சிலம்பொலியார் பார்வையில்

சிலம்பொலியார் பார்வையில், கே.ஜீவபாரதி,  ஜீவா பதிப்பகம், பக்.96, விலை ரூ.80. நூலாசிரியர் தொகுத்த”பட்டுக்கோட்டையார் பாடல்கள்' என்ற நூலுக்கும், நூலாசிரியர் எழுதிய புதுயுகக் கவிஞனும் புதியவன் குரல்களும் மற்றும் அப்துற்-றஹீம் வாழ்வியல் இலக்கியம் ஓர் ஆய்வு ஆகிய நூல்களுக்கும் தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பனார் எழுதிய அணிந்துரைகளின் தொகுப்பே இந்நூல். சிலம்பொலி செல்லப்பனாரின் 85 -ஆவது பிறந்த நாள் சிறப்பு மலருக்கு நூலாசிரியர் எழுதிய கட்டுரை பின் இணைப்பாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களின் சிறப்புகளை சிலம்பொலி செல்லப்பனார் எடுத்துக் கூறுகிறார். “மக்களின் இன்றைய தேவைக்கேற்ற புதுமையான […]

Read more

சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா

சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா, கே.ஜீவபாரதி, அன்னம் (பி) லிட், பக்.118, விலை 100ரூ. ஆழியின் சீற்றத்தால் அழிந்த தமிழ் நுால்களை விட, அறியாமையாலும் கவனக்குறைவாலும் மறைந்து போன நுால்களும், அறிஞர்களும் ஏராளம். ‘இலக்கியத்தில் புதிய எதார்த்தவாதம்’ என்ற தலைப்பில் ஜீவா, ‘தாமரை’ இதழில் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால். இந்நுாலைப் பயில்வதன் மூலம் மனிதகுல வளர்ச்சிக்கு இலக்கியத்தை எப்படி பயன்படுத்த முடியும் என்பதையும், சோவியத் வளர்ச்சிக்கு வித்திட்ட கார்க்கி மற்றும் மாயக்கோவ்ஸ்கி வரலாற்று நாயகர்களின் இலக்கிய ஆளுமைகளையும், மார்க்ஸ், லெனின்,  போன்ற […]

Read more

ஜீவா பார்வையில் கலை இலக்கியம்

ஜீவா பார்வையில் கலை இலக்கியம், கே.ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், பக்.240, விலை ரூ.225. தமிழகப் பொதுவுடமை இயக்கத்தின் தலைவர்களில் முக்கியமானவராக இருந்த ப.ஜீவானந்தம், பிற பொதுவுடமை இயக்கத் தலைவர்களில் இருந்து வித்யாசமானவர். கலை, இலக்கியம் தொடர்பாக அவர் ஆற்றிய உரைகள், எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்திருக்கிறது. பொதுவுடமை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் இலக்கியம் பற்றி பேசாத, கவனத்தில் கொள்ளாத காலத்தில் கம்பனில் காணப்படும் ஜனநாயகக் கருத்துகளை, பொதுவுடமைக் கருத்துகளைப் பற்றி, சங்க இலக்கியங்கள் பற்றி எல்லாம் ஜீவா பேசியிருக்கிறார்; எழுதியிருக்கிறார். அவை தொடர்பான […]

Read more

சட்டப் பேரவையில் அருட்செல்வர்

சட்டப் பேரவையில் அருட்செல்வர், கே.ஜீவபாரதி, அன்னம்,ண விலை 200ரூ. தெய்வபக்தியும் தேசபக்தியும் நிறைந்தவராக விளங்கியவர் அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம். தொடர்ந்து மூன்றுமுறை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தவர். பொருளாதாரம், கல்வி, நதிநீர் இணைப்பு, வேளாண்மை, மின்சாரம் என பல்வேறு துறைகளும் நலிவு நீங்கி வளமை பெறவும், மக்களின் வாழ்வாதாரம் பெருகவும் வழிசெய்யும் வகையில் சட்டமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு. நன்றி: குமுதம், 21/11/18. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027614.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

கண்ணோட்டம்

கண்ணோட்டம், கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, பக். 160, விலை 120ரூ. பத்திரிகைகளில் வரும் மிக அரிதான செய்திகளையும், நம்மை கடந்துபோகும் வரலாற்று நிகழ்வுகளையும் ஆய்வு செய்து கட்டுரைகள் எழுதுவது ஜீவபாரதியின் தனித்தன்மை. அக்கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். வந்தே மாதரம் வந்த கதை, வேலுநாச்சியார் பற்றிய கட்டுரை, கோதையம்மாளுக்கு தியாகி பென்சன் கிடைக்க காரணமாக இருந்த கட்டுரை என்று அத்தனையும் பல்நோக்கு கொண்டு பயனளிப்பதாக உள்ளன. நன்றி: குமுதம், 19/4/2017.

Read more

மலர்களுக்காக மலர்ந்தவை

மலர்களுக்காக மலர்ந்தவை, கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, பக். 184, விலை 135ரூ. “ஓம்சக்தி’ தீபாவளி மலருக்காக நூலாசிரியர் எழுதிய “மும்மூர்த்திகளும் தமிழர்களும்’, “கப்பலோட்டிய தமிழனின் கடைசி மணித்துளிகள்\’, “மாவீரனின் கடைசி மணித்துளிகள்‘’ ஆகிய கட்டுரைகள் போன்று பல்வேறு சமயங்களில் பல்வேறு மலர்களுக்காக எழுதப்பெற்ற கட்டுரைகள் இந்த நூலில் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன. “வடலூர் வள்ளலாரும் பசும்பொன் தேவரும்\’ கட்டுரையில் இருபெரும் மகான்களின் வாழ்க்கையைப் பற்றிய ஒப்பீடும், “மும்மூர்த்திகளும் தமிழர்களும்“ ட்டுரையில் காந்திக்கு “மகாத்மா’ என்ற பட்டம் எப்படி, யாரால் அளிக்கப்பட்டது “  என்பதற்கான விவரமும், மரணத்தைக் […]

Read more

நினைவு நாட்களும் நெஞ்சில் அலைகளும்

நினைவு நாட்களும் நெஞ்சில் அலைகளும், கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, பக். 176, விலை 135ரூ. லட்சியத்துக்காக வாழ்வதென்பது அண்மைக்காலமாக அனைத்து அரசியல் கட்சிகளிலும் அருகி வருகிறது. இந்நிலையில், பொதுவுடைமை இயக்கத்துக்காக தங்களை அர்ப்பணம் செய்த தியாகிகளின் வரலாறு, இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டிருக்கிறது. ப.ஜீவானந்தம், கே.பாலதண்டாயுதம், கே.டி.கே.தங்கமணி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சி.எஸ்.சுப்பிரமணியம், சாம்பவான் ஓடை சிவராமன், சின்னியம்பாளையம் தியாகிகள் ஆகியோருக்கான அஞ்சலிக் கட்டுரைகள், கொண்ட கொள்கைக்காக வாழ்ந்த அற்புதமான மனிதர்களை அறிமுகப்படுத்துகின்றன. இவை ஜனசக்தி, தாமரை உள்ளிட்ட பத்திரிகைகளில் வெளியானவை. பொதுவுடைமை சித்தாந்தம் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, […]

Read more

பொன்விழா சுற்றுலா

பொன்விழா சுற்றுலா, கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, பக். 208, விலை 140ரூ. ஜம்பதாண்டைக் கடந்துவிட்ட நமது தேசத்தின் சுதந்திரத்தை இன்றைய தலைமுறைக்குச் சொல்லப்பட வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்ட நூல். இந்த தேசத்திற்காக பாடுபட்டு மறைந்த மாமனிதர்களின் ஊர்களுக்கு மாணவர்கள் சுற்றுலா செல்வது போன்று இந்நூலை ஜீவபாரதி படைத்திருப்பது சிறுவர்களுக்கு பயன்தரும். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 31/8/2016.

Read more

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் திரை இசைப் பாடல்கள்

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் திரை இசைப் பாடல்கள், கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, விலை 150ரூ. தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர்களில் ‘மக்கள் கவிஞர்’ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கு தனித்த இடம் உண்டு. 24 வயதில் பாடல் எழுதத் தொடங்கிய அவர் 29 வயதில் மரணத்தைத் தழுவினார். 5 ஆண்டு காலத்தில் 57 திரைப்படங்களுக்கு சுமார் 201 பாடல்களை எழுதியுள்ளார். காதல் பாடல்களில் கண்ணியத்தையும், பக்திப் பாடல்களில் பகுத்தறிவையும், சமூகப் பாடல்களில் பொதுவுடைமை கருத்துக்களையும் புகுத்தியவர். ‘சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா’, ‘தூங்காதே […]

Read more

இரண்டாம் புத்தர்

இரண்டாம் புத்தர், சொ. முத்துக்குமார், வனிதா பதிப்பகம், பக். 120, விலை 60ரூ. நம் நாட்டுக்காக, சமுதாயத்திற்காக, விடுதலைக்காகப் பாடுபட்டவர்களின் தொண்டினை, அப்பா, மகன், மகள் ஆகியோரின் உரையாடல்கள் வழி சின்னஞ்சிறுவர்கள் முதல் பெரியோர் வரை அறிந்து கொள்ளச் செய்துள்ளார் ஆசிரியர். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 4/1/2016.   —- எளிமையின் சிகரம் எங்கள் நல்லக்கண்ணு, கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், பக். 288, விலை 180ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024665.html எளிமை, தியாகம், கறைபடாத வாழ்க்கை […]

Read more
1 2