பாரதியும் ஆங்கிலமும்
பாரதியும் ஆங்கிலமும், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., பூங்கொடி பதிப்பகம், விலை 30ரூ.
சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் எழுதிய நூல்கள், நீண்ட இடைவெளிக்குப் பின் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளன. “பாரதியும், ஆங்கிலமும்” என்ற தலைப்பில் ம.பொ.சி., எழுதிய நூலில், பாரதியார் கவிஞர் மட்டுமல்ல, பல ஆற்றல்கள் படைத்தவர் என்பதை விளக்குகிறார். இந்நூல் விலை 30ரூ.
“மொழிச் சிக்கலும், மாநில சுயாட்சியும்” என்ற நூலில் மாநில சுயாட்சியின் அவசியத்தை வலிமை மிக்க சொற்களால் வலியுறுத்தி உள்ளார். நூல் விலை 35ரூ.
சுதந்திரப் போராட்டத்தின்போது, பங்கிம் சந்திரரால் இயற்றப்பட்ட “வந்தே மாதரம்” பாடல், மக்களிடம் சுதந்திர தாக்கத்தை ஏற்படுத்தியது. அது பற்றிய வரலாற்றை “வந்தே மாதரம்” என்ற நூலில் எழுதியுள்ளார். விலை 40ரூ.
நன்றி: தினத்தந்தி, 9/11/2016.