கனவும் விடியும்

கனவும் விடியும், தொகுப்பு அ.வெண்ணிலா, சாகித்திய அகாடமி, விலை 200ரூ. வரலாற்றில் தமிழ்ப் பெண் கவிஞர்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரை போன்ற தொகுப்பு ஆசிரியரின் முன்னுரை, பல அரிய தகவல்களைத் தாங்கி இருக்கிறது. சங்க காலத்திற்குப் பிறகு, தற்போதுதான் அதிக அளவில் தோன்றி இருக்கும் தமிழ்ப் பெண் கவிஞர்கள் பலரின் ஆற்றலை வெளிக்கொணர்ந்து அவர்களை மெச்சும் வகையில் இந்தக் கவிதைத் தொகுப்பு அமைந்துள்ளது. தேர்ந்து எடுக்கப்பட்ட ஒவ்வொரு கவிதையும் ஆழ்ந்து படித்து இன்புறும் வகையில் அமைந்து இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 21/11/2018. இந்தப் புத்தகத்தை […]

Read more

சிதரால் திருச்சாரணத்துமலை சமணப்பள்ளி

சிதரால் திருச்சாரணத்துமலை சமணப்பள்ளி, சிவ. விவேகானந்தன், காவ்யா, பக்.301, விலை ரூ.300. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு குமரி நாட்டில் சமணம் தழைத்தோங்கி வளர்ந்திருந்தது என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன. இன்றும் அந்த மதத்தின் அழியாத ஆவணங்களாக பல இடங்கள் திகழ்கின்றன. அவற்றுள் மிக முக்கியமானது திருச்சாரணத்துமலை எனப்படும் சிதரால் ஆகும். சமண மதக் கல்வெட்டுகளும், சிற்பங்களும், ஆலயங்களும் காலஓட்டத்தில் சிதைந்தும், மாற்றமடைந்தும் வந்துள்ளதை அறிய முடிவதுடன், அவை பற்றிய புதிய புதிய தகவல்கள் நம்மை வியக்க வைக்கின்றன. சமயவியல், கட்டடக் கலையியல், கல்வெட்டியல், சிற்பவியல் […]

Read more

திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்

திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்,  டி.வி.ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், பக். 120, விலை ரூ.80. திவ்யதேசம் நூற்றி எட்டினுள் ஒன்று திருக்கோளூர். நம்மாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட இந்த ஊருக்கு ஒருமுறை ஸ்ரீராமானுஜர் செல்லும் போது, அவ்வூரிலிருந்து பெண்மணி ஒருத்தி அவ்வூரைவிட்டு வெளியே செல்வதைப் பார்த்துக் காரணம் கேட்கிறார். காரணம், ஒன்றா இரண்டா? முயற்புழுக்கை வரப்பில் இருந்தால் என்ன? வயலில் இருந்தால் என்ன? ஞானமற்ற நான் எங்கிருந்தால் என்ன? என்று கூறும் அப்பெண்மணி, அருளாளர்கள் 81 பேரின் அருஞ்செயல்களை எல்லாம் எடுத்துக் கூறி, இவர்களைப் போல […]

Read more

குழந்தைகளுக்கான ஆப்பிரிக்க பழங்கதைகள்

குழந்தைகளுக்கான ஆப்பிரிக்க பழங்கதைகள், மொழிபெயர்ப்பாளர் எம்.பாண்டியராஜன், பக். 100, விலை 99ரூ. குழந்தைகளுக்கான கதைகள் என்று தலைப்பிலேயே தெரிவிக்கப்பட்டிருந்தாலும், பெரியவர்களும் விரும்பி படிக்கும் வகையில் தான் இந்த கதைகள் உள்ளன. பல கதைகளில் குழந்தைகளுக்கு தக்க அறிவுரை மற்றும் ஆலோசனையும், பல கதைகளில் நாம் அறிந்திராத தகவல்களும் அழகாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆப்பிரிக்க மொழியிலிருந்து ரஷிய மொழியில் பெயர்க்கப்பட்ட இந்த கதைகளை, ஆங்கிலவழி தமிழில் தந்திருக்கிறார் ஊடகவியலாளர் பாண்டியராஜன். குழந்தைகளுக்கான அறிவுத் தேடலில் பல நுால்கள் வெளிவந்தாலும், இந்நுால் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறது. குழந்தைகள் […]

Read more

நவீன தாமிரபரணி மஹாத்மியம்

நவீன தாமிரபரணி மஹாத்மியம், முத்தாலங்குறிச்சி காமராசு, பொன் சொர்ணா பதிப்பகம், விலை 450ரூ. தமிழகத்தில் தோன்றி, தமிழகத்திற்கு உள்ளேயே ஓடி கடலில் கலக்கம் ஒரே நதியான தாமிரபரணி, புண்ணியமானது என்று இதிகாசங்களிலும் புராணங்களிலும் கூறப்பட்டு இருக்கிறது. அப்படிப்பட்ட தாமிரபரணியின் வரலாறு, அதன் முக்கியத்துவம், அது தொடர்புடைய அதிசயிக்கத்தக்க தகவல்கள், கதைகள் ஆகிய அனைத்தும் இந்த நூலில் தரப்பட்டுள்ளன. தாமிரபரணி நதியைப் பற்றி அறிந்து கொள்ள இந்த ஒரு நூலைப் படித்தாலே போதும் என்ற அளவு அத்தனை அம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அத்தியாத்தின் […]

Read more

பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் (எ) துளசிதாசரின் அஷ்டப் பிரபந்தம்

பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் (எ) துளசிதாசரின் அஷ்டப் பிரபந்தம் , தொகுப்பாசிரியர்: கோ. எழில்வேந்தன், கவிதா பப்ளிகேஷன், பக்.416; விலை ரூ.300 அஷ்டப் பிரபந்தம் கற்றவன் அரைப்பண்டிதன் என்னும் புகழ்ச் சொல்லுக்கு உரியது இந்நூல். இதை இயற்றிய பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் திவ்யகவி அதாவது தெய்வத் தன்மை பெற்ற கவி எனப் புகழப்படுபவர். நாலாயிர திவ்யப் பிரபந்தத்துக்குப் பிறகு தமிழ் வைணவ நூல்களில் மிகவும் போற்றுதற்குரியதாக அஷ்டப் பிரபந்தம் விளங்குகிறது. பிரபந்தத்தின் கருத்துச் செறிவு, வைணவ குருபரம்பரையைச் சேர்ந்த அருளாளர்களின் வைபவங்கள் அடங்கியது இது. திருவரங்கக் கலம்பகம், திருவரங்கத்து […]

Read more

வெற்றி வித்துக்கள்

வெற்றி வித்துக்கள், நல்லி குப்புசாமி செட்டியார், நன்னூல் அகம், பக்.146, விலை ரூ.100. நூலின் தலைப்புக்கு ஏற்றவிதத்தில் படைக்கப்பட்டிருக்கும் அருமையான குறுங்கதைகளின் தொகுப்பு இந்நூல். தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம் குறித்து பல நூல்கள் வெளிவந்திருந்தாலும், அவை எல்லாம் சொல்லக் கூடிய விஷயங்களை நேரடியாகச் சொல்பவையாக இருக்கின்றன. அல்லது ஆலோசனை சொல்பவையாகவோ, அறிவுரை சொல்பவையாகவோதான் புரிந்து கொள்ளப்படுகின்றன. பிறரின் அறிவுரையை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலை குறைந்துவரும் இக்காலத்தில், அத்தகைய நூல்கள் ஏற்படுத்தும் தாக்கமும் குறைவாகவே இருக்கிறது. இந்நூல் அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, குறுங்கதைகள் மூலம் வாழ்க்கைக்குத் தேவையான […]

Read more

தாமஸ் பெய்னின் பொது அறிவு

தாமஸ் பெய்னின் பொது அறிவு, மொழியாக்கம் மருத்துவர் ஜீவானந்தம், மேன்மை வெளியீடு, பக். 64, விலை 50ரூ. அமெரிக்க சுதந்திர போராட்ட காலகட்டத்தில், சிந்தனையாளர் தாமஸ் பெய்னால், 1776ம் ஆண்டு இயற்றப்பட்டது இந்நுால். மன்னர் ஆட்சியில் எழுதப்பட்டது. தற்போதைய மக்களாட்சிக்கும் பொருந்துகிறது. இதை தமிழில் அழகாக மொழியாக்கம் செய்துள்ளார், மருத்துவர். ஜீவானந்தம். அமெரிக்காவில், 240 ஆண்டுகளுக்கு முன் இருந்த மன்னராட்சி முறை, அரசியல் சாசனம், காலனி ஆதிக்கம் போன்றவை குறித்து, எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இன்றைய மக்களாட்சிக்கும் இது பொருந்தும் என்பதே நிதர்சனம். அறிவுப்பூர்வமாக […]

Read more

கந்தரலங்காரம் மூலமும் உரையும்

கந்தரலங்காரம் மூலமும் உரையும், கவிஞர் பத்மதேவன், ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், பக். 120, விலை 120ரூ. கந்தன் என்ற சொல்லுக்கு பற்றுக்கோடானவன் என்பது பொருளாகும். கந்தன் என்றால் ஒன்று சேர்க்கப்பட்டவன். பல்வேறு மலர்களைக் கொண்டு, பூமாலை கட்டி அழகனுக்கு அணிவித்து அழகு செய்வது போல, முருகனின் பல செயல்களைக் கொண்டு செய்யுளால் அலங்காரம் செய்து அருணகிரிநாதரால் பாடப்பட்டது கந்தரலங்காரம். கந்தரலங்காரத்தில் முருகனுடைய அடி முதல், முடி வரை வருணிக்கப்பட்டுள்ளது. யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, யம பயம் நீங்குதல் போன்ற வாழ்வியல் செய்திகள் விளக்கப்பட்டுள்ளன. […]

Read more

கொ.மா.கோதண்டம் நாவல்கள்

கொ.மா.கோதண்டம் நாவல்கள், காவ்யா, பக். 588, விலை 600ரூ. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, ஓங்கிக் குரல் கொடுப்பவர் கொ.மா.கோதண்டம். முற்போக்கு எழுத்தாளரான இவர் கதைகள் ரஷ்ய, ஆங்கில, ஹிந்தி, தெலுங்கு, சிங்கள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆரண்ய காண்டம் என்ற இவரது குறிஞ்சிக் கதைகள் முதுகலை படிப்பிற்கு பாடமாக உள்ளது! கொ.மா.கோதண்டம் நாவல்கள் என்ற இந்த நுாலில் மூன்று நாவல்கள் இடம் பெற்றுள்ளன. அவை, ஏலச்சிகரம், குறிஞ்சாம் பூ, ஜன்ம பூமிகள். ஏலச்சிகரம் என்பது தமிழக ஏலத் தோட்டத் தொழிலாளர்கள் பற்றிய தமிழின் முதல் நாவல்! மலைப்பிரதேசத்தின் […]

Read more
1 2 3 4 5 8