ரசூலின் மனைவியாகிய நான்

ரசூலின் மனைவியாகிய நான்,  புதியமாதவி, காவ்யா, பக்.139, விலை ரூ.140 ஏழு கதைகளின் தொகுப்பு இந்நூல். முதல் கதையான "ரசூலின் மனைவியாகிய நான் ஒரு குறுநாவல். மும்பை ரயில் குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்த ரசூல் கோமா நிலையில் மருத்துவமனையில் இருக்கிறான். அவனுடைய மனைவி கவுரி, மருத்துவமனைக்கு வந்து அவனைக் கவனித்துக் கொள்கிறாள். அதே குண்டுவெடிப்பில் கவுரியின் வீட்டருகே உள்ள பணக்காரரான மங்கத்ராமின் மகன் கபில் இறந்துவிடுகிறான். ரசூல் இருக்கும் மருத்துவமனையில் அவனைப் போலவே குண்டுவெடிப்பில் காயமடைந்த ஹேமா இருக்கிறாள். ரசூலுடன் குண்டுவெடித்த ரயிலில் பயணம் […]

Read more

குரங்கு கை பூமாலை

குரங்கு கை பூமாலை, ஈரோடு அறிவுக்கன்பன், காவ்யா, விலை 270ரூ. இன்றைய சமுதாய வளர்ச்சியால் ஏற்பட்டுக் கொண்டு இருக்கும் துன்ப விளைவுகளைச் சுட்டிக் காட்டி, அவற்றில் இருந்து விடுபடுவது எப்படி என்ற கருத்துக்களையும் கொண்ட கட்டுரைத் தொகுப்பாக இந்த நூல் விளங்குகிறது. நாகரிக வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் என்ற பெயரில் மனிதர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட அவலங்களை இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் நயம்பட விவரிக்கின்றன. நீர், நிலம், காற்று ஆகியவைகளில் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கும் சுற்றுச் சூழல் […]

Read more

பெண்ணின் நிலை

பெண்ணின் நிலை, முனைவர் ஜெயா வேணுகோபால், காவ்யா, விலை 140ரூ. சி.ஆர்.ரவீந்திரனின் நாவல்களில் அங்குத்தாய் (1988), ஈரம் கசிந்த நிலம் (1992), காலம் (1994), வெயில் மழை (1995) ஆகிய நாவல்களை ஆய்வு செய்கிறார். பெண் தன் வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பெண்ணின் இளம் பிராயத்தில் எதிர்கொள்கிற சிக்கல்கள், காதல் வயப்படுகையில் எதிர்கொள்கிற சிக்கல்கள், திருமண வாழ்வில் உருவாகும் சிக்கல்கள், குடும்ப வாழ்வினுள் நேரும் சிக்கல்கள், பெண் பணியின் பொருட்டு, பணியிடத்தில் வெளி உலகினரை எதிர்கொள்ளும்போது நேரும் பணியிடைச் சிக்கல்கள், கணவனது ஒழுக்க மீறல், […]

Read more

அண்டை வீடு: பங்களாதேஷ்

அண்டை வீடு: பங்களாதேஷ், பயண அனுபவங்கள்,  சுப்ரபாரதிமணியன், காவ்யா, பக்.105, விலை ரூ.110. பின்னலாடை உற்பத்தியில் கடந்த 3 ஆண்டுகளில் திருப்பூருக்குப் போட்டியாக வங்காளதேசம் முன்னணியில் நிற்கிறது. எனவே வங்காள தேசத்தின் பின்னலாடை உற்பத்தியைப் பற்றி ஆய்வு செய்வதற்காக 12 பேர் கொண்ட குழு திருப்பூரிலிருந்து சென்றது. அக்குழுவில் நூலாசிரியரும் இடம் பெற்றிருக்கிறார்.வங்காளதேசம் சென்று அங்குள்ள நிலைமைகளை மிகத் தெளிவாக இந்நூலில் விளக்கியிருக்கிறார். இந்நூலை அங்கே அதைப் பார்த்தேன்… இங்கே இதைப் பார்த்தேன் என்று விவரிக்கும் வழக்கமான பயணக்கட்டுரைகளின் தொகுப்பாகக் கருத முடியாது. வங்காள தேசத்தின் […]

Read more

நதியும் நதி சார்ந்த கொள்ளையும்

நதியும் நதி சார்ந்த கொள்ளையும், திலகபாமா, காவ்யா, பக். 104, விலை 100ரூ. இந்த, 50 ஆண்டுகளில் இயற்கையோடு வாழ்ந்த காலம் போய், இயற்கையை விற்கத் துவங்கிவிட்ட காலமாக மாறி, நதி என்றாலே வறண்ட நிலமாகவும், லாரிகள் நிற்கும் இடமாகவும் மாறிவிட்டது’ என, வருந்துகிறார் நுாலாசிரியர். ஒரு லாரி மணல், 40 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுவதையும், நீதிமன்ற உத்தரவுகளை உதாசீனப்படுத்தி, அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், லாரி உரிமையாளர்களும் அடிக்கும் கொள்ளைகளையும் ஆதாரங்களோடு பட்டியலிட்டுள்ளார். ‘மணலில் இருந்து, எம்.சாண்டுக்கு மாறுவதற்கான தன்னம்பிக்கையை மக்களுக்கு வழங்க அரசு […]

Read more

குரங்கு கை பூமாலை

குரங்கு கை பூமாலை, ஈரோடு அறிவுக்கன்பன், காவ்யா, பக்.264, விலை ரூ.270. சுற்றுச்சூழல் கேடு, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்து உலகம் முழுவதும் பேசப்படுகிறது. சுற்றுச்சூழல் கேடுகளுக்கான காரணங்களும், தீர்வுகளும் பலவிதமாகக் கூறப்படுகின்றன. இந்த நூல் சுற்றுச்சூழல் கெட்டுப் போனதிற்கான உண்மையான காரணங்களைச் சொல்கிறது. அதற்கு பல்வேறு சான்றுகளையும் எடுத்துக்காட்டுகிறது. சர்க்கரை தொழிற்சாலை, சாராய தொழிற்சாலை, பெட்ரோலியம் தொழிற்சாலை, தோல் பக்குவப்படுத்தும் தொழிற்சாலை, காகிதத் தொழிற்சாலை,துணிகளை உருவாக்கும் தொழிற்சாலை, வேதியல் பொருட்களை உருவாக்கும் தொழிற்சாலை, பால் மற்றும் அதன் துணைப்பொருள் தொழிற்சாலை ஆகியவை வெளியேற்றும் கழிவுகள், […]

Read more

ராதிகா சாந்தவனம்

ராதிகா சாந்தவனம், முத்து பழனி,  காவ்யா, விலை 270ரூ. 17-ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னரான பிரதாப சிம்மனின் அரசவையில் நடனக் கணிகையாக தேவதாசியாக இருந்த முத்து பழனி என்ற பெண், தெலுங்கு மொழியில் படைத்த இந்த நூல், காமம் கொப்பளிக்கும் காதல் இலக்கியமாகப் போற்றப்படுவது ஏன் என்பதை, இந்த நூலில் காணப்படும் உணர்ச்சிகரமான பாடல்களைப் படிக்கும்போது தெரிந்து கொள்ள முடிகிறது. 584 பாடல்களைக் கொண்ட இந்த நூல், முதலில் 1887ல் ஆங்கிலேயர் ஒருவரால் பதிப்பிக்கப்பட்டது. சிற்றின்பங்களை மையமாகக் கொண்டு இருந்ததால் தடை […]

Read more

நலம் காக்கும் உணவுக் களஞ்சியம் அறிவோம் அவசியம்

நலம் காக்கும் உணவுக் களஞ்சியம் அறிவோம் அவசியம்,  கு.கணேசன், காவ்யா, பக்.445, விலை ரூ.450. நாம் உட்கொள்ளும் உணவுகள், அவற்றில் அடங்கியுள்ள சத்துகள் பற்றி மிக விரிவாக இந்நூலில் கூறப்பட்டுள்ளது. தனக்குத் தேவையான உணவைத் தேர்ந்தெடுத்து, எந்த அளவு உண்ண வேண்டும் என்பதை இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள முடியும். உணவு தொடர்பாக நம்மிடம் இருக்கும் பல கருத்துகள் எவ்வாறு அறிவியலுக்குப் புறம்பாக இருக்கின்றன என்பதையும், நம்மால் ஒதுக்கப்படும் அல்லது விரும்பி உண்ணப்படும் பல உணவுகள் நம் உடலுக்கு எந்த அளவுக்கு உகந்தவையாக இருக்கின்றன […]

Read more

ஸ்டெம்செல் ஓர் உயிர் மீட்புச் செல்

ஸ்டெம்செல் ஓர் உயிர் மீட்புச் செல், இரா.சர்மிளா, காவ்யா, விலை 120ரூ. நமது உடலில் உள்ள பாகங்கள் அனைத்தும் செல்களால் ஆனவை என்பதையும், அந்த செல்களில், ‘குருத்தணு’ எனப்படும் ஸ்டெம் செல்களின் சிறப்புகளையும் சாதாரணமானவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய தமிழில் தந்து இருப்பதைப் பாராட்டலாம். ஸ்டெம் செல்கள் என்றால் என்ன? அவை நமது உடலில் ஆற்றும் பணிகள், ஸ்டெம் செல்களை சேமித்து வைத்து அதன் மூலம் நோய்களை குணப்படுத்துவது எவ்வாறு? ஸ்டெம் செல் வங்கிகள் எவ்வாறு செயல்படுகின்றன? என்பது போன்ற பல வினாக்களுக்கு பயனுள்ள […]

Read more

சைவத் தமிழ்

சைவத் தமிழ், தொகுப்பு பேராசிரியர் சண்முகசுந்தரம், காவ்யா, விலை 900ரூ. சைவ சித்தாந்தத்தின் சிறப்பு, அதன் வரலாறு ஆகியவற்றை ஆய்வு செய்த தமிழ் அறிஞர் அவ்வை துரைசாமிப் பிள்ளை எழுதிய நான்கு நூல்களின் தொகுப்பாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. தமிழ்ச் செல்வம், சைவ இலக்கிய வரலாறு, அவ்வைத் தமிழ், தமிழ்த் தாமரை ஆகிய தலைப்புகளில் அவ்வை துரைசாமிப் பிள்ளை ஆகிய நூல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் சைவத் தமிழ்த் தொண்டாற்றிய பல பெருமகனார்களைப் பற்றிய அரிய செய்திகளை இந்த நூல் தாங்கி […]

Read more
1 5 6 7 8 9 22