மனிதனல்ல மகான்

மனிதனல்ல மகான், டி.எஸ்.பவுணன், காவ்யா, பக். 128, விலை 130ரூ. மனிதன் எப்போதும் மனிதனாக வாழ்வது இல்லை. அவனுள் நல்லதும், கெட்டதும் நிறைந்திருக்கிறது. நல்ல தன்மைகள் மிகுந்துள்ள மனிதன் தன் மனித நிலையிலிருந்து உயர்ந்து, ‘மகான்’ எனும் உயர்ந்த நிலையை அடைகிறான். அத்தகைய உயர்ந்த நிலையை அடையும் சாதாரண மனிதனின் கதை தான் இந்த நாவல். நாவலின் தலைமை மாந்தர் வசந்தன். சித்தியின் அடியிலிருந்து தப்பித்து, வீட்டை விட்டு சிறுவயதிலேயே ஓடி வந்த வசந்தனின் வாழ்வில், உறவுகள் எப்படி மலர்ந்தன? அவன் எவ்வாறு மகான் […]

Read more

தமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்

தமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார், கருவூர் கன்னல், காவ்யா, பக். 107, விலை 110ரூ. ஒரு மனிதனது சுற்றுப்புறச் சூழலே அவனது சிந்தனைகளைத் தீர்மானிக்கிறது. பெரியார் ஈ.வெ.ரா.,வின் அன்றைய சூழ்நிலைகளே அவரை வடிவமைத்தன. அவர் அன்று மட்டுமன்றி, இன்றைய தமிழரின் சுற்றுவட்டப் பாதையில் எவ்வாறு பயணித்துக் கொண்டிருக்கிறார் என்பதை இந்நுால் விளக்குகிறது. படிப்படியான ஐந்து பகுப்புகளில் பெரியாரைப்பற்றி முழுமையாக விளங்கச் செய்கிறது இந்நுால். பெரியாரின் நிலையும் நினைப்பும், அவர் பிறந்து வளர்ந்த சூழலுக்கேற்ப அவர் இயங்கி வந்த நிலையை எடுத்துரைக்கிறது. சிந்தனையும் செயலும் […]

Read more

தொல்காப்பிய ஆய்வடங்கல்

தொல்காப்பிய ஆய்வடங்கல், மு.சங்கர், காவ்யா, பக்.336, விலை ரூ.340. தொல்காப்பியம் குறித்து பல்வேறு பொருண்மைகளில் 2000 முதல் 2019 வரை வெளியான 333 ஆய்வுக் கட்டுரைகள், 40 ஆய்வு நூல்கள், ஆய்வியல் நிறைஞர்(எம்.ஃபில்), முனைவர்பட்ட (பிஎச்.டி.) ஆய்வேடுகள் 58 ஆகியவை மூன்று பகுதிகளாக இந்நூலில் ஆய்வடங்கலாகியிருக்கின்றன. கட்டுரையின் தலைப்பு, எழுதியவர் பெயர், பதிப்பித்த ஆண்டு, வெளியீட்டாளர் பெயர், கட்டுரையின்-நூலின் பக்கங்கள் முதலியவற்றுடன், ஒவ்வொரு கட்டுரையும் சொல்லும் ஆய்வு முடிவை கருத்து என்கிற பெயரில் சுருக்கமாகவும்; அதனுடன் ஆய்வேட்டின் உள்ளடக்கத்தையும் தந்திருப்பது சிறப்பு. உலகத் தமிழ் […]

Read more

நெல்லை மறவர் கதைப்பாடல்கள்

நெல்லை மறவர் கதைப்பாடல்கள், சு.சண்முகசுந்தரம், காவ்யா, விலை 400 ரூ. முன்னோர்களை வழிபடும் தெய்வவழிபாடு, தமிழகத்தில் பன்னெடுங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதையொட்டி தொகுக்கப்பட்ட இந்த நூல், குறிப்பாகத் திருநெல்வேலிப் பகுதியில் இறந்தோர் வழிபாட்டில் பாடப்படும் பாடல்களை சிறப்பாகப் பதிவு செய்து இருக்கிறது. நெல்லை மறவர் குலத்தைச் சேர்ந்த ஈனமுத்துப் பாண்டியன், மெச்சும் பெருமாள் பாண்டியன், சோனமுத்துப் பாண்டியன், சிவராமப் பாண்டியன், பாலம்மாள் ஆகியோர் கொலை செய்யப்பட்ட பின்னர் அவர்களது வாழ்க்கை விவரம் தெய்வவழிபாட்டுப் பாடல்களாகப் பாடப்பட்டு இருக்கின்றன. இந்தப் பாடல்களையும் கதை மாந்தர்களின் வாழ்வில் நடைபெற்ற […]

Read more

இந்தியக் கிறிஸ்தவ அருளாளர்கள்

இந்தியக் கிறிஸ்தவ அருளாளர்கள், மதுரை இளங்கவின், காவ்யா, பக். 164, விலை 170ரூ. இந்திய அருளாளர்கள் அதுவும் கிறிஸ்தவ அருளாளர்கள் ஐவரைப் பற்றிக் கூறுவதே இந்நுால். இந்த ஐவரில் மூவர் பெண்மணிகள், ஐவரில் மூவர் இந்திய மண்ணில் பிறந்தவர்கள். எஞ்சிய இருவர் அன்னிய மண்ணில் பிறந்து, இந்திய மண்ணில் உயிர் துறந்தவர்கள். மக்களின் தந்தை லெ.வேவை முன்வைத்து நுால் துவங்குகிறது. இவர் பிரான்ஸ் நாட்டில் பிறந்து, இன்றைய ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களுக்காகத் தன் வாழ்நாளைக் கழித்தவர். ஏழைகளின் பங்காளன், இவர் ஆன்மிகப் பணியோடு […]

Read more

இந்தியக் கிறிஸ்தவ அருளாளர்கள்

இந்தியக் கிறிஸ்தவ அருளாளர்கள், மதுரை இளங்கவின், காவ்யா, பக். 164, விலை 170ரூ. இந்திய அருளாளர்கள் அதுவும் கிறிஸ்தவ அருளாளர்கள் ஐவரைப் பற்றிக் கூறுவதே இந்நுால். இந்த ஐவரில் மூவர் பெண்மணிகள், ஐவரில் மூவர் இந்திய மண்ணில் பிறந்தவர்கள். எஞ்சிய இருவர் அன்னிய மண்ணில் பிறந்து, இந்திய மண்ணில் உயிர் துறந்தவர்கள். மக்களின் தந்தை லெ.வேவை முன்வைத்து நுால் துவங்குகிறது. இவர் பிரான்ஸ் நாட்டில் பிறந்து, இன்றைய ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களுக்காகத் தன் வாழ்நாளைக் கழித்தவர். ஏழைகளின் பங்காளன், இவர் ஆன்மிகப் பணியோடு […]

Read more

சிற்பியின் படைப்புத்தளம்

சிற்பியின் படைப்புத்தளம், தே.ஞானசேகரன், காவ்யா, விலை 450ரூ. இலக்கியம் காலம் தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது’ என்று சொல்வர். உருவத்திலும், உணர்விலும், உள்ளடக்கத்திலும் அது எத்தனையோ மாற்றங்களைக் கடந்து வந்திருக்கிறது. அந்த வகையில் கவிதைகளால் தன்னை புதுப்பித்துக் கொண்ட கவிஞர் சிற்பி குறித்து, முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் வெளிவந்திருக்கிறது சிற்பியின் படைப்புக்கலை நுால். ஒரு சிறந்த கவிஞனின் அனைத்து பரிமாணங்களும் இலக்கிய உலகிற்கு முறையாக சொல்லப்படவேண்டும் என்ற முயற்சியின் பலன் தான் இந்தப் புத்தகம். சிற்பி படைத்த ‘உத்திகள்’ குறித்தான பாலாவின் […]

Read more

சங்கமி

சங்கமி : பெண்ணிய உரையாடல்கள் – தொகுப்பாசிரியர்கள்,  ஊடறு றஞ்சி, புதியமாதவி, காவ்யா, பக்.372, விலை ரூ.400. பெண்கள் சமூகத்தாலும் கூடவே ஆணாதிக்கத்தாலும் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற அடிப்படையில் பெண்ணியச் சிந்தனைகள் வளர்ந்து வந்திருக்கின்றன. சமகாலத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் மாறுபடுகின்றன. அதையொட்டி பெண்ணியச் சிந்தனைகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இலங்கையில் இனப் போராட்டத்தின்போது ஆயுதம் தாங்கிப் போராடிய பெண்கள், ராணுவத்தால் பாலுறவுத் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள், ஆப்கானிஸ்தானத்தில் அந்நிய நாட்டு ஆக்கிரமிப்பு சக்திகளின் தாக்குதலினால் இடம்பெயர்ந்து வேறுநாடுகளில் சென்று வாழும் பெண்கள், சாதி ஒடுக்குமுறையால் பாதிக்கப்படும் […]

Read more

சித்தர் படைப்புகளில் இறை கோட்பாடு

சித்தர் படைப்புகளில் இறை கோட்பாடு, முனைவர் சு.சசிகலா, காவ்யா, பக். 272, விலை 280ரூ. இப்பிரபஞ்ச இயக்கத்தின் சூட்சுமத்தை உணர்ந்தவர்களாக வாழ்ந்த சித்தர்கள், இறைவன் உன்னுள்ளே உள்ளான் என்ற அகவழிபாட்டு நெறியை, சமயம் கடந்த நிலையில் விளக்கியுள்ளனர். அண்டம் அனைத்தும் பரவியிருக்கும் பரம்பொருள் மனித உடலுக்குள்ளும் இருக்கிறது என்பதையே, ‘அண்டத்துள் உள்ளது பிண்டத்துள் உள்ளது’ என்று சித்தர்கள் கூறுகின்றனர். இவர்கள் தமிழில் யோகம், மருத்துவம், ஞானம், ரசவாதம் போன்றவற்றை நுட்பமாக விளக்கியுள்ளனர். பதினெண் சித்தர்கள், உரோம ரிஷி, கருவூரார் வரலாற்றையும், அவர் தம் படைப்புகளையும், […]

Read more

எட்டுத்தொகை அகநூல்களில் தூது மரபு

எட்டுத்தொகை அகநூல்களில் தூது மரபு, இரா.செங்கோட்டுவேல், காவ்யா, பக். 112, விலை120ரூ. தன் கருத்தை மற்றொருவருக்கு நேரிடையாக கூறாமல், வேறொருவர் மூலமாக கூறச் செய்தலே துாது என்று அழைக்கப் பெறும். காடுகளில் சுற்றித் திரிந்த மனிதன் நாகரிக வளர்ச்சியுற்று குழு வாழ்க்கைக்கு வந்த பின் நாடு, நகர் என பண்பாட்டில் சிறப்புற்ற காலத்தில் துாது என்பது முறைமைப் படுத்தப்பட்டு சிறப்பான நிர்வாக முறையை தமிழக மக்கள் அறிந்திருந்தனர் என்பதற்கு, இலக்கியங்களில் காணக்கிடக்கும் துாது பொருண்மைகளும், துாது இலக்கியங்களும் சான்றாக விளங்குகின்றன. கோப்பெரும் சோழனிடம் பிசிராந்தையர் […]

Read more
1 3 4 5 6 7 22