எனது வாய்மொழி பதிவுகள்

எனது வாய்மொழி பதிவுகள்,  கி.ராஜநாராயணன், அன்னம்,  விலை:ரூ.300. கரிசல்காட்டு இலக்கியவாதியான கி.ராஜநாராயணன், வார, மாத நாளிதழ்களுக்கும், செய்தியாளர்களுக்கும் அளித்த நேர்காணல்கள் அனைத்தும் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. அவர் மனதில் புதைந்துள்ள ஆசாபாசங்கள், பலதரப்பட்ட மக்கள் பற்றிய அவரது புரிதல்கள், மற்ற எழுத்தாளர்கள் குறித்த அவரது கண்ணோட் டம் ஆகியவை இந்த நேர்காணல்களில் வெளிப் பட்டு இருக்கின்றன. பள்ளிக்கூடமே செல்லாத அவர் கல்லூரி பேராசிரியரானது, எழுத்துலகில் அறிமுகம் ஆனது, கரிசல் பூமி மீது அவருக்கு உள்ள கரிசனம் ஆகிய அனைத்தையும் இந்த நூலில் காணமுடிகிறது. கி.ராஜநாராயணனை […]

Read more

எனது வாய்மொழி பதிவுகள்

எனது வாய்மொழி பதிவுகள், கி. ராஜநாராயணன், அன்னம், பக்.316, விலை  ரூ. 300. எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் மறைவுக்குப் பிறகு அவருடைய பெயரில், முதல் பதிப்பாக வெளிவரும் கி.ரா.வின் புத்தம் புதிய நூல் என்ற அறிமுகத்துடன், வெளிவந்துள்ள புத்தகம் இது. எனது வாய்மொழி பதிவுகள் என்பதாகத் தலைப்பிடப்பட்டாலும் வெவ்வேறு காலகட்டங்களில் கி.ரா. அளித்த நேர்காணல்களின் தொகுப்புதான் இந்த நூல், எழுத்தாளர் கழனியூரன் தொகுத்தவை (கழனியூரனும் காலமாகிவிட்டார்). விலாவாரியாகச் சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பில் கேட்கப்படுகிற கேள்விகளுக்குக் கூட மிகக் கூராக, ஒற்றை வரியில் பதிலளிப்பதில் […]

Read more

சிவாலயங்களும் சிவகங்கை வாவிகளும்

சிவாலயங்களும் சிவகங்கை வாவிகளும், குடவாயில் பாலசுப்ரமணியன், அன்னம்,  பக்.280, விலை ரூ.250. கோயில் சார்ந்த குடிகளும் குடிகள் சார்ந்த கோயிலுமே தமிழர் வாழ்நெறி. ஆனால், கோயில்களைப் பற்றி நன்கு அறிந்திருப்பவர்கள் கூட அக்கோயில்களோடு தொடர்புடைய குளங்கள் குறித்து அறிந்திருப்பார்களா என்பது ஐயமே. இந்நூலில் திருக்கோயில்கள் குறித்தும், திருக்குளங்கள் குறித்தும் அரிய பல செய்திகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். திருவாரூர் கமலாலய தீர்த்தக் குளம் குறித்த முதல் கட்டுரையில் தொடங்கி, குத்தாலம், திருச்செங்கோடு, திருவேங்கடம், கும்பகோணம், திருவண்ணாமலை, தாராசுரம், சிதம்பரம் போன்ற தமிழக சிவாலயங்கள் குறித்தும், […]

Read more

தமிழக மரபுச் சுவடுகள்

தமிழக மரபுச் சுவடுகள், குடவாயில் பாலசுப்ரமணியன், அன்னம்,  பக். 344, விலை ரூ. 300.   தமிழர்களின் மரபுச் செல்வங்களில் அழிந்தவை போக, எஞ்சியிருக்கும் குறிப்பிட்ட சிலவற்றைப் பற்றி விரிவாக அறிமுகம் செய்கிறது இந்த நூல். கல்வெட்டுகளிலும் சாசனங்களிலும் (கூரை) “மேய்தல்’ என்ற சொல்லாட்சி விரவிக் கிடக்கிறது. ஆனால் மேய்தல் என்பதைத் தவறாகக் கருதி வேய்தல் என்று அதை மாற்றும் போக்கு உள்ளது. மேய்தல் என்பது சரியானது என்பதை சான்றுகளுடன் நிறுவுகிறார் நூலாசிரியர். மண்டபம் என்ற சொல்லுக்குப் பதிலாக “கற்பந்தல்’ என்ற சொல்லை சிராப்பள்ளி […]

Read more

இராஜேந்திர சோழன்

இராஜேந்திர சோழன் (வெற்றிகள்- தலைநகரம் – திருக்கோயில்), குடவாயில் பாலசுப்ரமணியன், அன்னம், பக்.472, விலை ரூ.750. இராஜேந்திர சோழனின் வரலாற்றை கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார், தி.வை.சதாசிவ பண்டாரத்தார் உள்ளிட்ட பல வரலாற்று ஆசிரியர்கள் எழுதியிருக்கின்றனர். அவர்கள் எழுதிய வரலாற்று நூல்களில் விடுபட்டுப் போனவற்றை விரிவாக எழுதும் நோக்கில் இந்த வரலாற்று நூல் படைக்கப்பட்டுள்ளது. முதலாம் இராஜ ராஜனின் மகனான முதலாம் இராஜேந்திரனின் (கி.பி.1012 – 1044) வரலாற்றை விரிவாக இந்நூல் கூறுகிறது. நூலின் முதல் பகுதியில் பிற்காலச் சோழர் மரபு பற்றி சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.முதலாம் ராஜேந்திரன் […]

Read more

சிலம்புச் செல்வரின் அறவழிப் போராட்டங்கள்

சிலம்புச் செல்வரின் அறவழிப் போராட்டங்கள்,  தஞ்சை வெ.கோபாலன், அன்னம், பக்.100, விலை ரூ.80. சைமன் கமிஷனுக்கு எதிர்ப்புத் தெரிவித்த போராட்டம் (1928), உப்பு சத்தியாக்கிரகம் (1930), கள்ளுக்கடை மறியல் போராட்டம் (1931), தனிநபர் சத்தியாக்கிரகம்(1941), ஆகஸ்ட் புரட்சி (1942), வடக்கெல்லை போராட்டங்கள், தெற்கெல்லைப் போராட்டங்கள் என பல மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளுக்காகப் போராடி எட்டுமுறை சிறை சென்றவர் ம.பொ.சிவஞானம். காங்கிரஸ் கட்சியில் அவர் இருந்தபோதே, ஆந்திர மாநில காங்கிரஸ்காரர்களுடன் கருத்து மாறுபாடு கொண்டு வடக்கெல்லைப் போராட்டத்தை நடத்தியவர்; காமராஜர் ஆட்சிக் காலத்தில் திருவாங்கூர் […]

Read more

மகத்தான பேரூரைகள்

மகத்தான பேரூரைகள், பெ.சுபாசு சந்திரபோசு, அன்னம், பக். 240, விலை 200ரூ பேச்சு என்பது உலக அளவில் ஒரு கலையாக உருவான போது, ஒவ்வொரு நாட்டிலும் ஆட்சி, அரசியல், புரட்சி, சமயம், நீதி போன்ற துறைகளில் மாற்றங்களை உருவாக்க, மகத்தான பேச்சாளர்கள் உலக அளவில் உருவாகினர். உலக அளவில் மகத்தான பேருரைகள் ஆற்றிய தத்துவ ஞானிகள், அரசியல் சிந்தனையாளர்கள், பகுத்தறிவுவாதிகள், எழுத்தாளர்கள், சமூகச் சீர்திருத்தவாதிகள், சமயவாதிகள், அரசியல் மேதைகள், சட்ட வல்லுனர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள் என, 25 நபர்களின் பேருரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. […]

Read more

மகத்தான பேருரைகள்

மகத்தான பேருரைகள், பெ.சுபாசு சந்திரபோசு, அன்னம், பக்.240, விலை ரூ.200. தத்துவஞானிகள், அரசியல் சிந்தனையாளர்கள், பகுத்தறிவுவாதிகள், எழுத்தாளர்கள், சமூகச் சீர்திருத்தவாதிகள், சமயவாதிகள், அரசியல் மேதைகள், சட்ட வல்லுநர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள் என 25 ஆளுமைகள் ஆற்றிய மகத்தான பேருரைகளின் தொகுப்பு இந்நூல். இந்த சிறைவாசத்தைக் கண்டு நான் அஞ்சப் போவதில்லை. என்னை தண்டியுங்கள். அது எனக்குப் பொருட்டல்ல. வரலாறு என்னை விடுதலை செய்யும் இது கியூபாவின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து புரட்சி செய்து 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிடல் காஸ்ட்ரோவின் வீர […]

Read more

சட்டப் பேரவையில் அருட்செல்வர்

சட்டப் பேரவையில் அருட்செல்வர், கே.ஜீவபாரதி, அன்னம்,ண விலை 200ரூ. தெய்வபக்தியும் தேசபக்தியும் நிறைந்தவராக விளங்கியவர் அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம். தொடர்ந்து மூன்றுமுறை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தவர். பொருளாதாரம், கல்வி, நதிநீர் இணைப்பு, வேளாண்மை, மின்சாரம் என பல்வேறு துறைகளும் நலிவு நீங்கி வளமை பெறவும், மக்களின் வாழ்வாதாரம் பெருகவும் வழிசெய்யும் வகையில் சட்டமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு. நன்றி: குமுதம், 21/11/18. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027614.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

சோழர் வரலாறு

சோழர் வரலாறு, சி.கோவிந்தராசனார், சி.கோ.தெய்வநாயகம், அன்னம், பக். 222, விலை 150ரூ. சங்க கால சோழர் முதல், பிற்கால சோழர் வரை இந்நூல், சுருங்க விளக்கியுள்ளது, ஆய்வுக்குரிய அடிப்படை செய்திகளை இதில் காணலாம். நன்றி: தினமலர், 22/1/2018.

Read more
1 2