வழிகாட்டும் விவேக சிந்தாமணி

வழிகாட்டும் விவேக சிந்தாமணி, நல்லி குப்புசாமி செட்டியார், ப்ரெயின் பேங்க், பக்.112, விலை ரூ. 100. விவேக சிந்தாமணி இரு பாகங்கள் கொண்டது. அதில் இடம்பெறும் செய்யுள்களின் எண்ணிக்கை 245. அதில் 98 செய்யுள்களைத் தேர்ந்தெடுத்து நூலாசிரியர் விளக்க உரை அளித்திருக்கிறார். “விவேகம்’ என்றால் நல்லது எது கெட்டது எதுவென்று பகுத்துணரும் அறிவு. “சிந்தாமணி’ என்றால் ரத்தினக்கல் – விலைமதிப்பற்றது என்று விளக்கமும் கூறுகிறார் நூலாசிரியர். “கூடா நட்பு’ , “அற்பரின் நட்பு கூடாது’, “வேண்டாம் நட்பு’, “நட்பின் உயர்வு’, “சான்றோர் நட்பு’- இவையெல்லாம் […]

Read more

வியாசர் அறம்

வியாசர் அறம், நல்லி குப்புசாமி செட்டியார், பிரெய்ன் பேங்க், விலைரூ.200. வியாசர் மகாபாரதம் சார்ந்த, 60 கதைகளைத் தொகுத்து, புதிய பார்வையில் முன்வைக்கும் நுால். கதை முகப்பில் சுருக்கமான முன்னோட்டம் கொடுத்து, நீதி நெறியைத் விளக்குவதோடு, மையக் கருத்துக்குப் பொருத்தமான ஒரு குறளும் உரையுடன் தரப்பட்டுள்ளது. கதைகளில் வரும் சாபங்கள், விமோசனங்கள், சூழ்ச்சிகள், துரோகங்கள், தந்திரங்களுக்கிடையில் இழையோடும் அறக்கருத்துகள், எளிய நடையில் தரப்பட்டுள்ளன. பழங்கதைகளாயினும், அவற்றினுாடே காணப்படும் நிர்வாக மேலாண்மை, அரசியல் நெறிகள், அறச் சீற்றங்கள் இன்றும் பொருந்துவது நோக்கத்தக்கது. வாழ்வில் சிலருக்கே, மதியும், […]

Read more

வியாசர் அறம்

வியாசர் அறம், நல்லி குப்புசாமி செட்டியார், பிரெய்ன்பேங்க், விலை 200ரூ. வாழ்க்கைக்குத் தேவையான நல்ல கருத்துகளை, அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் போலக் கொண்டு இருக்கும் மகாபாரதத்தில் இருந்து அறம் சார்ந்த சிறந்த செய்திகளைத் தாங்கியுள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை ருசிகரமாகப் படிக்கும் வகையில் தந்து இருக்கிறார், ஆசிரியர். மகாபாரதத்தில் வியாசர் கூறி இருக்கும் கதைகளில், 60 கதைகள் இந்த நூலில் இடம் பெற்று இருக்கின்றன. ஒவ்வொரு கதைக்கும் முகப்பு வாசகம் கொடுத்து இருப்பது, அந்தக் கதையைப் படிக்கத் தூண்டும் அம்சமாக அமைந்து […]

Read more

விதுர நீதியில் நிர்வாகம்

விதுர நீதியில் நிர்வாகம்,  நல்லி குப்புசாமி செட்டியார், ப்ரெய்ன் பேங்க் பதிப்பகம், பக்.400, விலை ரூ.325. ஸனாதன தர்மம் அல்லது அறத்தின் அடிப்படையில் அமைந்த வாழ்வே உயரியது என்பதை பல்வேறு சூத்திரங்கள் மூலம் எடுத்துரைத்தனர் நம் முன்னோர். இராமாயணமும், மகாபாரதமும் நமக்கு அறவழியை எடுத்துரைக்கின்றன. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் சிறப்படைய இவற்றைப் பின்பற்றி நடக்க வேண்டும். இந்த நூல்களில் கூறப்பட்டிருக்கும் அறிவுரைகளும் கருத்துகளும் காலத்தால் பழைமையான போதிலும் என்றைக்கும் பொருந்தும் என்பதே இதன் சிறப்பு. பழமொழிகளில் நிர்வாகம், நீதி நூல்களில் நிர்வாகம், ஆத்திசூடியில் நிர்வாகம், […]

Read more

வெற்றி வித்துக்கள்

வெற்றி வித்துக்கள், நல்லி குப்புசாமி செட்டியார், நன்னூல் அகம், பக்.146, விலை ரூ.100. நூலின் தலைப்புக்கு ஏற்றவிதத்தில் படைக்கப்பட்டிருக்கும் அருமையான குறுங்கதைகளின் தொகுப்பு இந்நூல். தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம் குறித்து பல நூல்கள் வெளிவந்திருந்தாலும், அவை எல்லாம் சொல்லக் கூடிய விஷயங்களை நேரடியாகச் சொல்பவையாக இருக்கின்றன. அல்லது ஆலோசனை சொல்பவையாகவோ, அறிவுரை சொல்பவையாகவோதான் புரிந்து கொள்ளப்படுகின்றன. பிறரின் அறிவுரையை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலை குறைந்துவரும் இக்காலத்தில், அத்தகைய நூல்கள் ஏற்படுத்தும் தாக்கமும் குறைவாகவே இருக்கிறது. இந்நூல் அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, குறுங்கதைகள் மூலம் வாழ்க்கைக்குத் தேவையான […]

Read more

ஹிதோபதேசத்தில் நிர்வாகம்

ஹிதோபதேசத்தில் நிர்வாகம், நல்லி குப்புசாமி செட்டியார், ப்ரெய்ன் பேங்க், பக்.160, விலை ரூ.100.  16/2, ஹிதோபதேசக் கதைகளுக்கு என்றுமே முதுமையில்லை. குழந்தைகளுக்கான புத்தகம் என்ற நிலையில் உள்ள அதனை நூலாசிரியர் நிர்வாகக் களத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார். மூலத்தில் உள்ளபடியே கதைகளைத் தருவதென்றால் வர்ணனை, உரையாடலுக்கு அதிகப் பக்கங்களாகும். நீதிகள், நியதிகள், சுலோகங்கள் கதைகளை விட நீளமானவை. எனவே கதைகளைச் சுருக்கி தாத்பர்யங்களை விரிவாகவும் நிர்வாகவியலோடு சம்பந்தப்படுத்தியும் இந்தப் படைப்பை நூலாசிரியர் தந்துள்ளார். 49 கதைச் சுருக்கங்கள் கொண்ட இந்த நூலில், துணிவில் இருக்கிறது வெற்றி; […]

Read more

வழிகாட்டும் கதைகள்

வழிகாட்டும் கதைகள், நல்லி குப்புசாமி செட்டியார், ப்ரெயின் பேங்க் வெளியீடு, பக். 224, விலை 150ரூ. சிறந்த தொழிலதிபரான இந்நூலாசிரியர் வாழ்வியல், வணிகவியல், நிர்வாகவியல் பற்றிய நூல்கள், மகா கவி பாரதியார், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் போன்ற மகான்களைப் பற்றிய நூல்கள் என நற்சிந்தனைகளைத் தூண்டும் 50-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். அந்த வகையில் இந்நூல் இன்றைய தலைமுறையினரை நல்வழிப்படுத்தும் 100 சிறுகதைகளைத் தொகுத்துள்ளார். குறிப்பாக, கடவுள் நம்பிக்கை, முயற்சி, புத்திசாலித்தனம், கருணை, மன்னிப்பு, ஞானம்… என்று நற்சிந்தனைகளைத் தூண்டும் சிறு […]

Read more

அர்த்த சாஸ்திர அறிவுரைகள்

அர்த்த சாஸ்திர அறிவுரைகள், நல்லி குப்புசாமி செட்டியார், பிரெய்ன் பேங்க், பக்.192, விலை 150ரூ. நீதி நூல்களில் இருந்து பெற வேண்டிய வாழ்வியல், நிர்வாகவியல் பாடங்களை தெளிவாக விளக்கியதோடு, தமது அனுபவத்தையும் கலந்து, அர்த்த சாஸ்திரம் நூல் குறித்து எளிமையான விளக்கத்தை, இந்த நூலில் தந்திருக்கிறார் நூலாசிரியர். கவுடில்யர் என்ற சாணக்கியரை அறிந்திராதவர் யாரும் இருக்க முடியாது. புத்திசாலித்தனத்திற்கும், ராஜ தந்திரத்திற்கும், சாணக்கியத்தனம் என்ற பெயர் இன்றளவும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் சாணக்கியரின் வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லியதோடு, என்றைக்கும் பொருந்திப்போகும் அவரது […]

Read more

அர்த்த சாஸ்திர அறிவுரைகள்

அர்த்த சாஸ்திர அறிவுரைகள், நல்லி குப்புசாமி செட்டியார், பிரெய்ன் பேங்க் வெளியீடு, சென்னை, விலை 150ரூ. மன்னனின் பூந்தோட்டம் ஐ.சி.எஸ். அதிகாரியாக இருந்த ஏ.எஸ்.பி. அய்யர் ஆங்கிலத்தில் எழுதி த.நா. சேனாபதியின் தமிழாக்கத்தில் வெளிவந்தது சாணக்கியரும் சந்திரகுப்தனும் என்ற அரிய நூல். முதல் பதிப்பு வெளியாகி முப்பத்தோரு ஆண்டுகளுக்குப் பிறகு 1991 இல்தான் அந்த நூல் இரண்டாம் பதிப்பைக் கண்டிருக்கிறது. ஆங்கில மூலத்தையும் தமிழாக்கத்தையும் பலமுறை படித்து அதில் மனம்தோய்ந்த பட்டுத்தொழில் அதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் நூலின் மீதான […]

Read more

பாரதி திருநாள்

பாரதி திருநாள், டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம், 2, மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி.நகர், சென்னை 35, விலை 100ரூ. மகாகவி பாரதிபாரதி பற்றிய அபூர்வ நூல். மகாகவி பாரதியார் மறைந்தபோது, 13/9/1921 தேதியிட்ட சுதேசமித்ரனில் வெளியான செய்தி,அப்போது தலைவர்கள் வெளியிட்ட அனுதாபச் செய்திகள், நடைபெற்ற அனுதாப கூட்ட விவரங்கள் முதலியவற்றை சிரமப்பட்டு சேகரித்து வழங்கியுள்ளார் டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார்.   —-   சித்தர்களின் ஞான வழி, சி.எஸ்.தேவநாதன், குறிஞ்சி, 15/21. டீச்சர்ஸ் கில்டு காலனி, இரண்டாவது […]

Read more
1 2