நிலைகெட்ட மனிதர்கள்

நிலைகெட்ட மனிதர்கள், க.முத்துக்கிருஷ்ணன், சந்தியா பதிப்பகம், பக்.168, விலை ரூ.170. சினிமா, அரசியல், இலக்கியம் ஆகிய மூன்று துறைகளும் எவரொருவரையும் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ளாது. இத்துறைகளில் பேரும் புகழும் ஈட்டுவது எளிதல்ல. கடும் உழைப்பும் முயற்சியும் இருந்தாலொழிய வெற்றி பெற இயலாது. ஆனாலும் எவ்வித அடிப்படை அறிவும் புரிதலும் இல்லாத சிலர் இத்துறைகளில் கோலோச்சுவது மட்டுமல்லாது கோடிக்கணக்கில் பணமும் ஈட்டுகின்றனர் என்பதையும் மறுக்க இயலாது. அப்படியானவர்களைப் பகடி செய்து புனையப்பட்ட நாவல்தான் ‘நிலைகெட்ட மனிதர்கள்’. மளிகை மண்டி முதலாளி, அவருடைய வேலைக்காரன், மளிகை […]

Read more

கணையாழிக் கதைகள் (1995-2000)

கணையாழிக் கதைகள் (1995-2000), தொகுப்பு ஆசிரியர்கள்: ம.ரா., க.முத்துக்கிருஷ்ணன், வேல் கண்ணன், கவிதா பப்ளிகேஷன், பக். 288, விலை ரூ. 210. நவீன தமிழ் இலக்கியத்தில் “கணையாழி’ என்ற பெயர் பல உணர்வுகளைத் தூண்டக் கூடியது. நவீனம் என்றால் 1960-களுக்குப் பிந்தைய நவீன காலம். ஆனால் இப்போது விமர்சனத்துக்கு வந்துள்ள புத்தகம், புதிய தலைமுறையின் தலைமையின் கீழ் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு. ஒரே இதழிலிருந்து மூன்று கதைகள் கூட இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மிகத் தரமான கதைகள் மட்டுமே ஒவ்வோர் இதழிலும் வெளிவந்ததை இது காட்டுவதாகக் […]

Read more