ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதை

ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதை, நாகேஸ்வரி அண்ணாமலை, அடையாளம் வெளியீடு, பக். 332, விலை 270ரூ. 5 தலைமுறைகளைச் சேர்ந்த 25 பெண்களின் வாழ்க்கைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நூல்.பெண்களைப் பற்றியும் குறிப்பாக அவர்களின் திருமண வாழ்க்கையின் நிலையைப் பற்றியும் பேசுகிறது. சிவகாசியைப் பூர்வீகமாகக் கொண்ட நாடார் சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள், கல்வி கற்பதில் அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், ஜாதிய நடைமுறைகள், எதிர்காலத்தை, குறிப்பாக திருமணத்தைத் தீர்மானிப்பதில் இளம் பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த சுதந்திரம் என்ன என்பது போன்ற முக்கிய […]

Read more

திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும் தெளிபொருள் விளக்கம்

திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும் தெளிபொருள் விளக்கம், கருத்துரை குறிப்புரை கோ. வடிவேலு செட்டியார், தொகுதி 1, பக். 872, தொகுதி 2, பக். 888, இரண்டு தொகுதிகளும் விலை ரூ 1400. பல்கலை வித்தகரான கோ.வடிவேலு செட்டியார் ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாக வாழ்ந்தவர். இலக்கியம், இலக்கணம், சித்தாந்தம், வேதாந்தம் முதலியவற்றில் கரைகண்ட வித்தகர். இவர், திருக்குறள் பரிமேலழகர் உரைக்குச் செய்துள்ள தெளிபொருள் விளக்கமும், கருத்துரையும், குறிப்புரையும் அடங்கிய நூல், பல்லாண்டுகளாகத் தமிழறிஞர்கள் பலராலும் போற்றப்பட்டும், பின்பற்றப்பட்டும், பாராட்டப்பட்டும் வந்த பெருமைக்குரியது. இந்நூலில் திருக்குறளின் […]

Read more

தமிழ் ஆளுமைகள் மரபும் நவீனமும்

தமிழ் ஆளுமைகள் மரபும் நவீனமும், இரா. காமராசு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 156, விலை 125ரூ. குருகுலக் கல்வி முறையின் கடைசி எச்சமாகவும், ஆசிரிய – மாணவ உறவின் உச்சமாகவும் விளங்கிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையில் தொடங்கி, பாரதி, பாரதிதாசன், விந்தன், கம்பதாசன், ஜெயகாந்தன், கா.மு. ஷெரீப், தி.க.சி. உள்ளிட்ட பதினைந்து அறிஞர்களின் தமிழ்ப்பணியை ஓரளவு விரிவாகவே பதிவு செய்திருக்கிறது இந்நூல். பெரும்புலவராக அறியப்பட்ட பின்னரும் கற்பதில் ஆர்வம் கொண்டிருந்த மீனாட்சிசுந்தரம் பிள்ளை, கீழ்வேளூர் சுப்பிரமணிய தேசிகரிடம் பாடம் கற்றதும், அப்போது […]

Read more

கிராம ஊராட்சி நிர்வாகம்

கிராம ஊராட்சி நிர்வாகம், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக். 344, விலை 260ரூ. ‘இந்தியா கிராமங்களில் வாழ்கிறது. நாட்டின் முதுகெலும்பு கிராமம்தான். கிராமம் உயர்ந்தால்தான் நாடு முன்னேறும்’ என்பது தேசத்தந்தை காந்திஜியின் உறுதியான கருத்து. இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் கிராமப்புறங்களில் வசிப்பதால், அவர்களின் சமூகப் பொருளாதார மேம்பாடு வளர்ச்சி அடைய வேண்டும். அதற்கு ஊரக வளர்ச்சி மிக முக்கியம். எனவே ஊரக வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களையும், விதிகளையும் வகுத்துள்ளன. அந்த வகையில் தமிழ்நாட்டில் மாவட்டம் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், […]

Read more

வான் தொட்டில்

வான் தொட்டில், முனைவர் ஆ. மணிவண்ணன், வானதி பதிப்பகம், பக். 192, விலை 125ரூ. தன்னை உணர்ந்தவன் ஞானி. சமுதாயத்தை உணர்ந்தவன் மனிதன். இந்த இரண்டையும் உணர்ந்தவன் கலைஞன் என்ற கவிதையாய் கொட்டுகிறது இந்நுல். நன்றி: தினமலர், 06/11/2016.   —-   வளர்பிறைகளும் தேய்பிறைகளும், கழனியூரன், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 144, விலை 100ரூ. ஆசிரியர் தன் முதல் நாவலில் அனைத்து வகை சுவைகளையும் கூட்டி எழுதியுள்ளார். நன்றி: தினமலர், 06/11/2016.

Read more

மலரும் நினைவுகளில் காமராஜர்

மலரும் நினைவுகளில் காமராஜர், விருதை ராஜா, கண்ணப்பன் பதிப்பகம், பக். 112, விலை 70ரூ. அனைவரின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ள கர்மவீரர், அவரது வாழ்க்கையில் நடந்த 100 நிகழ்வுகளை நம் கண் முன் காட்டுகிறது இந்நூல் நன்றி: தினமலர், 06/11/2016.   —- நீயே உனக்கு நிகரானவன், ஆர்.சி. சம்பத், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 128, விலை 100ரூ. திரைப்படங்களில் வில்லனாக சித்தரிக்கப்பட்ட எம்.ஆர்.ராதா, தனிமனித வாழ்க்கையில் ஒரு உன்னத மனிதராகத் திகழ்ந்தார் என்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 06/11/2016.

Read more

மரணத்தின் மீது உருளும் சக்கரம்

மரணத்தின் மீது உருளும் சக்கரம், தோப்பில் முஹம்மது மீரான், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், பக். 128, விலை 80ரூ. பல்வேறு இதழ்களில் வந்த சிறு கதைகளின் தொகுப்பு. சில கதைகள், நூலாசிரியரின் அனுபவத்தை கூறுவதாக உள்ளது. நன்றி: தினமலர், 13/11/2016.   —-   சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம், முடிகொண்டான் வெங்கட்ராம சாஸ்திரிகள், அருணா பப்ளிகேஷன்ஸ், பக். 176, விலை 65ரூ. எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கியவர் சாணக்கியர். அவர்சொன்ன வழியில் இன்றைய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது என்று கூறுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 13/11/2016.

Read more

பாரதியும் ஆங்கிலமும்

பாரதியும் ஆங்கிலமும், சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சிவஞானம், பூங்கொடி பதிப்பகம், பக். 64, விலை 30ரூ. தமிழ் மொழியின் வளர்ச்சி, ஆங்கில ஆதிக்க ஒழிப்பு பற்றி மகாகவி வெளியிட்டுள்ள கருத்துக்களை கூறுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 13/11/2016.   —-   மாணவப் பருவம் பிரச்சனைகளும் தீர்வுகளும், சு. தங்கவேலு, அமராவதி பதிப்பகம், பக். 48, விலை 23ரூ. பல நிலைகளையும் தாங்கி வளரும் மாணவனே சிறந்த மனிதனாக வடிவம் பெறுகிறான் என்கிறது இந்த நூல். நன்றி: தினமலர், 13/11/2016.

Read more

புனித அன்னை தெரசா

புனித அன்னை தெரசா, குன்றில்குமார், குறிஞ்சி வெளியீடு, பக். 216, விலை 190ரூ. ஒழுக்கம், கட்டுப்பாடு, சேவையின் திலகமாக வாழ்ந்த அன்னை தெரசாவின் அழியா புகழைக் கூறுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 13/11/2016.   —- நின்று ஒளிரும் சுடர்கள், உஷாதீபன், கவிதா பப்ளிகேஷன், பக். 184, விலை 130ரூ. காலத்தால் அழியாத சிறந்த திரைப்படக் கலைஞர்களின் நடை சித்திரங்களை பிரதிபலிக்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 13/11/2016.

Read more

முதல்வர் இவன்…

முதல்வர் இவன்… தமிழ்மறை தழைக்க வந்த ஸ்ரீ ராமானுஜர், முனைவர் கலியன் எதிராசன், வானதி பதிப்பகம், பக். 260, விலை 150ரூ. வைணவர்கள் தினமும் ஸ்ரீ ராமானுஜரை வழிபடுவதை வழக்கமாக கொண்டவர்கள். 120 ஆண்டுகள் வாழ்ந்த அம்மகானின், 1000மாவது ஆண்டை ஒட்டி இந்நூல் வெளிவந்துள்ளது. ஸ்ரீ ராமானுஜரின் வரலாற்றை நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களின் அடிகளை உரைநடைபோல் எழுதி, விளக்கிய பான்மை நூலாசிரியரின் ஆழ்ந்த புலமைக்கு எடுத்துக்காட்டாகும். ஆழ்வார்கள், ஆசாரியர்கள் வைணவத்தை வளர்த்தது, முதல் பகுதியிலும், ஸ்ரீ ராமானுஜர் அவதரித்தது முதல் அவர் ஸ்ரீ […]

Read more
1 2 3 4 8