லக்கி லூக்கை சுட்டது யார்?

லக்கி லூக்கை சுட்டது யார்?, ஐம்போ காமிக்ஸ், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 100ரூ. துப்பாக்கி வெடிக்கும் ஓசை, வீழ்ந்து கிடக்கும் லக்கி லூக் என்று புதிய கோணத்தில் தொடங்கி கொலையாளி யார்? காரணம் என்ன? என்ற ப்ளாஷ்பேக்கில் நகரும் கதை. அப்பாவுக்கும் மகன்களுக்கும் இடையே நடக்கும் கொலைவெறி கோல்ட் வேட்டை அது மக்களிடையே பரவி நடக்கும் கரகர சண்டைகள் என்று கதையும் படங்களும் ‘ஜிவ்’வுகின்றன. உச்சக்கட்டத்தில் லக்கிக்கு உயிர் பிழைக்கும் லக் இருந்ததா, இல்லையா? சுட்டது யார்? என்பது யூகிக்க முடியாத சஸ்பென்ஸ், சிரியஸ் […]

Read more

ஒரு விரல் புரட்சி

ஒரு விரல் புரட்சி, அருணன், வசந்தம் வெளியீட்டகம், விலை 150ரூ. ஒற்றைவிரலில் ஒரு துளி மையால் கறைப்படுத்திக் கொண்டு தேர்ந்தெடுத்த நாட்டின் கறையைப் போக்கக்கூடிய கறையில்லா அரசியல் வாதியைத் தேர்ந்தெடுக்க நடத்தப்படுவதுதான் தேர்தல். ஆனால், ஜனநாயக நாட்டில் தேர்தலின் நோக்கம் சரியாக நடக்கிறதா? சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரையான தேர்தல் நிகழ்வுகள், வெற்றிக்காக கட்சிகள் வகுத்த வியூகங்கள், அதன் விளைவுகள் என்று சுமார் ஐம்பது ஆண்டுகால இந்திய, தமிழக தேர்தல் குறித்து அலசி ஆய்ந்து எழுதப்பட்ட வரலாறு, ஓட்டுப்போடும் பொது ஜனம் முதல் […]

Read more

காஞ்சி மகா ஸ்வாமிகளின் உபதேங்கள்

காஞ்சி மகா ஸ்வாமிகளின் உபதேங்கள், ஸ்ரீதர் சாமா, விருட்சம் வெளியீடு, விலை 90ரூ. காஞ்சி மகா பெரியவரின் கருணை மொழிகளையும் பக்தர்கள் வாழ்வில் அவர் நடத்திய அற்புதங்களையும் சொல்லும் புத்தகம். பலருக்கும் தெரிந்த, தெரியாத விஷயங்களின் தொகுப்பு. படிக்கப் படிக்க சிலிர்க்கிறது. பண்பும் பக்தியும் மனதுக்குள் மலர்கிறது. நன்றி : குமுதம், 25/12/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சங்ககால வானிலை

சங்ககால வானிலை, முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன், முக்கூடல், பக். 272, விலை 300ரூ. வானிலையும் காலநிலையும்தான் மனிதன் முதல் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வரை அத்தனையும் தோன்றக் காரணம். வானிலை குறித்து சங்ககாலத்திலேயே ஆய்வு செய்திருக்கிறார்கள். அதனை உணர்த்தும் வகையில் சங்க இலக்கிய நூல்களில் கோள்களின் இயக்கம் முதல், மேகம், மழை, இடி, மின்னல், வெப்பசலனம் என்று வானிலை சார்ந்த அத்தனை விஷயங்களும் இடம் பெற்றிருப்பதை உதாரணங்களுடன் விளக்கும் நூல். நம் முன்னோரின் வானிலை அறிவு(வியல்) நுட்பம் ஆச்சரியப்படவைக்கிறது. நன்றி: குமுதம், 6/11/19 . இந்தப் […]

Read more

முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள், நாகூர் சா.அப்துர் ரஹீம், அறிவு நாற்றங்கால், பக். 142, விலை 120ரூ. உடல்நலம் முதல், மனித நேயம் வரை அவசியமானது எது? அவசர உலகில் முக்கியம் என்று நினைத்து நாம் செய்து கொண்டிருக்கும் முட்டாள்தனங்கள் என்னென்ன என்பதை புரியும் வகையில் எளிய நடையில் சொல்லியிருக்கும் புத்தகம். சிறியவர் முதல் பெரியவர் வரை எந்தப் பாகுபாடும் இன்றி அத்தனைபேரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய இஸ்லாத்தின் அடிப்படையில் சொல்லியிருப்பது பாராட்டத்தக்கது. நன்றி: குமுதம், 6/11/19 . இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

சங்கீத நினைவலைகள்

சங்கீத நினைவலைகள், வாதூலன், ஜெனரல் பப்ளிஷர்ஸ், பக். 224, விலை 140ரூ. இசை… பெயருக்கு ஏற்ப எல்லோருக்கும் இசைந்து செல்வது, அனைவரையும் இசையச் செய்வது. ஸ்வர, தாள, பாவங்களோடு கர்நாடக சங்கீதமாக உருவெடுக்கும் அதனை ராகமாக அடையாளம் காண்பது எப்படி? என்பதில் தொடங்கிய தனது சங்கீத வேட்(கை)டையில் படிப்படியாக உயர்ந்து, கச்சேரிகளை விமர்சனம் செய்யும் அளவுக்கு முன்னேறியுது? செம்மங்குடி முதல் ஜேசுதாஸ் வரையானவர்களைப் பற்றிய தமது நினைவலைகள் என்று அனைத்தையும் சுவைபடப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் வாதூலன். வாசிக்க வாசிக்க வயலின் இசையாய் வசீகரிக்கிறது. நன்றி: […]

Read more

காவல் துறையினருக்கு வெற்றிதரும் மேலாண்மைப் பண்புகள்

காவல் துறையினருக்கு வெற்றிதரும் மேலாண்மைப் பண்புகள், அ.அமல்ராஜ் ஐ.பி.எஸ்., விஜயா பதிப்பகம், பக். 352, விலை 290ரூ. சவால்களும் பொறுப்புகளும் எல்லாத் துறைகளிலுமே உண்டு என்றாலும் காவல்துறையில் அவை மிகமிக அதிகம். நிர்வாகத்திற்ன் அதிகம் தேவைப்படும் அந்தத் துறையில் இருந்து கொண்டே வாழ்வின் மற்ற எல்லா நிலைகளையும் திறம்பட நிர்வகித்து வெற்றி காண்பதற்கான வழியினை எளிய முறையில் சொல்லும் நூல். புலம்பலோ மன அழுத்தமோ இல்லாமல், பணியிடம், குடும்பம், நட்பு வட்டாரம், வெளியிடம் என்று எல்லா இடங்களிலும் சீராகவும் சிறப்பாகவும் செயல்பட சின்னச் சின்ன […]

Read more

வைகை நதிக் கரை முதல் வாடிவாசல் வரை

வைகை நதிக் கரை முதல் வாடிவாசல் வரை, எஸ்.கணேசன், சண்முகம் பதிப்பகம், பக். 148, விலை 50ரூ. மதுரை மாநகரின் பெருமைக்குடி காரணமாக ஏராளமான விஷயங்கள் இருந்தாலும் அவற்றுள் தனிச்சிறப்பானது வைகை நதி. ஆற்றங்கரைகளில்தான் நாகரிகத்தின் வளர்ச்சியே ஏற்பட்டது என்பது வரலாறு.. அந்த வகையில் மதுரையில் அனனை மீனாட்சியின் ஆட்சிக் காலம் தொடங்கி, இன்றைய காலம் வரை நடந்த, நடக்கிற அத்தனை ஏற்றங்களும் மாற்றங்களையும் சொல்லும் நூல். சித்திரைத் திருவிழா முதல், சிலிர்ப்பான ஜல்லிக்கட்டு வரை ஒவ்வொன்றுக்கான விளக்கமும் பல்வேறு கோணத்தில் தரப்பட்டிருப்பது சிறப்பு. […]

Read more

கருத்துக் குவியல்

கருத்துக் குவியல், டாக்டர் நீதியரசர் ஏ.ஆர்.லெட்சுமணன், முல்லை பதிப்பகம், பக். 168, விலை 150ரூ. நீதித்துறையில் தனி முத்திரை பதித்த நீதியரசரின் சொல்லோவியங்களும் எழுத்தோவியங்களும் அடங்கிய நுல். பல்வேறு சமயங்களில், சட்டம், ஆன்மிகம், இலக்கியம், பெண் உரிமை, பொது நலம், சுற்றுச் சுழல் போன்ற தலைப்புகளில் நீதியரசர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு. சட்டத் துறையில் மட்டுமன்றி தான் தொட்ட துறைகள் எல்லாவற்றிலும் அரசராக விளங்குவதை படிக்கப்படிக்க உணர முடிகிறது. உதாரணமாக, குழல், யாழ், முழவு இம்மூன்றும், தமிழின் தனிச் சிறப்பான இசைக்கருவிகள். காரணம், தமிழின் […]

Read more

சொல்லித்தந்த வானம்

சொல்லித்தந்த வானம், அருள்செல்வன், புதிய தமிழ் புத்தகம், பக். 256, விலை 230ரூ. திரை உலகில் தடம் மாற்றி யோசித்து, தடுமாறமல் நடைபோட்டு, தனக்கென்று தனி இடம் பிடித்தவர் இயக்குநர் மகேந்திரன். அவரது சிந்தனையும் செயலும் ரசிகர்களை மட்டுமல்லாமல் சினிமா உலகினரையே வியக்கச் செய்தவை. மாற்றி யோசித்து மகத்தான கலைச்சேவை செய்த அவரைப்பற்றி மறக்க முடியாத தங்கள் நினைவுகளை திரை உலகைச் சார்ந்த சாராத பலரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் இந்த நூலில். மகேந்திரனின் எண்ணங்களைப் போலவே இதுவும் வித்தியாசமாக மணக்கிறது.. நன்றி: குமுதம், 23/10/19 […]

Read more
1 2 3 57