வரலாறு உணர்த்தும் அறம்

வரலாறு உணர்த்தும் அறம், வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்., நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 50ரூ.

வரலாற்றை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? என்பதற்கான பலவித வழிமுறைகளை இந்த நூல் மூலம் நாம் எளிமையாக புரிந்து கொள்ள முடியும். வரலாறு என்பது என்ன? எதுவெல்லாம் வரலாறாகப் பார்க்கப்படுகிறது? எவற்றையெல்லாம் வரலாறு வசதியாக மறந்து விடுகிறது என்பதை விரிவாக ஆராயும் நூல்.

மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளருமான வெ.இறையன்பு இதை எழுதியுள்ளார். போரின் போதும் மற்றும் குற்றங்களுக்கான கொடூர தண்டனைகள் போன்ற அறப்பிறழ்வுகளில் இருந்தும் எது அறம் என்பதை மனித சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த நூல் உணர்த்துகிறது.

சிந்திக்க தூண்டும் இந்த நூல் அனைவரின் கைகளிலும் தவழ வேண்டிய அருமையான நூல்.

நன்றி: தினத்தந்தி, 10/1/2018.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *