தெளிவாகத் தெரிவித்துள்ளார். சாதாரண மக்களின் உருவாக்கத்தில் உருவாகும் இந்த […]

Read more
1 2 3 22