ஆப்பிளுக்கு முன்
ஆப்பிளுக்கு முன், சி.சரவண கார்த்திகேயன், உயிர்மை பதிப்பகம், விலை 170ரூ.
ஏவாளான காந்தியின் கதை
கதை வடிவில் காந்தியை வடிப்பது சவாலான ஒன்று. காந்தி குறித்த மதிப்பீடுகளுடன் எழுத்தாளனின் கற்பனையும் மோதிக்கொண்டே இருக்க வேண்டும். அந்த மோதல் மதிப்பீடுகளுக்குப் புதிய உருவம் அளிக்கின்றன. அவற்றைக் கூர்ப்படுத்துகின்றன. இவ்விளையாட்டில் வெற்றிபெற்றிருக்கிறது ‘ஆப்பிளுக்கு முன்’ நாவல்.
இந்நாவல் காந்தியின் பிரம்மச்சரிய பரிசோதனையைக் களமாகக் கொண்டிருக்கிறது. அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் காமமே காரணமாகிறது. காமத்தை வெல்லும் ஒருவன் பெண்ணாக மாறுகிறான். அம்மாற்றம் சமூகத்தில் நிலவும் பால்பேதத்தையும் அதனால் எழும் வன்முறையையும் ஒடுக்கச் செய்யும் என்பதைத் தன் வாழ்வின் வழியே சோதனைசெய்து நிரூபிக்க விரும்புகிறார் காந்தி. அச்சோதனைகளே நாவலாக விரிவு கொள்கிறது.
சபிக்கப்பட்ட கனியை உண்பதற்கு முன் ஆதாமும் ஏவாளும் நிர்வாணமாய் வாழ்கின்றனர். அந்தக் குறுகிய காலத்தில் காந்தியின் உருவத்தைப் பொருத்தி பரிசோதனைகளை நிகழ்த்தியிருக்கிறார் சரவணகார்த்திகேயன்.
-கிருஷ்ணமூர்த்தி,
நன்றி: தி இந்து, 3/11/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818