வாழ்வின் புதிய பாதையில் பயணிப்போம் வாருங்கள்!

வாழ்வின் புதிய பாதையில் பயணிப்போம் வாருங்கள்!, தேவிசந்திரா, மணிமேகலை பிரசுரம், விலை 80ரூ. வாழ்வியல் மற்றும் சமூக முன்னேற்றச் சிந்தனைகள் அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பு. வாழ்வில் முன்னேற்றம் காண்பதற்கு தன்னம்பிக்கை, தைரியம், லட்சியம் மிகவும் அவசியம் என்பதை மனதில் அழகாக விதைக்கும் விதமாக 32 கட்டுரைகளில் விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் தேவி சந்திரா. நன்றி: தினத்தந்தி, 11/5/2016.   —- ஓலைச் சுவடியின் இரகசியங்கள், முனைவர் தமிழ் இனியன், அறிவுக்கடல் பதிப்பகம், விலை 150ரூ.(ஒவ்வொன்றும்) ஓலைச்சுவடி வடிவில் புத்தகங்கள் ஓலைச்சுவடி போன்ற வடிவமைப்பில் 3 புத்தகங்களை […]

Read more

கீரைக்களூர் ஆதித்தேஸ்வரர் திருக்கோவில்

கீரைக்களூர் ஆதித்தேஸ்வரர் திருக்கோவில், சீ. வசந்தி, கோ. சசிகலா, ஹெரிடேஷ் டிரஷர் வெளியீடு, விலை 65ரூ. சோழர் கலைக்கோவில்கள் என்ற வரிசையில் திருச்சென்னம் பூண்டி சடையார்கோவில், கீரைக்களூர் ஆதித்தேஸ்வரர் திருக்கோவில் ஆகியவை பற்றி தொல்லியல் ஆய்வாளர்களான சீ. வசந்தி, கோ. சசிகலா ஆகியோர் இணைந்து இரு புத்தகங்களை எழுதி இருக்கிறார்கள். ஆசிரியர்கள் இருவரும் தொல்லியல் ஆய்வாளர்கள் என்பதால் இந்த கோவில்களின் சிறப்பை வரலாற்று ஆதாரங்களுடனும் அபூர்வ படங்களுடனும் தந்து இருப்பதால் வரலாற்றை அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இவை பெரிதும் துணையாக இருக்கும். நன்றி: தினத்தந்தி, 11/5/2016. […]

Read more

கல்லோ காவியமோ

கல்லோ காவியமோ, மருத்துவர் வ. இன்பசேகரன், ஏ.வி.எஸ். வடிவேல்-ஜெயலட்சுமி பதிப்பகம், விலை 150ரூ. ஊர் சுற்றினாலும் உலகம் சுற்றினாலும் இன்றளவும் மக்களிடையே கல்வி, பண்பாட்டு ஊடாட்டங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. வரலாறுகளையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. பயணம் என்பது மகிழ்வுக்காக மட்டுமல்ல, அறிவு மற்றும் புரிதல் பகிர்வுக்குமாகவே, இப்பயண நூல் அதற்கு சான்றாக உள்ளது. இந்நூல், கம்போடியா நாட்டின் இயற்கை மற்றும் பூகோள அமைப்பு, தொன்மை வரலாறு, மன்னர்தம் மாண்பு, நுண்மையான கலையியல் சான்றுகள், அங்கு திகழும் கட்டங்களின் மாட்சி என பல்துறை செய்திகளை தாங்கி […]

Read more

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம், இந்திரா சவுந்தர்ராஜன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 272, விலை 150ரூ. அபிமன்யு பெயர்க்காரணம் தெரியுமா? மகாபாரதம் மாபெரும் கடல். வியாசர், விநாயகருக்கப் பிறகு அதில் மூழ்கி முத்தெடுத்து மாலையாகக் கோர்த்தவர்கள் அநேகம் பேர். அதில் இந்திரா சவுந்தர்ராஜனும் ஒருவர். தான் கண்டெடுத்த முத்துக்களை அழகான மாலையாக கோர்த்திருக்கிறார், இந்த நூல் வழியாக. மலர்கள் தனித்தனியாக இருப்பது அழகுதான். அதே மலர்களை மாலையாக தொடுத்தால் இன்னும் கூடுதல் அழகு பெறுகிறது அல்லவா! அப்படி ‘தினமலர்’ ஆன்மிக […]

Read more

சுப்ரஜா சிறுகதைகள்

சுப்ரஜா சிறுகதைகள், சுப்ரஜா, கவிதா பப்ளிகேஷன், பக். 544, விலை 400ரூ. வெவ்வேறு சூழ்நிலைகளில் சுப்ரஜா எழுதிய கதைகளின் தொகுப்பு. வீடென்று எதைச் சொல்வீர்? இன்றைய ஃபிளாட் மயமாகலில் நகரத்தின் ஆன்மா சிதைந்து போவதை வலியோடு சொல்லும் கதை. எல்லாமே இது மாதிரி மனதைப் பிசையவைக்கும் கதைகள்தான். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 04/5/2016.   —- திமிரும் நீயும் ஒரே சாயல், ஷர்மிவீரா, வாசகன் பதிப்பகம், பக். 96, விலை 75ரூ. காதலர்கள் தங்களை அடையாளம்காண வைக்கும் பாசாங்கற்ற கவிதைகள். -இரா. மணிகண்டன். […]

Read more

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம், ஆர். பாலகிருஷ்ணன், பாரதி புத்தகாலயம், பக். 178, விலை 150ரூ. திராவிடர்களின் பூர்வீகம் சிந்துசமவெளி! நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு, தான் சேகரித்த தரவுகளைக் கொண்டு, அறிவியல்பூர்வ ஆய்வு முறையை கைக்கொண்டு, சிந்துவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளத்தை இந்த நூலில் நிறுவ முயன்றுள்ளார், நுாலாசிரியர். இந்திய ஆட்சிப் பணியின் (ஐ.ஏ.எஸ்.,) மூத்த அலுவலரான இவர், தன் கடும் அலுவல்களுக்கிடையில் கடந்த, 25 ஆண்டு கால உழைப்பில் கண்ட உண்மைகளை நுாலாக்கி தந்துள்ளார். இவரது ‘மாற்றி யோசிக்கும்’ ஆய்வுமுறை, சிந்துவெளி பண்பாடு […]

Read more

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள், ப்ரியாபாலு, கண்ணப்பன் பதிப்பகம், பக். 560, விலை 400ரூ. நன்னெறிகளை கதாபாத்திரங்களின் மூலம் எடுத்துரைக்கும் இக்கதைகள், மந்திரங்கள், தந்திரங்கள், மாயாஜாலங்கள் நிறைந்தவை. வாழ்க்கைக்குத் தேவையன ஆலோசனைகளையும் வழங்கும் கதைகள் இவை. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 04/5/2016.   —- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திரை இசைப் பாடல்கள், தொகுப்பாசிரியர் கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, பக். 192, விலை 150ரூ. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்களில் கண்ணியத்தையும் பகுத்தறிவையும் பொதுவுடமையையும் சிறப்பாகக் காணலாம் என்பதற்கு இத்தொகுப்பு நூலே சான்று. -இரா. மணிகண்டன். […]

Read more

இந்திய இலக்கியச் சிற்பிகள் ராஜாஜி

இந்திய இலக்கியச் சிற்பிகள் ராஜாஜி, ஆர்.வெங்கடேஷ், சாகித்ய அகாடமி, பக். 128, விலை 50ரூ. தாம்புக் கயிறும் ராஜாஜியும் ராஜாஜியோடு இலக்கியப் பயணத்தில் உடனிருந்தவர், மீ.ப.சோமு. ராஜாஜி அவ்வப்போது மீ.ப.சோமுவின் வீட்டிற்குப் போவது உண்டு. மாடியில் வீடு. உயரமான சுழல் படிகள்.கைப்பிடி இருக்காது. ராஜாஜி ஏறி வருவதற்கு வசதியாக ஒரு தாம்புக் கயிற்றைத் தொங்கவிட்டிருப்பார்கள். தள்ளாத வயதில், தாம்புக் கயிற்றை பிடித்துக்கொண்டு ஏறி,மாடிக்கு வருவார் ராஜாஜி. காரணம், இலக்கிய நட்பு . . . ராஜாஜி ஒரு தீர்க்கதரிசி என்று மதிப்பிடுகிறார்கள் அவருடைய அபிமானிகள். இல்லை,அவர் ஒரு […]

Read more

தீண்டாமைக்குத் தீர்வு என்ன?

தீண்டாமைக்குத் தீர்வு என்ன?, ஆர்.பி.வி.எஸ். மணியன், வர்ஷன் பதிப்பகம், பக். 96, விலை 60ரூ. இந்தியாவில் தீண்டாமை என்பது நீண்டகால விவாத பொருளாக இருந்துவருகிறது. அது இந்து மதத்தோடு இணைத்து பார்க்கப்படுகிறது. உண்மையில், இந்து மதத்தில் தீண்டாமை இல்லை. ஞானிகள் அதை அங்கீகரிக்கவில்லை என, ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த கீழ்குலத்தவராக கருதப்பட்ட மாறநேர் நம்பியின் இறுதிச் சடங்குகளை செய்த பெரிய நம்பி, அவரை கடவுளான நம்பெருமாள் அங்கீகரித்தது, நந்தனார் வரலாறு, திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் வரலாறு, ஆதிசங்கரர் – புலையன் விவாதம், பல்வேறு ஆதாரங்களை நூலாசிரியர் […]

Read more

ஸ்ரீவைஷ்ணவ தாஸர்கள் என்ற சீர்மிகு ஸ்ரீராமானுஜ தாஸர்கள்

ஸ்ரீவைஷ்ணவ தாஸர்கள் என்ற சீர்மிகு ஸ்ரீராமானுஜ தாஸர்கள், முனைவர் இரா. அரங்கராஜன், பக். 188, விலை 150ரூ. ஸ்ரீ வைஷ்ணவம் எனும் விசிஷ்டாத்வைதம், ராமானுஜரால் புத்துயிர் அளிக்கப்பட்டு, ஆயிரம் ஆண்டுகளாக வளர்ந்து நிலை பெற்றுள்ளது. அதற்கு அடிப்படையாக இருந்த, கைங்கர்யத்தில் ஊன்றிய ஸ்ரீவைஷ்ணவ தாசர்கள், 50பேரின் பெருமைகளைக் கூறுகிறது இந்த நூல். கர்மயோகிகளுக்கும், கைங்கர்ய நிஷ்டர்களுக்கும் உள்ள வேறுபாடுகளைக் கூறுவதும் (பக். 3), ‘ஏறுதிருவுடையான்’ என்ற ஆண்டாள் பாசுரத்தின் சொல்லிற்கு, சரியான பொருள் விளக்குவதும் (பக். 30), தாழ்த்தப்பட்டவரான மாறநேர் நம்பியின் உயர்குணங்களை விளக்குவதும் […]

Read more
1 2 3 4 5 9