ஆண்கள் படைப்பில் பெண்கள்

ஆண்கள் படைப்பில் பெண்கள், சு. ஜெயசீலா, காவ்யா, பக். 134, விலை 130ரூ. நாவல்களில் பெண்கள் ஆண் எழுத்தாளர்களால் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஆராயும் நூல். கு. அழகிரிசாமி, ஐசக் அருமை ராஜன், சு. சமுத்திரம், பொன்னீலன், மேலாண்மை பொன்னுச்சாமி உள்ளிட்ட 16 புதினங்களில் பெண்கள் பழமைக்கும் புதுமைக்கும் இடையே போராடுவதை இந்நூல் வெளிக்காட்டுகிறது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/6/2017.

Read more

மலையாளம் தமிழ் இலக்கிய மொழி பெயர்ப்புகள்

மலையாளம் தமிழ் இலக்கிய மொழி பெயர்ப்புகள், ப.விமலா, காவ்யா, பக்.342, விலை ரூ.340. மலையாளத்திலிருந்து தமிழில் நிறைய நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. மொழிபெயர்ப்பாளர்களும் பலர் இருக்கின்றனர். அவர்களில் குளச்சல் மு.யூசுப், குறிஞ்சிவேலன், சிற்பி பாலசுப்பிரமணியம் ஆகிய மூவரின் 55 மொழிபெயர்ப்பு நூல்களை மட்டுமே இந்நூல் ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறது. மலையாளத்தின் புகழ்மிக்க எழுத்தாளர்களான தகழி சிவசங்கரபிள்ளை, வைக்கம் முகம்மது பஷீர், எம்.டி.வாசுதேவன் நாயர், மலையாற்றூர் இராமகிருஷ்ணன், எஸ்.கே.பொற்றேகாட், ஓ.என்.வி.குரூப், கே.சச்சிதானந்தன் உட்பட பல எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றிய விரிவான அறிமுகம் வியக்க வைக்கிறது. என்னவிதமான படைப்புகள் […]

Read more

வள்ளுவர்கள்

வள்ளுவர்கள், பேராசிரியர் சு. சண்முகசுந்தரம், காவ்யா, விலை 200ரூ. திருவள்ளுவர் பற்றிய வாய்மொழிக் கதைகளையும், குறள்களின் கருத்தமைப்பைக் கொண்ட பழமொழிகளையும், தற்காலக் கவிஞர்கள், திருக்குறளைக் கையாண்டு படைத்த கவிதைகளையும் ஆய்வு செய்து இந்த நூலை பேராசிரியர் சு.சண்முகசுந்தரம் படைத்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 26/4/2017.   —-   இயற்பியல் கற்பித்த உண்மைகளும் ஐன்ஸ்டீன் கண்ட விந்தைகளும், செண்பகம் வெளியீடு, விலை 120ரூ. உலகில் தோன்றிய மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் ஐன்ஸ்டீன். அவருடைய கண்டுபிடிப்புகள் பற்றி இந்த நூலில் விவரிக்கிறார், பேராசிரியர் முனைவர் மு.இராமசுப்பிரமணியன். […]

Read more

மருத்துவ மாயங்கள் (மெடிக்கல் மிராக்கிள்)

மருத்துவ மாயங்கள் (மெடிக்கல் மிராக்கிள்), கு.கணேசன், காவ்யா, பக்.403, விலை ரூ.400. இன்றைய நவீன உலகில் நோய்கள் அதிகரித்திருக்கின்றன. நோய்களைக் குணப்படுத்தும் நவீன மருத்துவக் கண்டுபிடிப்புகளும், கருவிகளும் அதிகரித்திருக்கின்றன. இந்நூல் நாம் அறியாத பல புதிய மருத்துவக் கண்டுபிடிப்புகள், கருவிகளைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. மாரடைப்பு நோயைக் குணப்படுத்த ஸ்டென்ட் பொருத்துவார்கள். இந்த ஸ்டென்ட்டைச் சரியாகப் பொருத்துவதற்கு ரத்தக்குழாயின் உட்பகுதியைத் தெரிந்து கொள்ள பயன்படும் ‘ஆப்டிகல் கொஹிரென்ஸ் டோமோகிராபி தொழில்நுட்பம் 39‘ பற்றி இந்நூல் விளக்குகிறது. இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் […]

Read more

நெல்லை வரலாற்று சுவடுகள்

நெல்லை வரலாற்று சுவடுகள், முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா, பக். 244, விலை 240ரூ. திருநெல்வேலி சீமைப் பற்றிய, சிறு சிறு, பல அரிய செய்திகளை, இந்நூலுள் தொகுத்து வழங்கி உள்ளார், நூலாசிரியர். தென்கயிலை எனவும், பொதிகைமலை எனவும் போற்றப்படும், அகத்தியர்மலை முதல், அம்பாசமுத்திரத்தில் துண்டிக்கப்பட்ட தண்டவாளம் ஈறாக இருநூற்றுக்கும் மேற்பட்டச் செய்திகளை தரும், அரிய தகவல் களஞ்சியமாக திகழ்கிறது இந்நூல். ‘ நெல்லை மாவட்டத்தின், பண்பாட்டின் சின்னங்களாக விளங்கும் கோவில்கள், கோபுரங்கள், அரண்மனைகள், தேவாலயங்கள், நீரூற்றுகள், அருவிகள், ஆறுகள், பாலங்கள், விலங்குகளின் சரணாலயங்கள், சடங்குகள், […]

Read more

வ.ரா. கதைக் களஞ்சியம்

வ.ரா. கதைக் களஞ்சியம், தொகுப்பாசிரியர் சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக்.864, விலை ரூ.850. சிறந்த எழுத்தாளரான வ.ரா. எழுதிய கட்டுரைகள் புகழ் பெற்ற அளவுக்கு, அவருடைய படைப்பிலக்கியங்கள் அறியப்படவில்லை. அவற்றைத் தேடிப் பிடித்துத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார்கள். தமிழில் வட்டார நாவல் என்ற ஒரு பிரிவு அறிமுகமாவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே (அன்றைய ஒன்றிணைந்த) தஞ்சை மாவட்ட மக்களின் பேச்சு மொழியையும் வாழ்க்கை முறையையும் தனது நாவல்களில் பதிவு செய்திருக்கிறார் வ.ரா. குறிப்பாக, ‘சுந்தரி 39 ’ நாவலில் இடம் பெறும் பூமரத்தாங்குடி, உளுத்தங்காடு ஆகிய இரு ஊர்களும் […]

Read more

தமிழ்க் கிறிஸ்துவம்

தமிழ்க் கிறிஸ்துவம், மதுரை இளங்கவின், காவ்யா, பக். 152, விலை 150ரூ. சைவம், வைணவம், சமணம், புத்தம், இஸ்லாம் ஆகிய சமயங்கள் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்புபோல், கிருஸ்துவமும் தமிழ்ப்பணியாற்றி சிறப்பித்துள்ளதை வெளிக்காட்டும் நூல். தமிழில் முதன்முதலாக அச்சு நூல்களை வெளியிட்டது போன்ற தமிழ்ப்பணி இந்நூலில் உள்ளது. தமிழுக்காக தம் வாழ்வை அர்ப்பணித்த தமிழறிஞர்கள், தமிழ்த் தொண்டர்கள் பற்றியும் இந்நூல் எடுத்துரைக்கிறது. கிருஸ்துவத்தின் தமிழ்ப்பணி வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்பதை நிறுவும் நூல். நன்றி: குமுதம், 19/4/2017.

Read more

ராமாமிர்தம்

ராமாமிர்தம், லா.ச.ரா. நாவல்கள், காவ்யா, பக். 720, விலை 700ரூ. தமிழ் இலக்கிய முன்னோடிகளில் முக்கியமான ஒருவர் லா.ச.ராமாமிர்தம். நம்மை உணர்ச்சிமயமாக்கி, ஒரு மாய உலகுக்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் அவர் எழுத்துக்களுக்கு உண்டு. அவருடைய படைப்புகளை தொகுத்து, “ராமாமிர்தம்” என்ற தலைப்பில் பெருநூல்களாக வெளியிடுகிறது, “ராமாமிர்தம் 1” என்ற நூல் இப்போது வெளிவந்துள்ளது. இதில் “புத்ர”, “அபிதா”, கல்சிரிக்கிறது”, “கேரளத்தில் எங்கோ”, “கழுகு”, “பிராயச்சித்தம்” ஆகிய 6 நாவல்கள் அடங்கியுள்ளன. ராமாமிர்தத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இது வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் அன்னைக்கு அணிவிக்கப்பட்ட […]

Read more

ரகுநாதம் கட்டுரை கவிதை நாடகம்,

ரகுநாதம் கட்டுரை கவிதை நாடகம், பேரா. சண்முக சுந்தரம், காவ்யா, பக். 1120, விலை 1100ரூ. படைப்பாற்றலும் விமர்சனக் கூர்மையும் ஒருங்கே பெற்றவர் தொ.மு.சி. ரகுநாதன். முதுபெரும் எழுத்தாளரான தொ.மு.சி. பொதுவுடமைக் கருத்துக்களை எந்த சமரசமும் செய்யாமல் விதைத்த புரட்சியாளர். புதுமைப்பித்தனை இனம் கண்டவர். கதை, கவிதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு என பரந்துபட்ட இலக்கிய ஆளுமையாக ஆட்சி செய்தவர். அந்த வகையில் அவரது 100 கட்டுரைகள், 2 நாடகங்கள், 56க்கும் மேற்பட்ட கவிதைகளை உள்ளடக்கிய பொக்கிஷமாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: குமுதம், 4/1/2017.

Read more

குறிச்சி

குறிச்சி, காமராசு, காவ்யா,  பக். 244, விலை ரூ. 240. வரலாறு என்றாலே ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் உள்ளடக்கியதுதான். நம்மைச் சுற்றி உள்ள இடங்களின் பின்னணியிலும் வரலாற்றுச் சிறப்புகள் உள்ளன. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் குறித்த தகவல் பெட்டகமாக இந்த நூல் வெளியாகி உள்ளது. அத்ரி மலையில் உருவான கங்கை, நெல்லையப்பர் கோயிலில் உள்ள 1000 ஆண்டுகள் பழைமையான மணி, மணல் மூடிய மணல் மாதா ஆலயம், திருப்புடைமருதூர் கோயிலில் உள்ள மரச்சிற்பங்கள், பொதிகை மலையில் சித்தர்கள் பயன்படுத்திய […]

Read more
1 10 11 12 13 14 22