கண்ணீர்ச் சமுத்திரம்
கண்ணீர்ச் சமுத்திரம், குறும்பனை சி. பெர்லின், முக்கடல் வெளியீடு, விலை 90ரூ.
நெய்தலின் வாழ்வை அசலாகப் பதிவுசெய்யும் எழுத்தாளர்களில் ஒருவரான குறும்பனை சி. பெர்லின் எழுதியிருக்கும் இந்தச் சிறுகதைத் தொகுதி கடற்புரத்து மக்களின் அன்றாட வாழ்க்கைப் பதிவுகளைக் கதைக்களன்களாகக் கொண்டிருக்கிறது.
பொது வாசகர்களுக்கு அந்நியமான சொற்கள் ஒவ்வொரு சிறுகதைக்குப் பின்னாலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கடும் நெருக்கடிகள் நிறைந்த சம்பவங்களுக்கு இடையில் நறுக்குத் தெறித்தாற்போல் நகைச்சுவையும் இழையோடுகிறது.
நன்றி: தி இந்து, 5/11/2016.