நெல்லை மறவர் கதைப்பாடல்கள்

நெல்லை மறவர் கதைப்பாடல்கள், சு.சண்முகசுந்தரம், காவ்யா, விலை 400
ரூ.

முன்னோர்களை வழிபடும் தெய்வவழிபாடு, தமிழகத்தில் பன்னெடுங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதையொட்டி தொகுக்கப்பட்ட இந்த நூல், குறிப்பாகத் திருநெல்வேலிப் பகுதியில் இறந்தோர் வழிபாட்டில் பாடப்படும் பாடல்களை சிறப்பாகப் பதிவு செய்து இருக்கிறது.

நெல்லை மறவர் குலத்தைச் சேர்ந்த ஈனமுத்துப் பாண்டியன், மெச்சும் பெருமாள் பாண்டியன், சோனமுத்துப் பாண்டியன், சிவராமப் பாண்டியன், பாலம்மாள் ஆகியோர் கொலை செய்யப்பட்ட பின்னர் அவர்களது வாழ்க்கை விவரம் தெய்வவழிபாட்டுப் பாடல்களாகப் பாடப்பட்டு இருக்கின்றன.

இந்தப் பாடல்களையும் கதை மாந்தர்களின் வாழ்வில் நடைபெற்ற பரபரப்பான சம்பவங்கள் பற்றிய விவரங்களையும் சேகரித்த ஆசிரியர், அந்த 5 பேர் பற்றி பாடப்பட்ட வில்லுப் பாடல்களையும் அவற்றில் உள்ள அருஞ்சொற்களுக்கான விளக்கத்தையும் தந்து இருக்கிறார்.

இந்தப் பாடல்கள் மூலம் பல நூறு ஆண்டுகளுக்கு முந்திய சமுதாயச் செய்திகள், மக்களிடம் இருந்த பழக்கவழக்கங்கள், குற்றம் செய்தவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை, விவரம் போன்றவற்றை அறிந்துகொள்ள முடிகிறது. மறவர்களின் இன வரலாறு, அவர்கள் வாழும் நிலப்பரப்பு, மறவர்களின் தொன்மம் ஆகியவற்றையும் தாங்கி இருப்பதால் இந்த நூல், ஓர் ஆய்வு நூலாகத் திகழ்கிறது.

நன்றி: தினத்தந்தி, 18/12/19.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000030004.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *