உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் முதல் தொகுதி
உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் முதல் தொகுதி, பழ.அதியமான், பதிப்பாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி, உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், விலை 600ரூ. காலத்தின் கருவூலம் உ.வே.சாமிநாதையரின் சமகாலப் புலவர்கள், அடுத்த தலைமுறைப் புலவர்கள், உயர் அதிகாரிகள், ஆதினக் கர்த்தர்கள் போன்றோர் அவருக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு இப்புத்தகம். பிறருக்கு, சாமிநாதையர் எழுதிய கடிதங்கள் இதில் குறைவு. எனினும், தனக்குக் கடிதம் எழுதியவர்களுக்குப் பதிலாக அவர் எழுதிய சில குறிப்புகள் உண்டு. ஜி.யு.போப், ஜுலியன் வின்சோன், பொன்னம்பலம் குமாரசாமி உள்ளிட்ட சிலர் தவிர, மற்றவர் அனைவரும் தமிழிலேயே கடிதங்களை எழுதியுள்ளனர். […]
Read more