சிதரால் திருச்சாரணத்துமலை சமணப்பள்ளி

சிதரால் திருச்சாரணத்துமலை சமணப்பள்ளி, சிவ. விவேகானந்தன், காவ்யா, பக்.301, விலை ரூ.300. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு குமரி நாட்டில் சமணம் தழைத்தோங்கி வளர்ந்திருந்தது என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன. இன்றும் அந்த மதத்தின் அழியாத ஆவணங்களாக பல இடங்கள் திகழ்கின்றன. அவற்றுள் மிக முக்கியமானது திருச்சாரணத்துமலை எனப்படும் சிதரால் ஆகும். சமண மதக் கல்வெட்டுகளும், சிற்பங்களும், ஆலயங்களும் காலஓட்டத்தில் சிதைந்தும், மாற்றமடைந்தும் வந்துள்ளதை அறிய முடிவதுடன், அவை பற்றிய புதிய புதிய தகவல்கள் நம்மை வியக்க வைக்கின்றன. சமயவியல், கட்டடக் கலையியல், கல்வெட்டியல், சிற்பவியல் […]

Read more

கொ.மா.கோதண்டம் நாவல்கள்

கொ.மா.கோதண்டம் நாவல்கள், காவ்யா, பக். 588, விலை 600ரூ. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, ஓங்கிக் குரல் கொடுப்பவர் கொ.மா.கோதண்டம். முற்போக்கு எழுத்தாளரான இவர் கதைகள் ரஷ்ய, ஆங்கில, ஹிந்தி, தெலுங்கு, சிங்கள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆரண்ய காண்டம் என்ற இவரது குறிஞ்சிக் கதைகள் முதுகலை படிப்பிற்கு பாடமாக உள்ளது! கொ.மா.கோதண்டம் நாவல்கள் என்ற இந்த நுாலில் மூன்று நாவல்கள் இடம் பெற்றுள்ளன. அவை, ஏலச்சிகரம், குறிஞ்சாம் பூ, ஜன்ம பூமிகள். ஏலச்சிகரம் என்பது தமிழக ஏலத் தோட்டத் தொழிலாளர்கள் பற்றிய தமிழின் முதல் நாவல்! மலைப்பிரதேசத்தின் […]

Read more

பாண்டித்துரை

பாண்டித்துரை, எஸ்.பிரபாகரன், காவ்யா, விலை 400ரூ. கற்பனையும் நிஜமும் கலந்த வரலாற்றுப் புதினம். முதல் உலகப்போர் நடந்த காலத்தில் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய கற்பனை வீரனின் கதை நிஜப் போர்க்களத்தில் நகர்கிறது. படிக்கப்படிக்க போர்க்காலத்தில் பூத்திடும் அன்பு, தியாகம், கருணை, வீரம், காதல் என்று அத்தனையும் நெகிழ்வாக மனதுக்குள் மலர்ந்து கனக்கிறது. நன்றி: குமுதம், 6/6/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026784.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

அ.ச.ஞானசம்பந்தம் எழுதிய இலக்கியக்கலை

அ.ச.ஞானசம்பந்தம் எழுதிய இலக்கியக்கலை, தொகுப்பாசிரியர் முனைவர் சு.சண்முகசுந்தரம், காவ்யா, விலை 1000ரூ. “அ.ச.ஞா.” என்று அன்புடன் அழைக்கப்படும் அ.ச.ஞானசம்பந்தனார் மிகப்பெரும் தமிழறிஞர். கல்லூரியில் பேராசிரியர் அன்பழகன், நாவலார் இரா.நெடுஞ்செழியன் ஆகியோர் இவருடன் படித்தவர்கள். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 14 ஆண்டுகள் பணியாற்றியபின், சென்னை வானொலி நிலையத்தில் நாடகத் தயாரிப்பாளராகவும், பின்னர், தமிழக அரசு செய்தித் துறையில் மொழிபெயர்ப்புத் துறை இணை இயக்குனர், தமிழ் வளர்ச்சித்துறை இணை இயக்குனர், தமிழ் வெளியீட்டுத்துறை இயக்குனர், மதுரை பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தலைவர் முதலிய பதவிகளை வசித்தார். ஏராளமான நூல்களை […]

Read more

மரபணு என்னும் மாயக்கண்ணாடி

மரபணு என்னும் மாயக்கண்ணாடி, இரா.சர்மிளா, காவ்யா, பக்.112, விலை ரூ.120. உயிரினங்களின் இயக்கத் திறனுக்கு காரணமாக இருக்கும் மரபணு குறித்து இந்நூல் பேசுகிறது. மரபணு ஆராய்ச்சி நடைபெற்றது எப்போது? அதைக் கண்டறிந்தது யார்? என்பன போன்ற பல சுவாரசியமான தகவல்கள் நூல் முழுவதும் பரவிக் கிடக்கின்றன. மரபணுவின் அமைப்பு, குரோமோசோமின் அமைப்பு, புரத உற்பத்தி, மரபணு மாற்றத்தால் ஏற்படும் நன்மைகளும், தீமைகளும் என பல தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. மருத்துவத்துறையில் மரபணு ஆராய்ச்சி எந்த அளவுக்கு உதவும் என்பது குறித்து இந்நூலின் மூலம் நாம் தெரிந்து கொள்ள […]

Read more

அன்பின் பிரபந்தம்

அன்பின் பிரபந்தம், உலகக் கவிதைகள், மெொழிபெயர்ப்பாளர் கிருஷ்ண பிரசாத், காவ்யா, விலை 950ரூ. பிறமொழி இலக்கியங்கள் தமிழ் மொழியில் செய்தல் வேண்டும் என்று பாடினார் பாரதி. அந்த முண்டாசு கவிஞனின் அவாவை நிறைவேற்றும் வகையில் ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழியில் புகழ்பெற் கவிதைகளும், பாப்லோ நெருடா, அகமத் பராஸ் போன்ற உலக புகழ்பெற்ற கவிஞர்களின் கவிதைகளும் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டு உள்ள பெருநூல் இது. உலக கவிஞர்களின் நவரசம் ததும்பும் பாடல்களை ஒருசேர படிக்கும்போது வாசகரின் உள்ளத்தில் மகிழ்ச்சி பிரவாகம் எடுப்பது திண்ணம். […]

Read more

பௌத்த சிந்தனை பன்நோக்கு வாசிப்பு

பௌத்த சிந்தனை பன்நோக்கு வாசிப்பு, முனைவர் கா.அய்யப்பன், காவ்யா, பக்.184, விலை 190ரூ. கோட்பாடுகளில் வரையறைக்கு அப்பாற்பட்டது பௌத்தம். பதிமூன்றாம் நூற்றாண்டு கால அளவிலும் பெரும் செல்வாக்குள்ள சமயமாக விளங்கியது. பௌத்த சமய பின்புலத்தில் காப்பியங்கள் உட்பட பல்வேறு நூல்கள் இயற்றப்பட்டு உள்ளன. தமிழ் வளர் சூழலில் பௌத்த சிந்தனைகள் ஏற்படுத்திய தாக்கங்களை, சங்க இலக்கியம் தொட்டு, பக்தி இயக்க காலகட்டம் வரை, அதற்குப் பிந்தைய காலம் என வேறுபடுத்தி பார்க்க வேண்டியதாகக் குறிப்பிடப்படுகிறது. தமிழ் இலக்கண மரபிலும் பௌத்த சிந்தனைகளின் தாக்கங்கள் இருந்தமை […]

Read more

பழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்

பழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல், இரெ.குமரன், காவ்யா, பக்.316, விலை ரூ.300. இன்று அறிவியல் வெகுவாக முன்னேறிவிட்டது. நாள்தோறும் புதுபுதுக் கண்டுபிடிப்புகளால் உலகம் நிரம்பி வழிகிறது. நமது பழந்தமிழ் நூல்களில் காணக் கிடைக்கும் பல கருத்துகள் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளோடு வியக்கத்தக்க வகையில் ஒத்துப் போவதை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. சூரியக் குடும்பத்தைப் பற்றி இன்றைய அறிவயில் கூறும் கருத்துகளை உறையூர் முதுகண்ணன் சாத்தனாரின் புறநானூற்றுப் பாடல், "வாணிற விசும்பில் கோள்மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு' என்ற சிறுபாணாற்றுப் படை பாடல்கள் கூறியிருப்பது வியப்பூட்டுகிறது. தாய்ப்பால் தருவதின் […]

Read more

மகாத்மா காந்தி காவியம்

  மகாத்மா காந்தி காவியம், தி.கா.இராமாநுசக் கவிராயர், காவ்யா, விலை 1700ரூ. மகாத்மா காந்தி பற்றி தமிழில் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இந்த நூல் புதுமையானது. காந்தியின் வரலாற்றை பாடல்கள் மூலம் கூறுவது. மொத்தம் 12,285 பாடல்கள். தி.கா.இராமாநுசக் கவிராயர் சங்க காலப் பாடல்கள் போல இவ்வளவு பாடல்களை எழுதி, இந்தக் காவியத்தைப் படைத்திருக்கிறார். இது அரும்பெரும் சாதனை. மகாத்மா காந்தியே ஒரு காவியமாகத் திகழ்ந்தவர். அவரைப் போற்றும் கவிதைகள் கொண்ட இந்த நூலும் ஒரு காவியமாக அமைந்ததில் வியப்பொன்றும் இல்லை. இரண்டு பாகங்களாக […]

Read more

பசும்பொன் கருவூலம்

பசும்பொன் கருவூலம், தொகுப்பும் பதிப்பும் பேரா.சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக். 300, விலை 300ரூ. நாத்திகம், சுயநலம், பிரிவினை வாதங்களால் தமிழகம் தாழ்ந்து நின்றது. நாசமுற்று தமிழகம் வீழ்ச்சி பெற்றிருந்த நேரத்தில் தேசியமும், தெய்வீகமும் தோற்றுவிடாமல், தன் தோளில் ஏற்றிக் கொண்டு சிம்ம கர்ஜனை செய்து, வெற்றி பெற வைத்தவர் பசும்பொன் முத்துராலிங்கத் தேவர். மேடையேறி சங்கநாதம் செய்தார். தியானம், தொண்டுகள் செய்து பக்திமானாகத் திகழ்ந்தார். களத்தில் எதிர் நின்று வீரனாகப் போராடி சிறை புகுந்தார். பத்திரிகைகளில் முரசு முழங்குவது போல் எழுதியவைகளை ஆவணப்படுத்துகிறது இந்த […]

Read more
1 7 8 9 10 11 22