சிவகங்கைச் சரித்திரக் கும்மி(சிவகங்கை நகர்க் கும்மி)

சிவகங்கைச் சரித்திரக் கும்மி(சிவகங்கை நகர்க் கும்மி), முனைவர் ஆ.மணி, காவ்யா, பக். 768, விலை 750ரூ. கும்மியாட்டம் பெண்கள் மட்டும் கலந்து கொண்டு ஆடும் ஆட்டமாகும். ஒற்றைப்படை எண்ணிக்கையில் பெண்கள் கலந்து கொள்வர். நடுவில் முளைப்பாரி அல்லது வேறு ஏதேனும் சில பொருட்களை நடுவில் வைத்து, பெண்கள் வட்டமாக நின்று கை கொட்டி ஆடும் ஆட்டம் கும்மியாட்டம் எனப்படும். இன்றும் கிராமப்புறங்களில் நடைமுறையில் உள்ளது. வெள்ளையரை எதிர்த்து போராடிய மாவீரர்களில், மருது சகோதரர்களின் பெயர் மறக்க முடியாததாகும். 1772ல் ராணி வேலு நாச்சியாருக்கு உதவி […]

Read more

குமரி நாட்டில் சமணம் தோற்றம் வளர்ச்சி வீழ்ச்சி

குமரி நாட்டில் சமணம் – தோற்றம் வளர்ச்சி வீழ்ச்சி, சிவ.விவேகானந்தன், காவ்யா, பக்.615, விலைரூ.650. தமிழகத்தின் பழங்கால சமயங்களில் சமணமும் ஒன்று. சமண சமயத்தைச் சேர்ந்த அகத்திய முனிவர் பதினெண்குடி வேளிர், அருவாளர்களோடு தென்னகத்திற்கு வந்து, காடுகளை அழித்து நாடுகளாக்கி மக்களைக் குடியேற்றினார் என்பதும், வடக்கிலிருந்து பத்திரபாகு என்ற சமண முனிவர் மைசூர் நாட்டில் உள்ள சிரவணபௌகெள குகையில் தங்கி, அவருடைய சீடரான விசாக முனிவரை சமண மதத்தைப் பரப்புவதற்காக தமிழகத்திற்கு அனுப்பி வைத்தார் என்பதும் சமண மதம் வடக்கிலிருந்து தமிழகத்துக்கு வந்தது என்பதையே சொல்கின்றன. […]

Read more

சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக இசைக் களஞ்சியம்

சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக இசைக் களஞ்சியம், அரிமளம் சு.பத்மநாபன், காவ்யா,  பக்.340 ; விலைரூ.330; 1867 இல் பிறந்த சங்கரதாஸ் சுவாமிகள் தமிழ் நாடகத்துறையின் முன்னோடியாவார். அவர் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா என்ற பாய்ஸ் கம்பெனி நாடக சபையைத் தொடங்கி நடத்தியவர். எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், எம்.ஆர்.ராதா உள்ளிட்ட நடிகர்கள், உடுமலை நாராயண கவி, தஞ்சை இராமையா தாஸ் உள்ளிட்ட கவிஞர்கள் இந்த நாடக சபையில் பயிற்சி பெற்றவர்கள். 68 நாடகங்களை அவர் எழுதியிருக்கிறார். ஆனால் 16 நாடகப் பிரதிகளே […]

Read more

பேரா.நா.வா.வின் நான்கு கதைப் பாடல்கள்

பேரா.நா.வா.வின் நான்கு கதைப் பாடல்கள், பதிப்பாசிரியர்: சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக்.545, விலை ரூ.500. பேராசிரியர் நா.வானமாமலை தொகுத்து, ஆய்வுரை எழுதி வெளியிட்ட காத்தவராயன் கதைப் பாடல், வள்ளியூர் வரலாறு (ஐவர் ராஜாக்கள் கதை), முத்துப்பட்டன் கதை, கான்சாகிபு சண்டை ஆகிய நான்கு கதைப் பாடல்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கதைப் பாடல் குறித்தும் நா.வானமாமலை எழுதிய முன்னுரை(ஆய்வு)ரைகளும் இடம் பெற்றுள்ளன. 15 ஆம் நூற்றாண்டின் நடுவிலிருந்து 18 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை தமிழகத்தில் நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த கதைப் பாடல்கள் […]

Read more

குறுந்தொகை

குறுந்தொகை, இரா.பிரபாகரன், காவ்யா, பக். 667, விலை 700ரூ. தமிழ் இலக்கியங்களை வாஷிங்டன் வட்டார மக்கள் படிக்கும் வகையில் தமிழ் இலக்கிய ஆய்வுக்கூடம் என்ற அமைப்பை, 2003ல் உருவாக்கி அவர்களுக்கு புறநானுாறு மற்றும் சங்க இலக்கியங்களை போதித்துத் தமிழ்ப் பணியாற்றி வரும் முனைவர் இர.பிரபாகரன் நம் இலக்கியப் பரப்புரை முயற்சியில் மகுடமாகப் படைக்கப்பட்டது தான் இந்நுால். மேலும், 402 பாடல்களைக் கொண்ட குறுந்தொகைக்கு உரை எழுதிய சவுரிப்பெருமாள் அரங்கனார், உ.வே.சாமிநாதய்யர் வரிசையில் இவரது உரை, 10வது இடம் பெறுகிறது. இறையனார் பாடிய, ‘கொங்கு தேர் […]

Read more

முதல் விடுதலை வீரர் பூலித்தேவர்

முதல் விடுதலை வீரர் பூலித்தேவர், தொகுப்பாசிரியர்: சு.சண்முகசுந்தரம்,  காவ்யா, பக். 285, விலை ரூ.280. ‘ஆங்கிலேயரை மட்டுமல்லாது, நாயக்கர்களையும், நவாபுகளையும் எதிர்த்துப் போராடியவர் பூலித் தேவர்’. 1715 இல் பிறந்தவரான பூலித்தேவர் 1750 இல் இன்னிசு துரையுடன் போரிட்டார். அதற்குப் பின் 1767 இல் நடந்த போரில் அவர் மரணமடைவது வரை தொடர்ந்து அந்நிய ஆதிக்கங்களுக்கு எதிராகப் போரிட்டார். முதல் சுதந்திரப் போர் வீரராக அவர் திகழ்ந்தார். முதல் சுதந்திரப் போர் வீரர் பூலித்தேவரா, கட்டபொம்மனா என்ற கேள்விக்கு இந்நூல் விடையளிக்கிறது. இந்நூலில் துர்க்காதாஸ் […]

Read more

நாடக இசைக் களஞ்சியம்

நாடக இசைக் களஞ்சியம், சங்கரதாஸ் சுவாமிகள், அரிமளம் சு.பத்மநாபன், காவ்யா, விலை 330ரூ. நாடக இசைக் களஞ்சியம் என்ற மையக்கருத்தை முன்னிறுத்தி முழுமையாக எழுதப்பட்ட நூல். இதில் தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும், சிலப்பதிகாரமும் கூறியுள்ள இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகிய 2 தனிப்பண்புகளும் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்ச் சூழலில் நாடகத் தமிழ் குறித்தும், நாடகத்திற்கான இசையின் பங்களிப்பு குறித்தும், இயல், இசை, நாடக அறிஞர்களிடமும், ஆய்வாளர்களிடமும், புதிய சிந்தனைகளையும், தேடுதல்களையும் இந்த நூல் உருவாக்கியுள்ளது. நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

இரு துருவங்கள்

இரு துருவங்கள், மதுரை இளங்கவின், காவ்யா, பக். 192, விலை 190ரூ. நம் நாட்டு வருமானம் எல்லாம் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பெரு முதலாளிகளிடம் போய்க் கொண்டே இருக்கிறது. இவர்களால் தான் லஞ்சமும், ஊழலும் நாடெங்கும் நிறைஞ்சிருக்குது. இதைத் தடுப்பது என் லட்சியம் என்று, சிவில் சர்வீஸ் தேர்வு மையத்தில் முதல் நாளே உறுதி கூறும், செல்வின் கலெக்டராக, நேர்மைக்குப் பரிசாக ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒவ்வொரு மாவட்டமாக மாறுதலுக்கு உட்படுத்தப்பட்டு அரசியல்வாதிகளால் அலைக்கழிக்கப்படும் யதார்த்தம் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது. செல்வினை மணந்து கொள்ள விரும்பும் தொழில் அதிபரின் […]

Read more

பசும்பொன் கருவூலம் (தேவரின் அரசியல் மற்றும் ஆன்மிகக் கட்டுரைத் தொகுதி)

பசும்பொன் கருவூலம் (தேவரின் அரசியல் மற்றும் ஆன்மிகக் கட்டுரைத் தொகுதி), தொகுப்பாசிரியர்கள்: சு.சண்முகசுந்தரம், சுரா,  காவ்யா, பக்.300, விலை ரூ.300. தேசியமும், தெய்வீகமும் இரு கண்களென வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். காந்தியவாதியாக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய அவர், நேதாஜி சுபாஷ்சந்திரபோஸின் தளபதியாகத் திகழ்ந்தார். சுதந்திரப் போராட்ட காலத்திலும் அதற்குப் பிறகும் அவர் ‘கண்ணகி’ இதழில் எழுதிய கட்டுரைகள், அவரது நேர்காணல்கள், அறிக்கைகள், வாழ்த்துரைகள் என அவரது படைப்புகளின் கருவூலத் தொகுப்பாகவே இந்தநூல் உள்ளது. ‘தமிழ்க்குலத்தின் தனிப்பெருந் திருநாள்’ எனும் கட்டுரையில்,“இன்றைய தமிழ்நாடு […]

Read more

உலகப் பெருமக்கள்

உலகப் பெருமக்கள், தொகுப்பும் பதிப்பும் பேரா. சு. சண்முகசுந்தரம், காவ்யா, விலை 300ரூ. “காசு பிள்ளை” என்று அழைக்கப்படும் கா.சுப்பிரமணியபிள்ளை, “கல்விக்கடல்” என்று திரு.வி. கல்யாணசுந்தரனாரால் பாராட்டப்பட்ட தமிழறிஞர். அவர் எழுதிய புகழ்பெற்ற நூல்களில், “உலகப்பெருமக்கள்” என்ற இந்த நூலும் ஒன்று. இதில் மகாத்மா காந்தி, ஸ்டாலின், ரூஸ்வெல்ட், ஜார்ஜ் பெர்னாட்ஷா, செகப்பிரியர்(ஷேக்ஸ்பியர்) உள்பட 15 உலகத் தலைவர்களின் வரலாறுகள் அடங்கியுள்ளன. தூய தமிழ் நடையில் காசு பிள்ளை இந்த நூலை எழுதியுள்ளார். ஆண்டுகள் பல சென்று விட்டபோதிலும், இளமையோடு விளங்குவது இந்த நூலின் […]

Read more
1 8 9 10 11 12 22