பூதங்களின் கதை
பூதங்களின் கதை, சிவ.விவேகானந்தன், காவ்யா, விலை 480ரூ.
பூதங்களின் கதை என்ற தலைப்பைப் பார்த்ததும், இது திகிலும் திகைப்பும் நிறைந்த கதைகளின் தொகுப்பு என்று நினைத்துவிடத் தேவையில்லை என்பதை இதில் உள்ள இரண்டு கதைகளும் உணர்த்துகின்றன. தமிழகத்தில் பழங்காலம் முதலே பூதங்களின் வழிபாடு நடைமுறையில் இருக்கிறது என்பதையும், பல கோவில்களில் பல்வேறு பெயர்களில் பூத உருவங்கள் இடம் பெற்று இருக்கின்றன என்பதையும் இந்த நூல் ஆய்வு நோக்கில் தந்து இருக்கிறது.
தென் மாவட்டங்களில் வழங்கும் பூத கதைப் பாடல்களில் பூதப்பெருமாள் கதை (ஈஸ்வரகாலப் பூதக்கதை), சங்கிலிபூதத்தான் கதை ஆகியவற்றை சுவடிகளில் இருந்து எடுத்து பதிப்பித்து இருக்கிறார் ஆசிரியர். உரைநடையுடன் மூலப் பாடல்களையும் அப்படியே தந்து, அந்தப் பாடல்களில் உள்ள அருஞ்சொற்களுக்கு விளக்கமும் தந்து இருப்பதால் எளிதாகப் படிக்க முடிகிறது.
நன்றி: தினத்தந்தி, 14/8/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029687.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818