இப்படியெல்லாமா இருக்கிறது பிரச்னை?

இப்படியெல்லாமா இருக்கிறது பிரச்னை?, ப. திருமலை, புதிய வாழ்வியல் பதிப்பகம், விலை 60ரூ. திருட்டு, கொலை, கொள்ளை என்று குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைத் திருத்துவதற்காக ஏற்பட்ட, சிறைச்சாலைக்குள்ளேயே குற்றங்கள் நிகழ்வதன் காரணம் என்ன என்று ஆராய்கிறது ஒரு கட்டுரை. ‘தங்கள் பிரச்னையை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்கிற வேகமும் கவலையும் கைதிகளிடம் இருக்கிறது. அதை யாரிடமும் கொட்ட வழியில்லாதபோது மனதுக்குள்ளேயே புழுங்கி ஆத்திரமாக வெளிப்படுத்துகிறார்கள். அவர்களை ஆற்றுப்படுத்த ஒவ்வொரு சிறைச் சாலையிலும் கவுன்ஸிலிங் அவசியம்’ என்கிறார் ஆசிரியர். காணாமல் போகும் பெண் குழந்தைகள் கருவறையா, […]

Read more

நெஞ்சில் உரம் நேர்மைத் திறம் வி.ஆர்.லட்சுமிநாராயணன் ஐ.பி.எஸ்.

நெஞ்சில் உரம் நேர்மைத் திறம் வி.ஆர்.லட்சுமிநாராயணன் ஐ.பி.எஸ்.,  ப.திருமலை, சோக்கோ அறக்கட்டளை, பக்.272, விலை ரூ.200. புகழ்பெற்ற வி.ஆர்.கிருஷ்ணய்யரின் தம்பியான வி.ஆர்.லட்சுமிநாராயணன் காவல்துறை உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இந்நூல் அவருடைய வாழ்க்கை வரலாறு. பணியின்போது பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்ட போதும், மனிதாபிமானத்தை விட்டுக் கொடுக்காமல், அவர் எடுத்த முடிவுகள் வியக்க வைக்கின்றன. ‘1954 இல் மதுரை – சமயநல்லூர் அருகே வழிப்பறிக் கொள்ளையர்களை மக்கள் தாக்க, ஒரு கொள்ளையர் கொல்லப்படுகிறார். அப்போது அது குறித்து அறிக்கை அளித்த வி.ஆர்.லட்சுமிநாராயணன், தற்காப்புக்காக கொள்ளைக்காரனைக் […]

Read more

இன்றைய பிரச்சனைகளும் தீர்வுகளும்

இன்றைய பிரச்சனைகளும் தீர்வுகளும், ப. திருமலை, கற்பகம் புத்தகாலயம், விலை 250ரூ. சமூக, பொருளாதார, அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு. இதில் பொதுமக்களிடம் இருந்து அன்னியப்பட்டு போகிறதா பொது வினியோகத் திட்டம்? அள்ளும் மணல் அழியும் உயிரினம், தமிழகத்தில் தலித் படுகொலைகள், பிளாஸ்டிக் பயங்கரம், சுங்கச் சாவடியா வழிப்பறி நிலையமா?, பொது சிவில் சட்டம் அவசியமா? என்பன போன்ற 42 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தேசிய அளவிலும், மாநில அளவிலுமான மக்கள் பிரச்சினைகள் குறித்து இந்தக் கட்டுரைகள் பேசுகின்றன. மக்களின் அன்றாட வாழக்கையைப் பறிக்கும் அரசின் கொள்கைகள் […]

Read more

இப்படியெல்லாமா இருக்கிறது பிரச்சினை?

இப்படியெல்லாமா இருக்கிறது பிரச்சினை?, ப. திருமலை, புதிய வாழ்வியல் பதிப்பகம், பக். 80, விலை 60ரூ. திருட்டு, கொலை, கொள்ளை என்று குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைத் திருத்துவதற்காக ஏற்பட்ட சிறைச் சாலைக்குள்ளேயே குற்றங்கள் நிகழ்வதன் காரணம் என்ன என்று ஆராய்கிறது ஒரு கட்டுரை. தங்கள் பிரச்னையை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்கிற வேகமும் கவலையும் கைதிகளிடம் இருக்கிறது. அதை யாரிடமும் கொட்ட வழியில்லாதபோது மனதுக்குள்ளேயே புழுங்கி ஆத்திரமாக வெளிப்படுத்துகிறார்கள். அவர்களை ஆற்றுப்படுத்த ஒவ்வொரு சிறைச்சாலையிலும் கவுன்ஸிலிங் அவசியம்’ என்கிறார் ஆசிரியர். காணாமல் போகும் பெண் […]

Read more

குற்றங்களே நடைமுறைகளாய்

குற்றங்களே நடைமுறைகளாய், ப. திருமலை, வாசகன் பதிப்பகம், பக். 224, விலை 150ரூ. பல்வேறு சமூக பிரச்னைகள் தொடர்பாக, பத்திரிக்கைகளில் வெளியான தகவல்களை தொகுத்து கட்டுரைகளாக உருவாக்கியுள்ளார் ஆசிரியர். தமிழகத்தின் கல்வி அறிவு, குற்ற செயல்கள், விவசாய பிரச்னை, மழை, சூழியல் வன உயிர்கள் பாதுகாப்பு என, பல துறைச் சார்ந்த, 25 கட்டுரைகள், இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. ‘தமிழகத்தில், கடந்த, எட்டு ஆண்டுகளில், மட்டும் காணாமல் போன விவசாய நிலம், 13 லட்சம் ஏக்கர் ஆகும். ‘காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, […]

Read more

மண்ணும் மக்களும் அழிவை நோக்கி

மண்ணும் மக்களும் அழிவை நோக்கி, ப. திருமலை, புதிய வாழ்வியல் பதிப்பகம், விலை 70ரூ. உலக நாடுகளின் குப்பைத் தொட்டி!? முன்னெல்லாம் மாட்டுவண்டிகளில் பயணம் செய்த ஆற்று மணலுக்கு இப்போது டிம்பேர் லாரிகளிலும் கப்பல்களிலும் போகும் ‘யோகம்’ வந்துவிட்டது. நிஜம்தான்! இந்தியாவிலிருந்து மாலத்தீவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆற்று மணலின் இலக்கு 2016 ஆம் ஆண்டில் 10.26 லட்சம் டன்னாக உயர்ந்தது என்று இந்த நூலில் எழுதுகிறார் சுற்றச்சூழல் ஆர்வலரான ப. திருமலை. ‘ஆறுகளில் பத்து சென்டிமீட்டர் உயரத்துக்க மணல் படியவேண்டுமானால் தொடர்ந்து ஓராண்டுக்கு நீர் […]

Read more

மதுரை அரசியல்

மதுரை அரசியல்,  ப. திருமலை, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,  பக்.336, விலை ரூ.250. மதுரையைப் பற்றிக் குறிப்பிட வேண்டுமெனில் ராணி மங்கம்மாளையும், காந்தியின் அரை ஆடைக்கான வரலாற்றையும் அவசியம் குறிப்பிட்டாக வேண்டும். இந்நூலில் அவற்றைப் பற்றி விரிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பது சிறப்புக்குரியது. நூலாசிரியர் மதுரையைச் சேர்ந்தவர் என்பதால், தன் கண் முன்னே நிகழ்ந்த பல சம்பவங்களை அற்புதமாக விவரித்திருக்கிறார். குறிப்பாக அரசியல் கொலை, கூலிப்படை கலாசாரம் தொடர்பாக எழுதும்போது அவர்களுடைய சங்கேத வார்த்தைகளைக் கூட எழுதியிருக்கிறார். மதுரை ஆலயப் பிரவேசம், கக்கன் வரலாறு குறித்த பதிவுகள் அருமை. மௌலானா […]

Read more

இந்தியா? இப்படியும்தான் இருக்கிறது!

இந்தியா? இப்படியும்தான் இருக்கிறது!, ப. திருமலை, முன்னேற்ற பதிப்பகம், பக். 192, விலை 130ரூ. தமிழகம் அறிந்த பத்திரிகையாளர் ப. திருமலை எழுதிய அரசியல், பொருளாதாரம், தேசிய பிரச்னைகள் சார்ந்த கட்டுரைகளின் அருமையான தொகுப்பு. கடந்த இரண்டு ஆண்டுகளில், வெவ்வேறு சூழலில், வெவ்வேறு இதழ்களுக்காக எழுதியவை இவை. ‘நடுங்க வைக்கும் சீனா, நடுக்கத்தில் நாம்’ என, இந்தியா சார்ந்த சர்வதேச பிரச்னையையும் ஆசிரியர் விட்டுவைக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அரசியல் நிகழ்வுகள் தானே என்று நினைத்து நாம் படித்தால், அதில் பல சம்பவங்கள் […]

Read more

வையை தடம் தேடி

வையை தடம் தேடி, ப. திருமலை, இரா.சிவக்குமார், பட்டறிவு பதிப்பகம், பக். 106, விலை 120ரூ. வைகையின் தடம் தேடி புறப்பட்டு, அத்தனை தகவல்களையும் திரட்டி ஆவணப்படுத்தி உள்ளனர், அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள் திருமலை, சிவக்குமார். வைகையை தெய்வமாக மதித்து, அதற்கு படையல் செய்தனர் அன்றைய மதுரை மக்கள். நற்றிணையும், குறுந்தொகையும், ஐங்குறுநூறும் கொண்டாடிய வைகை, இன்று நாறுதே என்ற பெருங்கவலையுடன் நூலாசிரியர்கள் எழுதியிருக்கின்றனர். சிங்கள கதையிலும் வைகை பற்றி குறிப்பிட்டிருப்பதாக கூறும் ஆசிரியர், இன்று வேதிக்கழிவால் வைகை படும் வேதனையையும் விவரிக்கின்றனர். வைகையின் […]

Read more

புதியதேசம்

புதியதேசம், ப. திருமலை, புதிய தரிசனம், சென்னை. சமூகப் பார்வை சமூகப் பிரச்னைகளைத் தேடிப்பிடித்து அதற்காக அலைந்து, திரிந்து தகவல்களைத் திரட்டி, அவற்றைச் சரிபார்த்து வழங்குவதே ஒரு செய்தியாளனின் முக்கியக் கடமை. அவ்வகையில் ப. திருமலை தன் பல்லாண்டு செய்தி உலக அனுபவத்தில் வழங்கி இருப்பதே புதிய தேசம் என்ற இந்நூல். இந்தியாவில் நீர் வழிச்சாலை தேவை, தமிழகத்தில் தொடரும் அரசியல் கொலைகள் பற்றிய ஆழமான கட்டுரை, சீமைக் கருவேல மரத்தினால் காலியாகும் கிராமங்கள், காவல்நிலைய மரணங்கள், தமிழர்களின் தற்கொலை மனஙப்பான்மை, கருக்கொலை, குழந்தை […]

Read more
1 2