வைரமுத்து வரை
வைரமுத்து வரை, பேராசிரியர் சு.சண்முகசுந்தரம், காவ்யா, விலை 1600ரூ.
இமாலயச் சாதனை என்று பாராட்டும்வண்ணம் 1550 பக்கங்களைக் கொண்ட இந்தப் பிரம்மாண்ட நூல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 1931-ஆம் ஆண்டு முதல் 2020 -ஆம் ஆண்டு வரை தமிழ் சினிமாப் படங்களுக்குப் பாடல்கள் எழுதிய அத்தனைபேர் பற்றிய விவரமும் இதில் தரப்பட்டு இருக்கிறது. ஒரே ஒரு பாடல் எழுதியவரைக் கூட விட்டுவிடாமல், அனைவரைப் பற்றிய தகவல்களையும் பதிவு செய்து இருப்பது வியப்பளிக்கிறது.
காலவரிசைப்படி, ஒவ்வொரு பாடலாசிரியர் பற்றிய குறிப்பு, அவர் எழுதிய பாடல் வரிகளில் காணப்படும் சிறப்பு, அதில் உள்ள சமுதாய விரோத கருத்துகள், அவை பற்றிய விமர்சனம், அந்தப் பாடலாசிரியர் பற்றி மற்றவர்கள் தெரிவித்த கருத்து, பாடலாசிரியரின் பேட்டி ஆகிய அனைத்து சுவாரசியமான தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
தலைமைச் செயலாளர் இறையன்பு, எழுத்தாளர் சுஜாதா ஆகியோர் சினிமாப் பாடல் எழுதி இருக்கிறார்கள் என்பது போன்ற அரிய செய்திகளையும் இதில் காணமுடிகிறது. கவிஞர் வைரமுத்துவை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்த செய்திகள் ஆச்சரியம் அளிக்கின்றன. பாடல் வரிகளை, நிலைமைக்குத் தக்கவாறு வைரமுத்து மாற்றி எழுதிக்கொடுத்ததும் இதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
தற்போதைய சமுதாயத்தினருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் தமிழ் சினிமாப் பாடல் பற்றிய இந்தப் பதிவுகள் அனைத்தும் சிறந்த காலப் பொக்கிஷமாகத் திகழும்.
நன்றி: தினத்தந்தி, 18/7/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031439_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818