இந்தியக் கிறிஸ்தவ அருளாளர்கள்

இந்தியக் கிறிஸ்தவ அருளாளர்கள், மதுரை இளங்கவின், காவ்யா, விலை 170ரூ. ஏழைக் குழந்தைகளுக்கு கல்விப் பணி, நோயுற்றவர்களுக்கு மருத்துவ வசதி என்று ஏராளமான அன்புப் பணிகளைச் செய்த கிறிஸ்தவ அருளாளர்களை இந்த நூல் சிறப்பாக அடையாளம் காட்டி இருக்கிறது. தந்தை லெவே, புனிதர் அல்போன்ஸ், தேவசகாயம் பிள்ளை, அன்னை தெரசா, இறை ஊழியர் ஞானம்மா ஆகிய ஐவரின் வாழ்க்கைக் குறிப்பு, அவர்கள் ஆற்றிய தொண்டுகள், அவர்கள் எதிர்கொண்ட சவால்கள், துயரங்கள் ஆகிய அனைத்தும் இந்த நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 9/10/19 இந்தப் புத்தகத்தை […]

Read more

பசும்பொன் களஞ்சியம்

பசும்பொன் களஞ்சியம், தேவரின் சொற்பொழிவுகள், தொகுப்பாசிரியர்: காவ்யா சண்முகசுந்தரம், காவ்யா, பக்.656, விலை ரூ.650. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பல கூட்டங்களிலும், தமிழக சட்டமன்றத்திலும் ஆற்றிய 40 உரைகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவம் பெற்றிருக்கின்றன. சுதந்திரப் போராட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இயங்கி வந்த முத்துராமலிங்கத் தேவர், நேதாஜியுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்ததும், சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சியின் நடவடிக்கைகளை விமர்சித்ததும் இந்நூலில் உள்ள பல சொற்பொழிவுகளின் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. பிரிட்டிஷாரிடம் இருந்து உண்மையில் நாம் சுதந்திரம் அடையவில்லை என்ற கருத்து […]

Read more

செப்புத் திருமேனிகள் வார்த்தெடுக்கும் செய்முறைகளும் அமைப்பு முறைகளும்

செப்புத் திருமேனிகள் வார்த்தெடுக்கும் செய்முறைகளும் அமைப்பு முறைகளும், ம.பாபு, காவ்யா, விலை 320ரூ. கோவில்களில் பெரும்பாலும் உற்சவ மூர்த்தியாக இருக்கும் செப்புத் திருமேனிகள் ஐம்பொன்னால் எவ்வாறு செய்யப்படுகின்றன? அவற்றில் எந்த உலோகங்கள் எவ்வளவு அளவில் சேர்க்கப்படுகின்றன என்பது போன்ற நுணுக்கமான செய்திகளை இந்த நூல் சிறப்பாக பதிவு செய்து இருக்கிறது. பல்லவர் காலம் முதல் தற்காலம் வரை செப்புத்திருமேனிகளை செய்வதற்கு கையாளப்படும் பாணிகளையும் இந்த நூல் தருகிறது. நடராசர் சிலையான ஆடவல்லானின் தத்துவம், ஆடற்கலை இலக்கணங்கள், சிலைகளில் இடம்பெறும் ஆடை, ஆபரண, ஆயுதங்கள் பற்றிய […]

Read more

கம்பர் சில கண்ணோட்டம்

கம்பர் சில கண்ணோட்டம், சு.அட்சயா, காவ்யா, பக்.167, விலை ரூ.170. கம்பனை வித்தியாசமான கோணங்களில் இந்நூல் அணுகுகிறது. கம்பராமாயணத்தில் இடம் பெற்றுள்ள இசைக் கருவிகளைப் பற்றிய விரிவாக எடுத்துரைக்கும் கட்டுரை, தற்கால உளவியலில் நினைவின் வகைகளாகக் கூறப்படும் நினைவின் பகுதியை மனத்திருத்தல், மீட்டுக் கொணர்தல் அல்லது மீட்டறிதல் ஆகிய கோட்பாடுகள் கம்பராமாயணத்தில் இடம் பெற்றிருப்பதைக் கூறும் கம்பரின் உளவியல் சிந்தனைகள் கட்டுரை நம்மை வியக்க வைக்கின்றன. கம்பராமாயணத்தில் கூறப்படும் நீர்வளம், நெல் வளம், மன்னரின் நல்லாட்சி, மக்களின் இன்ப வாழ்வு, மாதர்களின் மாண்பு ஆகியவற்றைப் பற்றிய […]

Read more

வலி – இலக்கியம் – அரசியல்

வலி – இலக்கியம் – அரசியல், முனைவர் ஆ.ரேவதி, காவ்யா, பக். 136, விலை 140ரூ. இந்திய சமூகத்தில், ‘வேற்றுமை பார்க்கும் பண்பு’ ஆழமாக வேரூன்றிப் போயுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. கொழுந்துவிட்டு எரியும், ‘சாதி’ என்ற தீ, சாதிக்குள் சாதி என்று சல்லி வேர்கள் போல் கிளை பரப்பி, இந்திய மனித சமூகத்தை வதைத்துக் கொண்டிருக்கிறது. மனிதருக்குள் மனிதரை வேற்றுமை பாராட்டி ஒடுக்கியும் விலக்கியும் வைப்பதற்கு எதிராக எழுத்து, ஆயுதமாக பல காலம் கையாளப்பட்டு வந்துள்ளது. இந்நுாலை உருவாக்கியுள்ள நுாலாசிரியர் ரேவதி, […]

Read more

திராவிட இயக்க இலக்கிய வரலாறு

திராவிட இயக்க இலக்கிய வரலாறு, ப.கமலக்கண்ணன், காவ்யா, விலை 230ரூ. வடநாட்டினரின் ஆதிக்கத்தில் உருவான புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவை பற்றி தமிழ்ச் சமுதாயத்தில் பல நூறு ஆண்டுகளாக ஆழமாக வேரூன்றிப் போன நம்பிக்கைகளைத் துடைத்தெறிவதற்காகத் தோன்றிய திராவிட இயக்க இலக்கியங்களை இந்த நூல் தொகுத்து அவற்றை சிறந்த முறையில் அடையாளப்படுத்தி இருக்கிறது. சாதி வேறுபாடுகள், தீண்டாமை, பெண்ணிய அடக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராகக் குரல் எழுப்பிய தலைவர்கள், இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக உருவான இயக்கங்கள், இதழ்கள், படைப்பாளிகள், படிப்பாளிகள் ஆகிய அனைத்தையும் இந்த நூல் சிறப்பித்துக்காட்டுகிறது. […]

Read more

பூதங்களின் கதை

பூதங்களின் கதை, சிவ.விவேகானந்தன், காவ்யா, விலை 480ரூ. பூதங்களின் கதை என்ற தலைப்பைப் பார்த்ததும், இது திகிலும் திகைப்பும் நிறைந்த கதைகளின் தொகுப்பு என்று நினைத்துவிடத் தேவையில்லை என்பதை இதில் உள்ள இரண்டு கதைகளும் உணர்த்துகின்றன. தமிழகத்தில் பழங்காலம் முதலே பூதங்களின் வழிபாடு நடைமுறையில் இருக்கிறது என்பதையும், பல கோவில்களில் பல்வேறு பெயர்களில் பூத உருவங்கள் இடம் பெற்று இருக்கின்றன என்பதையும் இந்த நூல் ஆய்வு நோக்கில் தந்து இருக்கிறது. தென் மாவட்டங்களில் வழங்கும் பூத கதைப் பாடல்களில் பூதப்பெருமாள் கதை (ஈஸ்வரகாலப் பூதக்கதை), […]

Read more

சித்தர் பாடல்களில் இறைக்கோட்பாடு

சித்தர் பாடல்களில் இறைக்கோட்பாடு, சு.சசிகலா,  காவ்யா, பக்.272, விலை ரூ.280 சித்தர்கள் குறித்து பல்வேறு ஆய்வுகளைச் செய்திருக்கும் நூலாசிரியர், சித்தர் பாடல்களில் இறைக்கோட்பாட்டை ஆய்வு செய்திருக்கிறார். அகத்தியர், பட்டினத்தார், பாம்பாட்டிச் சித்தர், சிவவாக்கியர் உள்ளிட்ட 18 சித்தர்களின் வரலாற்றையும், அவர்களுடைய படைப்புகளில் காணப்படும் இறைக்கோட்பாட்டையும் இந்நூல் ஆய்வு செய்திருக்கிறது. யோகம், மருத்துவம், ஞானம், இரசவாதம் ஆகியவற்றை சித்தர்கள் நுட்பமாக விளக்கியுள்ளதை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. மனிதனுக்கு வெளியே உள்ள அண்டத்துள் உள்ளது மனிதனின் பிண்டத்துள் உள்ளது என்று சித்தர்கள் கூறியிருப்பதை, மனிதன் இயற்கையின் ஒரு பகுதி, […]

Read more

விவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப்பாடல்களும்

விவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப்பாடல்களும், ப.கோடித்துரை, காவ்யா, பக். 108, விலை 110ரூ. விவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப் பாடல்களும் வாழ்வில் வெற்றி பெற விவேகம் வேண்டும். விவேக சிந்தாமணி, 135 பாடல்களைக் கொண்டது; வாழ்வியல் அறங்களை உணர்த்துகிறது. முன்னோர் மொழிப் பொருளைப் பொன்னே போல் போற்றுவோம் என்பதற்கிணங்க, நீதி நுால்களின் கருத்துகளைத் தழுவி உள்ளது. பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளுக்கு, விவேக சிந்தாமணியில் உள்ள பாடல்கள் பெரிதும் துணை புரியும். ஆபத்து வேளையில் உதவாத பிள்ளை, மிக்க பசிக்கு உதவாத உணவு, தாகத்தைத் […]

Read more

கா.சு.பிள்ளை சைவப்பெருமக்கள்

கா.சு.பிள்ளை சைவப்பெருமக்கள், பேரா.சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக். 664, விலை 680ரூ. தமிழகத்தின் தொன்மைச் சமயம் சைவமாகும். இச்சமயம் வளர்த்த பெரியோர் பற்பலராவர்; அவருள் தாயுமானவர், பட்டினத்தார், குமரகுருபரர், சிவஞான சுவாமிகள் ஆகிய நால்வர் பற்றியும், சைவ சித்தாந்த விளக்கத்தையும், சைவ சிந்தாந்த சந்தனாச்சிரியர்கள் பற்றியும் இந்நுால் விரிவாகச் சொல்லியுள்ளது. நுாலைப் படைத்தவர், தமிழகத்தில் தமிழ் வளர்த்த சான்றோரில் குறிப்பிடத்தக்க இடம்பெற்றவர். சட்டம் படித்த பலர் தமிழறிஞராகவும் விளங்கினர். அவருள் எம்.எல்., பிள்ளை எனக் குறிக்கப்பட்ட, கா.சுப்பிரமணிய பிள்ளை முதன்மையாளர். அவர் காலத்து, பி.எல்., சட்டப் […]

Read more
1 4 5 6 7 8 22