டாக்டர் ஜேசி குமரப்பாவின் கருத்துக்களஞ்சியம்

டாக்டர் ஜேசி குமரப்பாவின் கருத்துக்களஞ்சியம், டாக்டர் மா.பா. குருசாமி, சர்வோதய இலக்கியப் பண்ணை, விலை 300ரூ. ஜேசி குமரப்பா: ஆளுமையும் கருத்துகளும் தஞ்சையில் பிறந்து இங்கிலாந்தில் படித்து தணிக்கையாளர் ஆகி, மும்பையில் தொழில் செய்த இளைஞர் அவர். பின்னர் அமெரிக்கா சென்று மேற்படிப்பு முடித்து மும்பை திரும்பியிருந்தார். மேற்கத்திய பாணியில் நடை உடை பாணிகள் கொண்டவர். பொருளாதாரம் பற்றி ஒரு கட்டுரை எழுதினார். அதை நூலாக வெளியிட காந்தியை அணுகுமாறு சொன்னார்கள். காந்தியை சந்திக்கப்போனபோது காத்திருக்க வேண்டியிருந்தது. பார்க்காமல் கட்டுரையை மட்டும் அளித்துவிட்டுத் திரும்பிவிட்டார். […]

Read more

தீர்க்க சுமங்கலி பவ!

தீர்க்க சுமங்கலி பவ!, ப்ரியா கல்யாணராமன், குமுதம் புது(த்)தகம், பக். 160, விலை 150ரூ. பெண்களுக்கும் அம்மன்களுக்கும் உள்ள நெருக்கத்தை பக்தி என்ற ரீதியில் மட்டும் காட்டாமல், மகளுக்கும் தாய்க்குமான பாசம் என்ற ரீதியிலும் காட்சிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர் ப்ரியா கல்யாணராமன். பெண்களுக்கு உரிய காலத்தில் திருமணம், குழந்தை பாக்கியம், சுகப்பிரசவம், நோய்களில் இருந்து விடுதலை, பில்லி சூனியம் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு உள்ளிட்ட ஏராளமான பலன்களை அள்ளித்தரும் தெய்வங்களைப் பற்றியும் திருத்தலங்கள் பற்றியும் பக்திமணம் கமழ, குமுதத்தில் வாரந்தோறும் எழுதிவந்தது, இப்போது நூலாக வந்துள்ளது. தம்பதியர் […]

Read more

உலக அரங்கில் உயர்ந்த தமிழர்கள்

உலக அரங்கில் உயர்ந்த தமிழர்கள், எஸ். அன்வர், குமுதம் புது(த்)தகம், பக். 151, விலை 150ரூ. உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு பல உயர்ந்த பதவிகளில் உலகம் முழுக்க கோலோச்சியவர்கள் தமிழர்கள் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டும் நூல். கூகுள் சி இ ஓ சுந்தர் பிச்சை உள்ளிட்ட 11 ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களின் தனித்திறன், அவர்களுக்குப் பின்னிருந்த உந்துசக்திகளை தொகுத்து இந்த அரிய நூலை உருவாக்கித்தந்துள்ளார் அன்வர். உலக அரங்கில் தமிழர்களை தலை நிமிரவைத்த தமிழர்களைப் பற்றிய வாழ்க்கைப் பதிவு. -இரா. மணிகண்டன். நன்றி: […]

Read more

நோபல் பரிசு பெற்ற வேதியியல் விஞ்ஞானிகள்

நோபல் பரிசு பெற்ற வேதியியல் விஞ்ஞானிகள், அரு. வி. சிவபாரதி, நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 192, விலை 120ரூ. வேதியியலில் சாதனை புரிந்த அறிவியல் அறிஞர்கள் பற்றியும் அவர்களின் வாழ்க்கையையும் அவர்களின் கண்டுபிடிப்புகளையும் பற்றி எழுதப்பட்ட நூல். மாணவர்களுக்கு உபயோகமான நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 20/4/2016.   —-   ஐந்திரன் கவிதைகள், ஐந்திரன், லெனின் விஜி பதிப்பகம், பக். 260, விலை 120ரூ. சமூக அவலங்களை உடுத்துக் கூறும் மக்களுக்கான கவிதைகள். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 20/4/2016.

Read more

இனியொரு கடவுள் செய்வோம்

இனியொரு கடவுள் செய்வோம், கவிஞர் தியாரூ, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 180, விலை 135ரூ. மரபின் பெருமை மாறாமல், மரபை எளிமைப்படுத்தி புதிய சந்தங்களில் எழுதப்பெற்ற மரபுக் கவிதைகளின் தொகுதி. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 20/4/2016.   —– கந்தர்வன் காலடித் தடங்கள், புலவர் வை. சங்கரலிங்கம், ஏ.ஆர். பப்ளிகேஷன்ஸ், பக். 160, விலை 140ரூ. உழைக்கும் தொழிலாளர்கள், அடக்குமுறைக்கு ஆட்படும் பெண்கள், மக்கள் பற்றியும் தன் படைப்புகள் வழி பதிவு செய்த கந்தர்வன் படைப்புகள் பற்றியும் அவரது வாழ்க்கை […]

Read more

அசையா சொத்து

அசையா சொத்து, கவிஞர் ஆ. முரகரசு, கவிஞர் பதிப்பகம், பக் 142, விலை 100ரூ. சமூக அக்கறை சார்ந்த கவிதைகளின் தொகுப்பு. சமூக அநீதிகளை சூடான வார்த்தைகளால் குட்டுவது பொருத்தம். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 20/4/2016.   —- மாறிச் செல்லும் மாற்றங்கள், ஜி.கே. தமிழ்ச்செல்வி, தாரிணி பதிப்பகம், பக். 132. விலை 100ரூ. மாற்றுத் திறனாளிகளின் கூக்குரல் வெளியே கேட்பதில்லை. அதை கேட்கச் செய்யும் முயற்சியே இந்நூல். மாற்றுத் திறனாளியின் சொந்த அனுபவங்கள் இவை. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 20/4/2016.

Read more

ஜீவா பார்வையில் அறிஞர்களும் கவிஞர்களும்

ஜீவா பார்வையில் அறிஞர்களும் கவிஞர்களும், ஜீவா பதிப்பகம், பக். 288, விலை 180ரூ. ஜீவா தன் எழுத்தின் வழியாகவும் மேடை முழக்கத்தின் வழியாகவும் உலக அறிஞர்கள் முதல் உள்ளூர் கவிஞர்கள் வரை வெளிக் கொணர்ந்த கருத்துக்களின் தொகுப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 20/4/2016.   —- தென்பாண்டி தந்த திருவள்ளுவர், டாக்டர் கேசவ சுப்பையா, துவாரகா பதிப்பகம், பக். 228, விலை 120ரூ. வள்ளுவரின் வரலாறோடு தமிழகத்தின் வரலாற்றையும் பேசும் நூல். அவர் வாழ்ந்த பகுதியின் வரலாற்றை கணித்துள்ளது சிறப்பு. -இரா. மணிகண்டன். […]

Read more

இலக்கியத்தில் மேலாண்மை

இலக்கியத்தில் மேலாண்மை, வெ. இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 1300ரூ. எந்த ஒரு தொரீல் என்றாலும், ஏன் விவசாயம் என்றாலும் அதில் மேலாண்மை இருக்க வேண்டும் என்பது தான் தற்போதைய உலகில் அழுத்தம் திருத்தமாக கூறப்படும் உண்மையாகும். மேலாண்மை பண்புகளை எல்லோரிடமும் வளர்ப்பதற்கு 105 தலைப்புகளில், ஒரு வழிகாட்டும் நூலாக திகழும் இந்த நூலை, சிறந்த இலக்கியவாதியும், சிறந்த பேச்சாளரும் மற்றும் அரசு பணியின் நிர்வாகி என பன்முகத் தன்மையை தன்னகத்தை கொண்டுள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான வே. இறைவன்பு எழுதிய […]

Read more

டோக்கன் நம்பர் – 18

டோக்கன் நம்பர் – 18, இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 160, விலை 100ரூ. திருச்சி மாவட்டத்தில், தனித் திறமையுடன் சிறுகதைகளை எழுதும் எழுத்தாளர்கள் பலர் இருந்தாலும், அவர்களில் 10பேரின் மிகச் சிறந்த சிறுகதைகள் தலா இரண்டாக மொத்தம் 20 சிறுகதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதைகயும் ஒவ்வொரு தளத்தில் பயணிக்கின்றன. இவை கதைகள் என்பதைவிட மனித வாழ்க்கையின் எதார்த்தங்கள் என்று கூறுவது மிகைப் பொருத்தமானது. ஒவ்வொரு எழுத்தாளர்களின் கதை தொடக்கத்திலும், அவர்களைப் பற்றிய சிறப்புகள் சிறு குறிப்புகளாகத் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் கதையான […]

Read more

நம்பிக்கை நாயகன்

நம்பிக்கை நாயகன், ராம.ஹேமமாலினி, சென்னை புக்ஸ், விலை 50ரூ. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற். அவரது வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள், அவரைப் பற்றிய பிறரின் கண்ணோட்டங்கள், பேட்டிகள் ஆகியவற்றை பதிவு செய்திருக்கும் நூல்.மோடி மிகப்பெரிய சவால்களையும், பிரச்சினைகளையும் எதிர்கொண்டவர். ஆனால் அவற்றை தனக்குச் சாதகமான வாய்ப்புக்காக மாற்றிக்கொண்டது எப்படி, அரசியல் பின்புலமோ செல்வமோ செல்வாக்கோ பாரம்பரியமோ ஏதுமின்றி பிரதம வேட்பாளர் வரை முன்னேறியது எப்படி, ஏழைக் குடும்பத்தில் பிறந்த மோடி, தன்னிகரில்லா தேசியத் தலைவராக உயர்ந்தது எவ்வாறு? இவற்றுக்கு விடை […]

Read more
1 3 4 5 6 7 9