நெஞ்சைத் தொடும் நிகழ்வுகள்

நெஞ்சைத் தொடும் நிகழ்வுகள், சு.தங்கவேலு, பூங்கொடி பதிப்பகம், பக். 240, விலை 150ரூ. எல்லாருடைய வாழ்க்கையிலும் நிகழ்வுகள் அனுபவங்களாய் இருந்து கொண்டே இருக்கிறது. நிகழ்வுகளின் மொத்தத் தொகுப்பான வாழ்க்கையில் செய்வதற்கு உரிய செயல்களைச் செய்வது மனிதப் பண்பு, செய்வதற்கு அரிய செயல்களைச் செய்வது இறைப் பண்பு. அப்படி இயங்கும் உலகில் அரிய மனிதர்களின் உயரிய பண்புகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது இந்த நுால். சென்னை மாகாண முதல்வர் ஓமந்துாரார், சாலையோர புளிய மரங்களுக்கு எண் கொடுத்து அதன் மூலம் அரசுக்கு வருவாய் ஏற்படுத்தித்தந்த நிகழ்வு, எம்.கே.தியாகராஜ […]

Read more

கற்கோயிலும் சொற்கோயிலும்

கற்கோயிலும் சொற்கோயிலும், மா.கி.இரமணன், பூங்கொடி பதிப்பகம், விலை 150ரூ. ஆசிரியர் மா.கி.இரமணன், எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர் என்று மிளிர்பவர். ஆம். அதற்கு அவர் எழுதிய கவிதையே சான்று. வாழ்வதற்குப் பொருள் வேண்டும் தான். ஆனாலும் வாழ்வதிலும் பொருள் வேண்டாமா என்ற வரிகள், ஆழ்ந்த சிந்தனையைத் துாண்டும். உண்மையான பூங்கொடி மணக்கத்தானே செய்யும் நுாலின் பெயரே, முதல் கட்டுரையின் தலைப்பாக உள்ளது. ஐந்தெழுத்தை நெஞ்சழுத்தி எழுதிய அனைத்துக் கட்டுரைகளும், கன்னித் தமிழின் களி நடனம், சிந்தனை ஊற்றின் சிகரம் எனலாம். இந்தக் கட்டுரைகளின் மூலம் ஆசிரியர் […]

Read more

நெஞ்சைத் தொடும் நிகழ்வுகள்

நெஞ்சைத் தொடும் நிகழ்வுகள்,சு.தங்கவேலு, பூங்கொடி பதிப்பகம், பக்.240, விலை ரூ. 150. வாழ்க்கை என்பது பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பு எனலாம். அதை நம் மனதுக்கு நெருக்கமாக உணரும் வகையில் தொகுத்துத் தந்திருப்பது இந்நூலின் சிறப்பம்சம். செயற்கரிய செயல்களைச் செய்தவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான 200 சம்பவங்கள் இந்நூலில் மணம் வீசுகின்றன. சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் குடும்பத்துக்கு பசும்பொன்தேவர் மரியாதை கொடுத்த சம்பவத்திலிருந்து தொடங்கும் இத்தொகுப்பில், சிறுவனிடம் பாடம் கற்ற தமிழ்த்தாத்தா உ.வே.சா, அப்துல்கலாமின் பெருந்தன்மை, தியாக சீலர் கக்கன், சாதிகளை வெறுத்த ஜீவா, திரு.வி.க.வின் […]

Read more

நெஞ்சைத் தொடும் நிகழ்வுகள்

நெஞ்சைத் தொடும் நிகழ்வுகள், சு.தங்கவேலு, பூங்கொடி பதிப்பகம், விலை 150ரூ. இது வரலாற்று நூல் என்றாலும், விறுவிறுப்பான நாவலைப் படிப்பது போன்ற அனுபவத்தைத் தரும் வகையில் துணுக்குத் தோரணமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் சாதனை தடம் பதித்தவர்களின் வாழ்வில் நடைபெற்ற சுவாரசியமான, அதே சமயம் உயரிய வாழ்க்கைக்கு உரம் போட்ட நிகழ்வுகள் பற்றிய விவரங்கள், மின்னல் வேகத்தில் படித்துத் தெரிந்து கொள்வதற்கு வசதியாக சுருக்கமாக தொகுத்துத் தரப்பட்டுள்ளன. பல தலைவர்கள் பற்றி இதுவரை அதிகம் கேள்விப்படாத தகவல்களும், நெஞ்சைத் தொடும் சம்பவங்களும் இதில் இடம் […]

Read more

தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம், சு.தங்கவேலு, பூங்கொடி பதிப்பகம், பக்.296, விலை ரூ.200. தொல்காப்பியம்தான் தொன்மையான முதல் இலக்கண நூலாகத் திகழ்கிறது. எம்மொழி இலக்கணத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு தொல்காப்பிய பொருளதிகாரத்திற்கு மட்டுமே உண்டு. எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகிய முப்பெரும் அதிகாரங்களைக் கொண்டது தொல்காப்பியம். இந்நூலிலும் முப்பெரும் அதிகாரங்கள் உள்ளன. எழுத்திலக்கணத்தில், எழுத்துகள் உருவாக்கம், எண்ணிக்கை, மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள், மாத்திரை, போலி முதலியவற்றைக் கூறும் எழுத்தியல் பற்றியும்; பகுபதம், பகாபதம் போன்ற பகுபத உறுப்புகள், உறுப்பிலக்கணம் போன்றவற்றைக் கூறும் பதவியல் பற்றியும்; எழுத்துப் புணர்ச்சி […]

Read more

திருமூலரும் பாரதிதாசனும்

திருமூலரும் பாரதிதாசனும், முனைவர் மா. அண்ணாதுரை, பூங்கொடி பதிப்பகம், விலை 90ரூ. திருமூலரும், பாரதிதாசனும் ஆகிய இரு மாறுபட்ட படைப்பாளிகள் பற்றிய ஆய்வு நூல். இவர்களின் கருத்துக்களை ஒரு சேரக் காண்பது கடினம். திருமூலர் காலத்தால் முற்பட்டவர். பாரதிதாசன் 19-ம் நூற்றாண்டில் தோன்றிய மிகபெருமை வாய்ந்த கவிஞர். முன்னவர் ஆத்திகத்தில் தோய்ந்த சித்தர். பின்னவர் ஆத்திகக் கவிஞராக தோன்றி, பின்னாளில் நாத்திகக் கவிஞராக மலர்ந்தார். இருவரும் இறைக்கொள்கையில் மாறுபட்டு இருந்தாலும், சமுதாய சிந்தனைகளில் ஏறக்குறைய ஒன்றாக விளங்கியவர்கள். இவர்களைப் பற்றி திறனாய்வு செய்திருக்கிறார் நூலாசிரியர் […]

Read more

பாரதியும் ஆங்கிலமும்

பாரதியும் ஆங்கிலமும், சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சிவஞானம், பூங்கொடி பதிப்பகம், பக். 64, விலை 30ரூ. தமிழ் மொழியின் வளர்ச்சி, ஆங்கில ஆதிக்க ஒழிப்பு பற்றி மகாகவி வெளியிட்டுள்ள கருத்துக்களை கூறுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 13/11/2016.   —-   மாணவப் பருவம் பிரச்சனைகளும் தீர்வுகளும், சு. தங்கவேலு, அமராவதி பதிப்பகம், பக். 48, விலை 23ரூ. பல நிலைகளையும் தாங்கி வளரும் மாணவனே சிறந்த மனிதனாக வடிவம் பெறுகிறான் என்கிறது இந்த நூல். நன்றி: தினமலர், 13/11/2016.

Read more

பாரதியும் ஆங்கிலமும்

பாரதியும் ஆங்கிலமும், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., பூங்கொடி பதிப்பகம், விலை 30ரூ. சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் எழுதிய நூல்கள், நீண்ட இடைவெளிக்குப் பின் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளன. “பாரதியும், ஆங்கிலமும்” என்ற தலைப்பில் ம.பொ.சி., எழுதிய நூலில், பாரதியார் கவிஞர் மட்டுமல்ல, பல ஆற்றல்கள் படைத்தவர் என்பதை விளக்குகிறார். இந்நூல் விலை 30ரூ. “மொழிச் சிக்கலும், மாநில சுயாட்சியும்” என்ற நூலில் மாநில சுயாட்சியின் அவசியத்தை வலிமை மிக்க சொற்களால் வலியுறுத்தி உள்ளார். நூல் விலை 35ரூ. சுதந்திரப் போராட்டத்தின்போது, பங்கிம் சந்திரரால் இயற்றப்பட்ட […]

Read more

நீதி நூல்கள்

நீதி நூல்கள், சி. நிவேதா, ஆர்.ஆர். நிலையம் வெளியீடு, விலை 40ரூ. ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, வெற்றிவேற்கை, உலக நீதி, நன்னெறி ஆகிய நீதிநூல்களின் மூலமும், உரையும் கொண்ட புத்தகம். சிறிய நூல் என்றாலும், மிகப் பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி, 24/8/2016.   —- உலகின் முதல் சாதனைகள், சா. அனந்தகுமார், பூங்கொடி பதிப்பகம், விலை 50ரூ. பொதுவாக மாணவ-மாணவிகளும் பொதுப்பரீட்சை எழுதுபவர்களும் அறிந்திருக்க வேண்டிய விஷயங்களை கேள்வி – பதில் ரூபத்தில் கொடுத்துள்ளார் சா. அனந்தகுமார். மொத்தம் 1012 கேள்வி […]

Read more

நவீனத் தமிழ் இலக்கியத்தில் தாகூர் கவிதையின் தாக்கம்

நவீனத் தமிழ் இலக்கியத்தில் தாகூர் கவிதையின் தாக்கம், பெ.சு.மணி, பூங்கொடி பதிப்பகம், விலை 90ரூ. தமிழ்க் கவிதைகளிலும் கதைகளிலும் நாடகங்களிலும் தாகூரின் தாக்கம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதைத் தெளிவாக விளக்குகிறது இந்த நூல். பாரதியார், வ.வே.சு. ஐயர், உ.வே.சாமிநாதையர், த.நா.குமாரசுவாமி, விபுலானந்த அடிகள், கி.வா.ஜ., போன்ற இலக்கிய அறிஞர்களின் வாழ்க்கையிலும் இலக்கியத்திலும் தாகூரின் தாக்கத்தைத் தகுந்த ஆதாரங்களுடன் தந்துள்ளார் நூலாசிரியர். தாகூரின் கவிதைகள் உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள வரலாற்றையும்  அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் தமிழ்மொழிபெயர்ப்பையும் தந்துள்ளதால், தமிழ் வாசகர்கள் பயன் பெறுவார்கள் என்பது உறுதி. […]

Read more
1 2 3 6