ஆதிச்சநல்லுார் அகழாய்வுகளும் மக்கள் வாழ்வியலும்

ஆதிச்சநல்லுார் அகழாய்வுகளும் மக்கள் வாழ்வியலும், முனைவர் பெ.ராஜேந்திரன், காவ்யா, விலைரூ.300. தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஆதிச்சநல்லுாரில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளைச் சிறப்பாக விவரித்து, கல்வெட்டு, செப்பேடு, மெய்கீர்த்தி மற்றும் இலக்கிய ஆவணங்களின் அடிப்படையில் தொல்தமிழர் வாழ்வியல் அடையாளங்களை விளக்கிக் கூறும் நுால். அகழாய்வில் கிடைத்த பொன், இரும்புக் கருவிகள், மண்பாண்ட எச்சங்கள், வெண்கலப்பொருட்கள், வேளாண் பொருட்கள், நுண்கலைப் பொருட்கள், தாழிகள், தங்கப் பட்டைகள், மனித எலும்புகள், போர்க்கருவிகள் மற்றும் தரவுகளைத் தமிழரின் தொன்மையான நாகரிகத்தை வெளிக்கொணரும் வகையில் அரசு ஆவணங்கள், கள ஆய்வு தரவுகள் மற்றும் […]

Read more

என் வானம் என் பூமி

என் வானம் என் பூமி, சுப.சோமசுந்தரம், காவ்யா, விலைரூ.110. கட்டுரை, சிறுகதை, மரபு, புதுமை என அனைத்துக் கலவையாக திகழ்கிறது இந்நுால். முதலாவது பகுப்பான என் பூமி சொற்பொழிவுடன் துவங்குகிறது. இதில் சில சிறுகதைகளாகவும், சில கட்டுரைகளாகவும் உள்ளன. இரண்டாம் பகுப்பான என் வானம், தொ.பரமசிவம், வள்ளுவம், தொல்காப்பியம் என இலக்கிய, இலக்கணத்தைப் பேசுகின்றன. இயல்பான நடை, மொழிப்பற்று, ஜாதி பேதமற்ற போக்கு இவை தனித்தன்மைகளாக வெளிப்படுகின்றன. இலக்கியக் கருத்துகளிலும் நகைச்சுவை கலந்து சுவைக்கச் செய்துள்ளது, ‘தும்மல்’ பற்றிய கட்டுரை. கண்ணகி மூட்டிய தீயையும், […]

Read more

அகவாழ்வில் கீழ்க்கணக்கும் மேற்கணக்கும்

அகவாழ்வில் கீழ்க்கணக்கும் மேற்கணக்கும், அ.சுபா, காவ்யா, பக்.212, விலை ரூ.220. சங்ககால இலக்கியங்களான பத்துப் பாட்டும், எட்டுத்தொகை நூல்களும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்றும்;சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நாலடியார் முதல் கைந்நிலை வரை உள்ள பதினெட்டு நூல்களும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் கூறப்படும். இவ்விரு தொகை நூல்களில் அகம், புறம் சார்ந்த நூல்களும் உள்ளன. அவற்றுள் அகப்பாக்கள் மட்டும் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன. இயற்கையோடு இயைந்து வாழ்ந்த சங்ககால மக்களின் வாழ்வியலை இலக்கண, இலக்கியச் சான்றுகளுடன் இந்நூல் எடுத்துரைக்கிறது. சங்கம், சங்கம் மருவிய […]

Read more

வைரமுத்து வரை தமிழ்த் திரைப்பாடல் வரலாறு (1931 முதல் 2020 வரை)

வைரமுத்து வரை தமிழ்த் திரைப்பாடல் வரலாறு (1931 முதல் 2020 வரை), சு.சண்முகசுந்தரம், காவ்யா,  பக்.1550, விலை ரூ.1600 தமிழின் முதல் பேசும்படமான காளிதாஸ் (1931) படத்தில் பாடல் எழுதிய மதுரகவி பாஸ்கரதாஸில் தொடங்கி, கடந்த ஆண்டு வெளியான படங்களில் பாடல்கள் எழுதியுள்ளவர்கள் வரையிலான முந்நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட பாடலாசிரியர்கள் குறித்த செய்திகளும் அவர்கள் எழுதிய ஓரிரு பாடல் வரிகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. எல்லாமே அறிந்த பெயர்கள்; எல்லாமே அறியாத தகவல்கள். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், மருதகாசி, உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமையாதாஸ், […]

Read more

வைரமுத்து வரை

வைரமுத்து வரை, பேராசிரியர் சு.சண்முகசுந்தரம், காவ்யா, விலை 1600ரூ. இமாலயச் சாதனை என்று பாராட்டும்வண்ணம் 1550 பக்கங்களைக் கொண்ட இந்தப் பிரம்மாண்ட நூல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 1931-ஆம் ஆண்டு முதல் 2020 -ஆம் ஆண்டு வரை தமிழ் சினிமாப் படங்களுக்குப் பாடல்கள் எழுதிய அத்தனைபேர் பற்றிய விவரமும் இதில் தரப்பட்டு இருக்கிறது. ஒரே ஒரு பாடல் எழுதியவரைக் கூட விட்டுவிடாமல், அனைவரைப் பற்றிய தகவல்களையும் பதிவு செய்து இருப்பது வியப்பளிக்கிறது. காலவரிசைப்படி, ஒவ்வொரு பாடலாசிரியர் பற்றிய குறிப்பு, அவர் எழுதிய பாடல் வரிகளில் காணப்படும் […]

Read more

விவேகானந்தம்

விவேகானந்தம், எஸ்.சுஜாதன், தமிழில்: ப.விமலா, காவ்யா, பக். 320, விலை ரூ. 350. மலையாளத்தில் எழுதப்பட்ட சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றுப் புதினத்தின் தமிழ் மொழிபெயர்ப்பே விவேகானந்தம். இந்து மதத்தின் சாராம்சங்களை இந்தியாவுக்குள் மட்டுமன்றி மேற்கத்திய நாடுகளிலும் சுவாமி விவேகானந்தர் பரப்புரை செய்தார். இந்தியா, வெளிநாடுகளில் சுவாமி விவேகானந்தர் மேற்கொண்ட சுமார் ஆறு வருடப் பயணங்களில் அவருக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை இந்த நாவல் பதிவு செய்துள்ளது.தீவிர இந்து மதப் பற்றாளரான சுவாமி விவேகானந்தர் பிற மதங்களிலுள்ள நல்ல பல கருத்துகளை தயங்காமல் ஏற்றுக்கொண்டார். […]

Read more

சங்க இலக்கியத்தில் தமிழ்ப் பண்பாட்டுத் தரவுகள்

சங்க இலக்கியத்தில் தமிழ்ப் பண்பாட்டுத் தரவுகள், ம.சுஜாதா, காவ்யா, விலை 580ரூ. சங்க இலக்கியங்களில் தமிழ்ப் பண்பாட்டுத் தரவுகள் தொடர்பாக ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர், தனது ஆய்வு அறிக்கையை புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய சங்க காலப் பாடல்கள் மட்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருக்கின்றன. இல்வாழ்க்கை, விருந்தோம்பல், உணவு முறை, வாணிபம், விளையாட்டு, சடங்குகள், சமயம் சார்ந்த நம்பிக்கைகள், அழகுக் கலை ஒப்பனை ஆகியவை சங்க காலத்தில் எவ்வாறு இருந்தன என்பது தகுந்த மேற்கோள்களுடன் தரப்பட்டு இருக்கின்றன. […]

Read more

வாழ்வெனும் அபத்த நாடகமும் பாரதியாரின் கண்ணன் பாட்டும்

வாழ்வெனும் அபத்த நாடகமும் பாரதியாரின் கண்ணன் பாட்டும்,  க.பஞ்சாங்கம், காவ்யா,  பக்.126. விலை ரூ.150. மகாகவி பாரதியாரின் முப்பெரும் பாடல்கள் என்று அறியப்படுவதில் 23 பாடல்கள் கொண்ட கண்ணன் பாட்டு தொகுப்பும் ஒன்று. முற்றிலும் கவிரசம் ததும்புவதாலேயே அவரது படைப்புகளில் முக்கியமானவற்றில் ஒன்றாக இது இடம் பெறுகிறது. பாரத தத்துவ, இலக்கிய இயலில் தோய்ந்த கவிச் சிந்தனைகளை கண்ணன்- கண்ணம்மா என்கிற பாவனையில் வடித்துள்ளார் மகாகவி. இதிகாச கண்ணனைப் போலவே பாரதியாரின் கண்ணனுக்கும் அரசன், காதலி, ஆசான், சேவகன் என பல தோற்றங்கள். அபத்தக் […]

Read more

பாகவதப் பாரதம்

பாகவதப் பாரதம்,  சிவ.விவேகானந்தன், காவ்யா, பக்.592, விலை ரூ.600; வியாசரால் எழுதப்பட்ட வடமொழிப் புராணமான ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணுவின் அவதாரக் கதைகளைக் கூறுவது. அதே வியாசர் எழுதிய இதிகாசமான மகாபாரதம், பாண்டவ- கெளரவர்களிடையிலான குருவம்ச பங்காளிச் சண்டையை மையமாகக் கொண்டது. இந்த இரண்டையும் இணைக்கும் “பாகவதப் பாரதம்” என்ற காப்பியம் தமிழில் 1800-ஆம் ஆண்டுகளில் தமிழில் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டிருப்பது வியப்புக்குரிய செய்தி. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீபல்பநாப நாடார் இந்நூலை எழுதி இருக்கிறார். அம்மானைப் பாடல் வடிவில் பாகவதப் பாரதம் எழுதப்பட்டுள்ளது. அந்த ஓலைச்சுவடியில், […]

Read more

சுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2

சுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2, சுப்ரபாரதி மணியன், காவ்யா, விலைரூ.500 ஆசிரியர் எழுதிய, 250 கதைகளிலிருந்து, 61 சிறுகதைகளை தேர்ந்தெடுத்து, சிறுகதை தொகுப்பாக வெளியிட்டுள்ளனர். தமிழன் ஒருவர், அன்னிய மொழி பேசும் மாநிலத்தில் வாழும் போது, அவனுக்கு ஏற்படுகிற பிரச்னைகள், சுற்றுச்சூழல், வாழ்க்கை, அனுபவங்கள் மற்றும் மனித உரிமை பிரச்னைகள் ஆகியவற்றை இச்சிறுகதைகளில் பிரதிபலித்துள்ளார். வாழ்க்கை, எத்தனை வகையான மனிதர்களை தம்மோடு இணைத்து செல்கிறது என்பதை விரிவாகக் கூறுகிறது, இவரது சிறுகதைகள். நன்றி: தினமலர், 8/3/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more
1 2 3 4 5 22