மனித இயல்பின் புதிரை நீக்குதல் வழி கூறும் மூளை

மனித இயல்பின் புதிரை நீக்குதல் வழி கூறும் மூளை, டாக்டர் வி.எஸ்.ராமச்சந்திரன், தமிழில் பேரா.கு.வி. கிருஷ்ணமூர்த்தி, பாரதி புத்தகாலயம், விலை 450ரூ.

மனித மனத்தை அல்லது இயல்பை புரிந்துகொள்வது மிகவும் கடினமானது. யாருடைய நடத்தையும், மனப்பாங்கும் அறுதியிட்டு உறுதியாக சொல்லப்படுவதற்கில்லை.

புரிந்தும், அறிந்தும் கொள்ளப்படாத விஷயங்களில் மனித இயல்பு பிரதானமாகிவிட்டது. அதற்கான காரண காரியங்களை ஆராயப்புகுந்திருக்கிறார் டாக்டர் ராமச்சந்திரன். அறிவியல் நூல்தான். ஆனால் அனைவராலும் புரிந்துகொள்ளக்கூடியதாகவும், உணரக்கூடிய விதத்திலும் இருக்கிறது.

இதை மொழிபெயர்ப்பது மலையைப் பிளக்கிற காரியம். மனமுவந்து செய்த அக்கறையில் கிருஷ்ணமூர்த்தியின் பணி சிறக்கிறது.

நன்றி: குங்குமம், 24/3/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *