தொல்தமிழியச் சிந்து நாகரிகம்

தொல்தமிழியச் சிந்து நாகரிகம், பி. இராமநாதன், தமிழ்மண், விலை 125ரூ, 90ரூ. தொல்தமிழியச் சிந்து நாகரிகமும் பன்னாட்டு அறிஞர்கள் பார்வையில் தமிழும் தமிழரும் இவ்விரு நூல்களும் ‘தமிழ்மண்’ணில் விளைந்தவை. இவ்விரண்டும் முறையே 2012 இலும், 2014இலும் வெளிவந்தவை. பி. இராமநாதன் ஆங்கிலத்திலும் தமிழிலும் வல்லவர். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் வழிநிலை ஆய்வறிஞர். வரலாற்றுத் துறையிலும் ஆழங்கால்பட்டவர். தமிழிய ஆய்வுப் புலங்கள் பலவற்றிலும் தொடர்ந்து பங்களிப்பு செய்து வருபவர். எக்கருத்தையும் உரிய ஆதாரங்களுடன் நடுவுநிலையில் அறிவுலகத்தின் முன்வைப்பவர். மாந்த இனத்தின் தொல் வரலாறு – சிந்து […]

Read more

கவிதை வானம்

கவிதை வானம், முனைவர் தி. நெல்லையப்பன், மணிபாரதி பதிப்பகம், விலை 180ரூ, 150ரூ. நெல்லையப்பனின் கவிதை வானமும் அம்மாதான் ஆசிரியரும் முனைவர் நெல்லையப்பன் நெல்லைக்காரர் என்றாலும் சிதம்பரம்வாசி. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலை தூரக் கல்வி இயக்கத் தமிழ்த்துணைப் பேராசிரியர். எனினும் எழுத்திலும் பேச்சிலும் இனிய அண்மையர். எட்டு நூல்களின் ஆசிரியர். கண்ணில் தெரியும் வானம் கைகளில் வருமா? வரும். கவிஞர்களுக்கு வரும். கவிதைகள் போலவே விதைகள் மண்ணில் விழுந்தாலும் விண்ணை நோக்கியே வாழும் – வளரும் என்பதை இவரது கவிதைகள் நிரூபிப்பன. “நாற்றுகள் தான் […]

Read more

மௌனத்தின் பிளிறல்

மௌனத்தின் பிளிறல், புதிய மாதவி, எழுத்து. புதிய மாதவி திருநெல்வேலிக்காரர் என்றாலும் தற்போது மும்பைவாசி. பன்னாட்டு வங்கிப் பணிக்குப் பின் விருப்ப ஓய்வில் விருப்பம் போல் கவிதை, சிறுகதை, பெண்ணிய நுண்ணரசியல், இலக்கிய விமர்சனம், மொழியாக்கம் என எழுதி வருகிறார். சாகித்ய அகாடெமி, மும்பைத் தமிழ்ச்சங்கம், பத்திரிகை, இலக்கிய மேடை, கருத்தரங்கு, எழுத்தாளர் சந்திப்பு, பல்கலைக்கழகம், மண்டலம் என்று பல தளங்களில் தன் இலக்கியப் பங்களிப்புகளைச் செய்து வருகிறார். பாரீஸ், இலங்கை என்று பெண்களின் சந்திப்பிலும் கலந்து வருகிறார். ‘மௌனத்தின் பிளிறல்’ இவரது புதிய […]

Read more

தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம்

தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம், க. பூரணச்சந்திரன், காவ்யா,பக்.214,விலை ரூ.210 தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சியில் தொடங்கி, தமிழ் இலக்கியத்தில் மார்க்சியம், ஃபிராய்டியம், இருத்தலியம், நவீனத்துவம், பின் நவீனத்துவம், பெண்ணியம், தலித் இலக்கியம் போன்ற பதின்மூன்று தலைப்புகளில் ஆழமான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. இலக்கியம் சமகாலச் சமூகத்தைப் பற்றி, மக்களைப் பற்றி வருணிப்பதாகவும், கவலை கொள்வதாகவும், மாறியது இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட ஓர் அடிப்படை மாற்றம் என்கிற கட்டுரையாளரின் கருத்து முக்கியமானது. மேலும், புத்திலக்கியங்கள் தமிழில் தோன்றுவதற்கான சூழல் 19-ஆம் நூற்றாண்டில் உருவாயிற்று […]

Read more

பாரதிதாசன் காப்பியங்கள்

பாரதிதாசன் காப்பியங்கள், பேரா.சு. சண்முக சுந்தரம், காவ்யா, பக். 376, விலை 1300ரூ. புரட்சிக்கவி பாரதிதாசன் எழுதிய காப்பியங்களின் மொத்தத் தொகுப்பு இது. இதில் எதிர்பாராத முத்தம், பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, உள்ளிட்ட 9 பெருங்காப்பியங்கள் இடம் பெற்றுள்ளன. 1930ல் அவர் முதன் முதலாக எழுதிய ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல், புரட்சிக்கவி’ உள்ளிட்ட ஆறு சிறுகாப்பியங்களும் அடங்கும். காப்பியங்கள் அனைத்தும் இருபதாம் நூற்றாண்டில் பாரதிதாசன் விரும்பிய சமுதாய மாற்றங்களைப் பாடுபொருளாகக் கொண்டவை. சமுதாய மாற்றத்திற்கு உறுதுணையாக நிற்பவை. நன்றி: குமுதம், 17/8/2016.

Read more

நியாயமா இது நியாயமா

நியாயமா இது நியாயமா, முனைவர் கமல.செல்வராஜ், காவ்யா, விலை 200ரூ. கல்வியின் நிலை, சமுதாய அமைப்புகள், அரசியல், பண்பாடு, கல்வி ஸ்தாபனங்கள், மதம் எனப் பல்வேறு பொருட்களைக் குறித்து அவர் ஆராய்ந்த கருத்துகளின் கருவூலமாக இந்த நூல் திகழ்கிறது. நன்றி: தினத்தந்தி, 20/7/2016.   —- சாயி தரிசனம், தெ. ஈஸ்வரன், திருவரசு புத்தக நிலையம், விலை 100ரூ. ஸ்ரீ சத்திய சாயி பகவான் நேரில் தரிசித்த உணர்வை, இந்த நூலை படிப்பதன் மூலம் அனைவரும் பெற முடிகிறது. நன்றி: தினத்தந்தி, 20/7/2016.

Read more

போராட்டம்

போராட்டம், முனைவர் பெ. சரஸ்வதி, காவ்யா, விலை 250ரூ. இந்தி இலக்கிய உலகில் ‘பிரேம்சந்த்’ என்ற பெயர் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது. முப்பதாண்டு கால அவரது இலக்கியப் பணியில் 12 நாவல்களையும், கிட்டத்தட்ட 300 சிறுகதைகளையும், 3 நாடகங்களையும் எழுதியுள்ளார். அவது படைப்புக்காகவே அவரது காலம் ‘பிரேம்சந்த் யுகம்’ என்று அழைக்கப்பட்டது. அவரது போராட்டம் என்ற நாடகத்தை தமிழில் முனைவர் பெ. சரஸ்வதி மொழிபெயர்த்துள்ளார். இந்த நாடகம் 93 ஆண்டுகளுக்கு முந்தைய சமுதாய, பொருளாதார நிலையையும், மனித வாழ்வின் போராட்டத்தையும் நமக்குப் படம் பிடித்து காட்டுகிறது. […]

Read more

நெல்லை நாட்டுப்புறக் கலைகள்

நெல்லை நாட்டுப்புறக் கலைகள், சு.சண்முகசுந்தரம், காவ்யா, சென்னை, பக்.216, ரூ.210. நாட்டுப்புறக் கலைகளின் பிறப்பிடம் கிராமங்கள். கிராமங்களில் நடைபெறும் விழாக்களின் ஒரு பகுதியாக நாட்டுப்புறக் கலைகள் அரங்கேற்றப்படுவதுண்டு. இன்று விவசாயம் நலிந்து, கிராமங்களிலிருந்து பிழைப்புக்காக பெரும் அளவில் மக்கள் நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்துவிட்டனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நமது மண்ணில் புதைந்து கிடக்கும் பழைய வேர்களிலிருந்து கிளை பரப்பி, மலர்ந்துள்ள நாட்டுப்புறக் கலைகளைப் பற்றிய அறிமுகமாகவும், நமது மரபை நாம் மறந்துவிடாமல் நினைவுபடுத்தும் நோக்கத்துடனும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. வில்லுப்பாட்டு, கணியான் ஆட்டம், ஆலி ஆட்டம், […]

Read more

பேராசிரியர் ந. சஞ்சீவியின் இலக்கிய நூல்

பேராசிரியர் ந. சஞ்சீவியின் இலக்கிய நூல், ந.சஞ்சீவி, காவ்யா, விலை 1500ரூ. மொழி என்பது வெறும் சப்தங்களும், அர்த்தங்களும் அல்ல. புள்ளிகளும் கோடுகளும் அல்ல, இது ஓர் இனத்தின், அதன் பண்பாட்டின், அதன் வாழ்வியல் நெறியின் ஆணிவேர். அறிவுச் சேகரம், அறச்சின்னம். பேராசிரியர் ந. சஞ்சீவி, கணினி இல்லாத காலக்கட்டத்திலேயே, மடிக்கணினியாக வாழ்ந்தவர். எதையும் தொகுத்து, பகுத்தும், வகுத்தும் பார்ப்பது அவரது வழக்கம். தமிழ் ஆய்வுக்கு ஓயாது உழைத்தவர். அவர் எழுதிய “செவ்வியல் இலக்கிய அடை” என்ற இந்த நூல், அவரது சிறந்த ஆராய்ச்சிக்கு […]

Read more

சிங்கப்பூரில் மக்கள் தொடர்பு சாதனங்கள்

சிங்கப்பூரில் மக்கள் தொடர்பு சாதனங்கள், முனைவர் சீதாலட்சுமி, காவ்யா, விலை 500ரூ. தமிழ் மொழி இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு தமிழ் இலக்கிய வளர்ச்சி எனும்போது, இலக்கியத்தை நுகர்தல், இலக்கியத்தைப் படைத்தல், இலக்கியத்தை ஆய்தல் என்ற நிலைகளில் மக்களிடையே இலக்கியத்தை நிலைபெறச் செய்வதில் மக்கள் தொடர்புச் சாதனங்கள் அற்றிய பங்கு குறித்து இந்நூலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. தமிழ் நாளிதழ், வானொலி ஆகிய இரண்டுடன் ஒப்பிடும்போது தொலைக்காட்சி இலக்கிய வளர்ச்சியில் சற்றுக் குறைவாகவே தனது பங்கை ஆற்றியுள்ளது என்பதை அறிய முடிகிறது. சிங்கப்பூரில் 25 ஆண்டுகள் […]

Read more
1 12 13 14 15 16 22