பதிமூனாவது மையவாடி

பதிமூனாவது மையவாடி, சோ.தர்மன், அடையாளம் பதிப்பகம், விலை 320ரூ. இலக்கியமா, பிரச்சாரமா? இது எல்லாவற்றையும் தொகுத்துப்பாருங்கள். ‘வெள்ளைக்காரர்கள் விட்டுச்சென்ற முப்பத்து ஆறாயிரம் கண்மாய்களைத் திராவிடக் கட்சிகள் அழித்த கதையைப் பேசுகிறேன்’ என்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் ‘சூல்’ நாவலுக்குக் கடந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைக்கிறது. சோ.தர்மன் அதைத் தொடர்ந்து, கிறிஸ்தவ மதப் பிரிவினரைப் பின்புலமாகக் கொண்டு – குறிப்பாக, கிறிஸ்தவக் கல்வி நிலையங்கள், மடங்கள் போன்றவற்றை மிகக் கடுமையாக விமர்சிக்கும் விதமாக ‘பதிமூனாவது மையவாடி’ நாவலை எழுதுகிறார். ஜெயமோகன் முன்னுரை எழுதுகிறார். ‘அடையாளம்’ […]

Read more

தமிழகத்தில் முஸ்லிம்கள்

தமிழகத்தில் முஸ்லிம்கள், எஸ்.எம்.கமால், அடையாளம் பதிப்பகம், பக். 180, விலை150ரூ. வரலாற்று ஆய்வாளரான இந்நூலாசிரியர், தாம் ஆற்றிய வரலாற்றுப் பணிகளுக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றவர். தவிர விடுதலைப் போரில் சேதுபதி மன்னர், மாவீரர் மருது பாண்டியர், ராமநாதபுரம் மாவட்ட வரலாற்றுக் குறிப்புகள், உள்ளிட்ட 18 நூல்களை இயற்றியவர். அந்த வகையில் தமிழக முஸ்லிம்களைப் பற்றி வரலாறு, இலக்கியம், செப்பேடு போன்ற தளங்களிலிருந்து அரிய தகவல்களைத் திரட்டி இந்நூலை இயற்றியுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்திற்கும் அரபு நாடுகளுக்கும் இடையே இருந்த வணிகத்தொடர்புகள், அதற்குப் […]

Read more

நாகரிகங்களின் மோதல்

நாகரிகங்களின் மோதல், உலக ஒழுங்கின் மறுஆக்கம், சாமுவேல் பி.ஹண்டிங்டன், தமிழில்: க. பூரணச்சந்திரன், அடையாளம் பதிப்பகம், விலை 540ரூ. அதிகாரத்திற்கும் கலாச்சாரத்திற்குமான உறவு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, முதலாளித்துவம் – கம்யூனிஸம் இடையிலான பனிப்போர் முடிவுக்கு வந்துவிட்டது. போட்டிக்கு ஆளில்லாத நிலையில் முதலாளித்துவம் தன்னைப் பெருமுதலாளித்துவமாக வளர்த்துக்கொண்டு நிற்கிறது. ஆனாலும், பனிப்போர் காலகட்டத்தின் பதற்றமும் பகைமை உணர்ச்சிகளும் இன்னும் மறைந்துவிடவில்லை. பொருளாதாரக் கோட்பாடுகளின் இடத்தில் மத அடிப்படையிலான கலாச்சாரம் தன்னைப் பொருத்திக்கொண்டு உலக அமைதிக்கு ஊறு விளைவிக்குமோ என்ற அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. 1993-ல் […]

Read more

நாக்கை நீட்டு

நாக்கை நீட்டு, மா.ஜியான், தமிழில் எத்திராஜ் அகிலன், அடையாளம் பதிப்பகம், விலை 90ரூ. உலர்ந்த எலும்புகளின் கடைசி நினைவு தான் எழுதிய படைப்புகள் காரணமாக சீன அரசால் வேட்டையாடப்பட்டு தற்போது லண்டனில் வசிக்கும் 65 வயது எழுத்தாளர் மா ஜியானின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. ஓவியக் கலைஞருமான மா ஜியானின் ஓவியங்கள், 1983-ல் ஆன்மிக மாசுபாட்டை ஏற்படுத்துவதாகக் குற்றம்சாட்டப்பட்டு, கிழித்தெறியப்பட்டு அழிக்கப்பட்டதோடு அவர் சீன அரசால் கைதும் செய்யப்பட்டார். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், அவரது தனிப்பட்ட வாழ்விலும் புயல் வீசியது. விவாகரத்துபெற்ற அவரது […]

Read more

இலங்கையில் சிங்களவர்

இலங்கையில் சிங்களவர், இந்திய இனத் தொடர்ச்சியும் தென்னிந்தியப் பண்பாட்டு நீட்சியும், பக்தவத்சல பாரதி, அடையாளம் பதிப்பகம், விலை 160ரூ. சிங்களவர்களின் பூர்வீகம் சிங்களவர்களின் பூர்வீகம் குறித்த ஆய்வுகளில் பல அவர்கள் இந்தியாவிலிருந்து இலங்கை சென்றவர்கள் என்பதைச் சொல்கின்றன. ஆதி வரலாற்று நூல்களைப் பொறுத்தவரை, வங்காளத்தின் வங்கா நாட்டின் இளவரசிக்கும் லாலா தேசத்துச் சிங்கத்துக்கும் பிறந்த சிகபாகுவின் மகனான விஜயனில் தொடங்குகிறது இலங்கையில் சிங்களவர்களின் பூர்வீகம். இந்நூல், சமூக அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகளை மையமாகக் கொண்டு, அறிவியல்பூர்வமாக சிங்களவர்களின் பூர்வீகத்தை ஆராய்கிறது. மானுடவியல், மரபணுவியல்ரீதியான ஆய்வுகளும் […]

Read more

மாற்றுக் கல்வி பாவ்லோ ஃப்ரொய்ரே சொல்வதென்ன?

மாற்றுக் கல்வி பாவ்லோ ஃப்ரொய்ரே சொல்வதென்ன?, அ.மார்க்ஸ், அடையாளம் பதிப்பகம், விலை 50ரூ. மௌனத்தைக் கலைக்கும் கல்வி சிந்திக்கும் திறனின் வழியாக உரையாடவும் செயலாற்றவும் வல்லமை பெற்றவர்கள் மனிதர்கள். ஆனால் இன்றைய ஆசிரியர் மாணவருக்கு இடையிலான உறவு, கல்வி நிலையங்கள் செயலாற்றும் முறை, பாடநூல் அமைக்கப்பட்ட விதம் எல்லாமே நம்மீது மௌனத்தைப் போர்த்துபவையாகவே உள்ளன என்று கால் நூற்றாண்டுக்கு முன்பே விமர்சித்தவர் கல்வியாளர் பாவ்லோ ஃப்ரேய்ரே. இந்த மௌனத்தைத் தகர்க்க அவர் முன்வைத்த மாற்றுக் கல்விமுறையைச் சுருக்கமாக விவாதிக்கிறது இந்தப் புத்தகம். நன்றி: தமிழ் […]

Read more

முரசுப் பறையர்

முரசுப் பறையர், தி.சுப்பிரமணியன், அடையாளம் பதிப்பகம், விலை 150ரூ. கர்நாடக தலித்துகளின் வரலாறு தமிழக அரசின் தொல்லியல் துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற தி.சுப்பிரமணியன் பல்வேறு அகழாய்வுப் பணியில் ஈடுபட்டவர். தொல்லியல் சார்ந்த பல்வேறு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். அவரது புதிய நூல் ‘முரசுப் பறையர்’. தமிழக சாதிய அமைப்புகளில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அண்டை பிராந்தியங்களின் சாதிகளும் இணைந்திருக்கின்றன. இப்படிப் பிணைப்பு கொண்ட சமூகம் பற்றிய இனவரைவியலாக இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. இந்த நூலில், கர்நாடகத்திலிருந்து தமிழ்நாடு வந்துசேர்ந்த தலித்துகளின் […]

Read more

இஸ்லாமிய வெறுப்புத் தொழில்

இஸ்லாமிய வெறுப்புத் தொழில், நாதன் லீன், அடையாளம் பதிப்பகம், விலை 330ரூ. இஸ்லாமிய வெறுப்பு என்கிற சொல்லாடல் முன்னைக் காட்டிலும் இப்போது மிகப் பரவலாக சமூகத்தில் இருக்கிறது. ‘அச்சம் என்பது நல்ல விலைக்குப்போகும் சரக்கு’ என்கிறார் நாதன் லீன். இந்த அச்சம் எப்படி உருவாக்கப்படுகிறது என்பதைத் தனது ஆய்வில் முன்வைக்கிறார். “அமெரிக்கா, ஐரோப்பா என உலகெங்கும் அடித்துச்செல்லும் இஸ்லாமிய வெறுப்பின் பேரலை, இயற்கையாக நிகழும் ஒன்றல்ல. இது இஸ்லாமிய வெறுப்பு ஊழியர்களால் உருவாக்கப்பட்டது” என்கிறார் நாதன் லீன். இஸ்லாமிய வெறுப்புத் தொழில் உருவாக்கும் அச்சத்தின் […]

Read more

போப் பிரான்சிஸ்  நம்பிக்கையின் புதிய பரிமாணம்

போப் பிரான்சிஸ்  நம்பிக்கையின் புதிய பரிமாணம், நாகேஸ்வரி அண்ணாமலை, அடையாளம் பதிப்பகம், பக்.224, விலை ரூ.200. கார்டினல் ஹோர்கே மரியோ பெர்காகிலியோ 2013-ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி 266-ஆவது போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு போப் பிரான்சிஸ் ஆகிறார். இவர் எங்கு பிறந்தார்? எங்கு படித்தார்? என்று ஆரம்பித்து தற்போதைய அவரது இறைப் பணி வரை தெளிவாக அனைவரும் எளிதாக தெரிந்துகொள்ளும் வகையில் தொகுத்தெழுதியுள்ளார் நூலாசிரியர். போப் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்? அந்த தேர்தல் முறைகள் எவ்வாறு இருக்கும்? பிரான்சிஸ் என்று பெயர்வரக் காரணம் என்ன? என்பன […]

Read more

உங்களுடைய ஒரு கோப்பை காபியில் எவ்வளவு நஞ்சு?

உங்களுடைய ஒரு கோப்பை காபியில் எவ்வளவு நஞ்சு?, உருவாக்கம் பினாங்கு பயனீட்டாளர்கள் சங்கம், தமிழில் டி.கே.ரகுநாதன், அடையாளம் பதிப்பகம், விலை 40ரூ. நாம் அன்றாடம் விரும்பி அருந்தும் பானம் காபி. அதைக் குடிப்பது பொதுப் பழக்கமாகவும் நிர்பந்தமாகவும் ஆகியிருக்கிறது. இதனால் ஏற்படும் தீமைகள் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இந்த நூல் நீங்கள் அருந்தும் ஒரு கோப்பை காபியில் எவ்வளவு நஞ்சு இருக்கிறது என்பதை ஆய்வுபூர்வமாக விவரிக்கிறது.‘ நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more
1 2